மேலும் அறிய

திருவாரூரில் 103 பேருக்கு கொரோனா தொற்று

திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,176 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை கோயமுத்தூர் ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லாமல் வருகிற 28-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதி வேகமாக குறைந்து வருகிறது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 103 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மற்றும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, மன்னார்குடி தலைமை அரசு மருத்துவமனை, நன்னிலம் அரசு மருத்துவமனை, உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டு மொத்தமாக மாவட்டம் முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 936 நபர்கள் மட்டுமே அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவாரூரில் 103 பேருக்கு கொரோனா தொற்று
மேலும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரே நாளில் நாளில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து இன்று வரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 238 நபர்கள் சிகிச்சையிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் இவர்கள் அனைவரும் வீடுகளுக்கு சென்ற பின்னரும் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.
 
ஒட்டுமொத்தமாக தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,176 நபர்களாக உயர்ந்துள்ளது.  மேலும் இவர்களில் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 34,933 நபர்கள் ஆகவும் உயர்ந்துள்ளது. ஆகமொத்தம் தற்போது அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 936 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள காயத்திரி கிருஷ்ணன் அரசு அறிவித்துள்ள ஊரடங்கினை பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், அரசின் உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் பல அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி போடும் பணியினை நேரடியாக ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மருத்துவமனையில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Embed widget