மேலும் அறிய

உஷாரா இருங்க... கேன்சர் கூட வரலாம்: உணவு உண்ணும் நேரம் முக்கியம்: ஆய்வு சொல்வது என்ன?

காக்கா மாதிரி குளித்துவிட்டு கோழி மாதிரி வேகமாகச் சாப்பிட்டுவிட்டு ஆந்தை மாதிரி விழித்திருந்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் நவநாகரிக?! மனிதர்கள் வாழ்வியல் சார்ந்த நோய்கள் பலவற்றை வரவேற்று அவதிப்படுகின்றனர்.

காக்கா மாதிரி குளித்துவிட்டு கோழி மாதிரி வேகமாகச் சாப்பிட்டுவிட்டு ஆந்தை மாதிரி விழித்திருந்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் நவநாகரிக?! மனிதர்கள் வாழ்வியல் சார்ந்த நோய்கள் பலவற்றை வரவேற்று அவதிப்படுகின்றனர்.

அப்படி வாழ்வியல் சார்ந்த நோய்கள் உண்டாக முறையான உணவுப் பழக்கவழக்கம் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. காலையில் சாப்பிடுவதே இல்லை. மதிய சாப்பாட்டிற்குள் 10 டீ, காபி சாப்பிடுவது மதியம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடை என உண்பது அப்புறம் இரவில் தூங்கப்போகும் முன்னர் ஏதோ சாப்பிடுவது இப்படி பழக்கவழக்கம் இருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு பல நூறு மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. உங்களின் உணவுப் பழக்கவழக்கம் இப்படி இருந்தால் நீங்கள் இதை முதலில் படிக்க வேண்டியது அவசியம்.

இப்படிச் சாப்பிடாதீர்கள்:
பின்னிரவில் சாப்பிட நேர்வது இயல்பே. என்றோ ஒருநாள் தவிர்க்க முடியாமல் அப்படி நேர்ந்தால் பரவாயில்லை. ஆனால் எல்லா நாளும் அவ்வாறாக பின்னிரவில் சாப்பிட்டுவிட்டு ஜீரணத்திற்கு சற்றும் நேரம் கொடுக்காமல் தூங்கும் பழக்கம் கொண்டிருந்தால் அதனை உடனே நிறுத்துங்கள். காரணம் அவ்வாறான உணவுப் பழக்கம் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்பதுதான். ஆண்களுக்கு நுரையீரல், விரை, குடல், வயிற்றுப் புற்றுநோயும் பெண்களுக்கு மார்பகம், செர்விக்கல், குடல் மற்றும் தைராய்டு புற்றுநோயும் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் மனித உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருக்கும் இரண்டாம் பெரிய காரணம் புற்றுநோய் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால் உணவை அளவாக நேரமறிந்து காலமறிந்து தரமறிந்து உண்ணுதல் அவசியம். உணவு பசி போக்க மட்டுமல்ல உயிர் வளர்க்க. நாவின் சுவையைவிட உடலின் ஆரோக்கியத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஆய்வறிக்கை சொல்வதென்ன?
உணவுப் பழக்கம் மற்றும் நோய்கள் தொடர்பாக பார்சிலோனா இன்ஸ்டிட்யூட் ஆஃப் குளோபல் ஹெல்த் என்ற ஆராய்ச்சி மையம் தீவிர ஆய்வு மேற்கொண்டது. குறிப்பாக எந்த மாதிரியான உணவை உண்பதால் புற்றுநோய் ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் என்ன மாதிரியான உணவுப்பழக்கவழக்கம் புற்றுநோயை உண்டாக்கும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின்படி இரவு 9 மணிக்குப் பின்னர் உணவை உண்டுவிட்டு அதிலிருந்து 2 மணி நேரம் கூட செரிமானத்திற்கு கொடுக்காமல் உறங்கினால் அவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 25% அதிகமாக உள்ளது.

நம் உடலில் சர்கேடியன் பயலாஜிக்கல் க்ளாக் என்று ஒன்று உள்ளது. அது நம் உடலில் ஸ்லீப் வேக் சைக்கிளை நிர்வகிக்கிறது. இதை சர்கேடியன் ரிதம் எனக் கூறுகிறார்கள். இது சீராக இயங்கிக் கொண்டிருக்கும். அதே வேளையில் நாம் வாழ்வியல் பழக்கவழக்கங்களை தாறுமாறாக மாற்றும்போது இந்த சர்கேடியன் க்ளாக் பாதிக்கப்படுகிறது. 9 மணிக்குப் பின்னர் உடல் இயல்பாகவே உறக்கத்துக்கு தயாராகும். ஆனால் அதன் பின்னர் நாம் உடலுக்கு உணவு கொடுத்தால் அது சுறுசுறுபாகிவிடும். இதனால் சர்கேடியன் ரிதம் பாதிக்கப்படுகிறது. 

இந்த ஆய்வுக்காக 872 ஆண்களும் 1372 பெண்களும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் யாரும் இரவுப் பணிக்கு செல்லாதவர்கள். இவர்கள் அனைவரிடமும் உணவு, தூக்கம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. இரவு உணவு தூக்கம் சீராக இருப்பவர்களுக்கு 20% புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவு. ஆனால் இரவில் லேட்டாக உணவருந்துபவர்களுக்கு 25% நோய் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், 2007ல் உலக சுகாதார நிறுவனமும் ஐஏஆர்சியும் இணைந்து நடத்திய ஆய்வில் இரவுப் பணியும் சர்கேடிய ரிதமை பாதிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget