மேலும் அறிய

Corona Vaccination Booster | சென்னையில் தொடங்கியது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பரிசோதனை..!

கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிப்பதற்காக பூஸ்டர் தடுப்பூசி பரிசோதனை சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட பிறகு, அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயத்தில், கொரோனா வைரசுக்கு எதிராக பல நாடுகளும் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளனர். அவற்றை அவரவர் நாட்டு மக்களுக்கு செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு தடுப்பூசிகளும் கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக மருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிப்பதற்காக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அதாவது மூன்றாவது தடுப்பூசி செலுத்தவும் மருத்துவத்துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.


Corona Vaccination Booster | சென்னையில் தொடங்கியது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பரிசோதனை..!

இதனடிப்படையில். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியிஜ் மூன்றாவது டோஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கியுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு தவணை டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் இந்த பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர். தன்னார்வலர்களாக பங்கேற்கும் அவர்களுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசியின் செயல்திறன் அளவு குறைந்தது ஒன்பது மாதம் நீடிக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிப்பதற்காக இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி திறன் எந்தளவிற்கு செயல்படுகிறது என்பதை மருத்துவர்கள் கண்காணிக்க உள்ளனர்.

இந்த பரிசோதனையில் பங்கேற்றுள்ள தன்னார்வலர்கள் ஏற்கனவே தடுப்பூசியின் இரண்டாவது டோசை மார்ச் மாதத்திலே செலுத்தியவர்கள் ஆவர். இவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு ஆறு மாதங்கள் ஆகிவிட்டதால், தற்போது அவர்களுக்கு பூஸ்டர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.


Corona Vaccination Booster | சென்னையில் தொடங்கியது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பரிசோதனை..!

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பலருக்கும் ஆண்ட்டிபாடிகள் நீடிக்கும்போது, சிலருக்கு தடுப்பூசியின் செயல்திறன் குறையலாம் என்றும், ஆன்டிபாடிகள் 6 முதல் 9 மாதங்களுக்கு பிறகு நீடிக்காது என்றும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை கொண்டு இந்த பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தங்களது இரண்டாம் டோசை செலுத்திக்கொள்ள முப்பது நாட்கள் இடைவெளி மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தங்களது அடுத்த டோசை செலுத்துவதற்கு 90 நாட்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. கொரோனா வைரசில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கு தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்தவேண்டும் என்று அரசும், மருத்துவத்துறையினரும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும். இந்தியாவில் சிலர் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு பதிலாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியும் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Assembly: ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான மசோதா நிறைவேற்றம்

தலைப்பு செய்திகள்

CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Embed widget