மேலும் அறிய

கோவை : ’திரும்பிப்பார்க்க வைக்கும் நஞ்சுண்டாபுரம்’ என்று பரவிய வாட்சப் வதந்தி : விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம். பொய்யான தகவல் பரப்பிய விஷமிகள் மீது மேல் நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் 680 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா மூன்றாவது அலை கோவையில் தொடங்குகிறது என்ற வதந்தி வாட்ஸ் ஆப்பில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வந்தாலும், தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பில் முதலிடத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில் ”இந்தியாவே திரும்பிப் பார்க்க வைக்க போகும் கோவை - நஞ்சுண்டாபுரம்” எனத் தொடங்கும் ஒரு வதந்தி, கோவையில் உள்ள வாட்ஸ் ஆப் குழுக்களில் கடந்த இரண்டு நாட்களாக காட்டுத்தீயாக பரவி வருகிறது. அச்செய்தி, கடந்த ஜீன் 9-ஆம் தேதி வரை 965 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 680 பேருக்கு பாசிட்டிவ் வந்துள்ளது. இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் கொரோனா மூன்றாவது அலையை சேர்ந்தது. கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் குழந்தைகளுக்காக ஆக்சிஜன் வசதி கொண்ட 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என நீள்கிறது. இறுதியாக பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம். நஞ்சுண்டாபுரம், இராமநாதபுரம் பகுதிகளை கடக்க வேண்டாம் என்ற அறிவுரையுடன் முடிவடைகிறது. அதிலும் உச்சமாக, செய்தித்தாள்களில் சொல்லப்படும் தொற்று பாதிப்புகள் எல்லாம் பொய், இதுதான் உண்மை என்ற மிகப்பெரிய பொய்யை சொல்கிறது.


கோவை : ’திரும்பிப்பார்க்க வைக்கும் நஞ்சுண்டாபுரம்’ என்று பரவிய வாட்சப் வதந்தி : விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

இந்த செய்தியை உண்மை என நம்பி பலரும் அதிகளவில் பகிர்ந்து வந்தனர். பலரும் இச்செய்தி குறித்து பரவலாக விசாரிக்க தொடங்கினர். இந்நிலையில் இந்த தகவல்களை மறுத்துள்ள கோவை மாநகராட்சி நிர்வாகம், பொய்யான தகவல் என தெரிவித்துள்ளது. மேலும் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கோவை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நஞ்சுண்டாபுரத்தில் அதிகமான அளவில் உருமாறிய கொரோனா பாதிப்பு பொதுமக்களிடையே அதிகளவில் பரவி உள்ளதாகவும், அதனால் அவ்விடத்தில் பொதுமக்கள் பலர் இறந்துள்ளதாக சில விஷமிகள் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். நஞ்சுண்டாபுரத்தில் நோய் தாக்கத்தை கண்டறிய இதுவரையில் மொத்தம் 650 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் கடந்த பத்து நாட்களில் 56 நபர்களுக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை : ’திரும்பிப்பார்க்க வைக்கும் நஞ்சுண்டாபுரம்’ என்று பரவிய வாட்சப் வதந்தி : விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

அப்பகுதி உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் இருப்பவர்களை கண்டறிந்து, தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் உதவிகள் உடனுக்குடன் செய்யப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் இதுபோன்ற பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பொய்யான தகவல் பரப்பிய விஷமிகள் மீது மேல் நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget