மேலும் அறிய

கொரோனா விதிமுறை.. மதுரை பூ மார்கெட்டை தற்காலிகமாக மூட உத்தரவிட்ட ஆட்சியர்!

உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத காரணத்தினால் பூ மார்கெட் சந்தையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார்.

மதுரை மாவட்டத்தில் கோவிட்-19 தொற்று பரவாமல் இருக்க பொது மக்கள் நலன் கருதி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஆடிக் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள திருக்கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல் 8-ஆம் தேதி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கமான பூஜைகள் மட்டும் கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மீனாட்சி சுந்தேரஸ்வரர் திருக்கோவில்,  திருப்பரங்குன்றம் முருகன் கோவில், சுந்தராஜ பெருமாள் திருக்கோயில், பழமுதிர்சோலை முருகன் திருக்கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது.


கொரோனா விதிமுறை.. மதுரை பூ மார்கெட்டை தற்காலிகமாக மூட உத்தரவிட்ட ஆட்சியர்!

அதே போல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் வெளி வீதிகள், மாசி வீதிகள், சித்திரை வீதிகள், கோரியப்பாளையம், அரசரடி, காளவாசல் பைபாஸ் ரோடு, காமராஜர் சாலை ஆகிய இடங்களில் எதிர்வரும் திருவிழா நாட்களில் ஜவுளிக்கடைகள், பேரங்காடிகள் மற்றும் இதர வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூட்டம் கூட வாய்ப்புள்ளது. எனவே அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும். முகக்கவசம் அணியாதவர்களை கடைக்குள் அனுமதிக்க கூடாது. மேற்படி அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுத்து வணிக நிறுவனம் மூடி முத்திரையிடப்படும் என மாவட்ட நிர்வாகம்  எச்சரித்துள்ளது.


கொரோனா விதிமுறை.. மதுரை பூ மார்கெட்டை தற்காலிகமாக மூட உத்தரவிட்ட ஆட்சியர்!

இந்நிலையில் கொரோனோ பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத மதுரை மாட்டுதாவணி மலர் சந்தையை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மலர் சந்தை வியாபாரிகள் கொரோனோ பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மாற்று  இடத்தில் செயல்பட அனுமதி வழங்க கோரி ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து  நாளை முதல் மாட்டுதாவனி பேருந்து நிலையம் அருகே உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் மலர் சந்தை இடமாற்றம் செய்யப்பட்டு செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அறிவித்துள்ளார். ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தையில் இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சமூக இடைவெளி இன்றியும் முக கவசங்கள் அணியாமலும் குவிந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.

கொரோனா விதிமுறை.. மதுரை பூ மார்கெட்டை தற்காலிகமாக மூட உத்தரவிட்ட ஆட்சியர்!
இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறிய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  வியாபாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத காரணத்தினால் சந்தையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார். கடைகளை அடைக்க காவல்துறையினர் பூ வியாபாரிகளிடம் கூறிய நிலையில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

கொரோனா விதிமுறை.. மதுரை பூ மார்கெட்டை தற்காலிகமாக மூட உத்தரவிட்ட ஆட்சியர்!
இதனை தொடர்ந்து மலர் சந்தையில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு உடனடியாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.
 
 
 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget