Tamilnadu Corona Update: தமிழ்நாட்டில் 1,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 38 பேர் உயிரிழப்பு!
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நேற்றைவிட இன்று சற்றே குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வந்தது. சில தினங்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்று பாதிப்பு குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 949 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாகக் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. 1,56,635 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,949 -ஆக உள்ளது.
#TNCoronaUpdates
TamilNadu Statistics :- [04/08/2021]#TNCorona #TamilNadu #COVID19 pic.twitter.com/kjrCaTKMXK— TNCoronaUpdates (@TNCoronaUpdate) August 4, 2021
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 67 ஆயிரத்து 401 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 38 ஆயிரத்து 727 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 189 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 203 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 189 ஆக உள்ளது.
#TamilNadu | #COVID19 | 04 Aug
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) August 4, 2021
District Wise Data...#TNCoronaUpdates #coronavirus #TN pic.twitter.com/NIyyBJMhyJ
கோவை 226, ஈரோடு 154, தஞ்சை 110, சேலம் 83, செங்கல்பட்டு 114, கடலூர் 61, திருச்சி 77, திருவள்ளூர் 99, நாமக்கல் 53, காஞ்சிபுரம் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு சற்றே தனிந்துள்ளது.
கொரோனாவால் மேலும் 38 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,197 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 26 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 12 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 6 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று ஒருவர் உயிரிழந்தார். சென்னையில் மட்டும் மொத்தம் 8323 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக திருவள்ளூரில் 5 பேரும், திருவாரூர் மற்றும் கோவையில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர். 16 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20,217 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,047 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,11,076 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
12 வயதிற்குட்பட்ட 120 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 39272 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 24327 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 7503 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

