காலையில் உடலுக்கு குளிர்ச்சி தந்து மனதுக்கு புத்தணர்ச்சி தரும் 5 யோகா பயிற்சிகள்!
ஆனால் கோடை வெயிலை சமாளிக்க உடலுக்கு குளிர்ச்சி தந்து மனதுக்கு புத்தணர்ச்சி தரும் யோகாசனங்கள் இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
கோடை வந்துவிட்டால் வெப்பத்திலிருந்து தப்பிக்க நாம் குளிர்ச்சியான உணவுகள், காற்றோட்டமான ஆடைகள் டிப்ஸ் பற்றியே அதிகம் கடந்து வருகிறோம். ஆனால் கோடை வெயிலை சமாளிக்க உடலுக்கு குளிர்ச்சி தந்து மனதுக்கு புத்தணர்ச்சி தரும் யோகாசனங்கள் இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
அது பற்றிய தொகுப்பு இது:
சுவாசத்தை குளிர்வித்தல் ( சீத்தாலி ப்ராணயாமா)
சுவாசத்தை குளிர்விக்க யோகா பயிற்சி உண்டு. அது ஒட்டுமொத்த உடலுக்கும் குளிர்ச்சியைக் கடத்தும். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்றால் வாய்வழியாக சுவாசித்து மூக்கு வழியாக சுவாசத்தை வெளியிட வேண்டும். இதன்மூலம் உடலின் உஷ்ணத்தைக் குறைக்கலாம். கூடவே மனதும் அமைதி பெறும். உடலில் அதிக உஷ்ணம் சமப்படுத்தும். அதனால் குடலியக்கம் நன்றாக இயங்கும்.
பச்சிமோத்தாசனா (Paschimottanasana):
இந்த ஆசனம் செய்வதால் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் நன்றாக வளையும். இது ஒரு சிறந்த வலிநிவாரணி ஆசனம் ஆகும். இது உடலில் சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
இதைச் செய்வதால் தலைவலி வராமல் பார்த்துக்கொள்கிறது. ஜீரண கோளாறுகளை சரிசெய்கிறது. தோள் மற்றும் கழுத்து பகுதி வலிகளை குணப்படுத்துகிறது. அடிவயிற்று கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மன ஆரோக்கியத்தை கொடுக்கிறது. கால்களை வலிமைப்படுத்துகிறது.
பச்சிமோத்தாசனா செய்முறை:
முதல் நேராக கால்களை நீட்டி அமர்ந்து கொள்ளவும். அதன் பின் கைகளை நேராக இருக்குமாறு மேலே தூக்கி கொண்டு கைகளை வைத்து அப்படியே நம் கால்களை தொட முயற்சிக்க வேண்டும். முதலில் செய்யும் போது கடினமாக தான் இருக்கும் தொடர்ந்து செய்து வந்தால் கால்களை எளிதாக தொட்டு விட முடியும். கால்களை பிடித்துக்கொண்டே 20 முதல் 30 நிமிடம் வரை இருக்க வேண்டும். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பயன்களை பெறலாம்.
வாரியர் 2: வீரபத்திராசனா 2
வீரபத்திராசனத்தை தினமும் செய்யத் தொடங்கினால் தொடை, குதிக்கால், கைகள், முழங்கால், இடுப்பு, முதுகு என அனைத்து பாகங்களுக்கும் சீராக ரத்த ஓட்டம் பரவி அந்தப் பகுதிகள் வலுபெறும் முதுகெலும்பை வலுப்படுத்துவதால், குழந்தைகள் தொடர்சியாக சோர்வில்லாமல் உட்கார்ந்த நிலையில் படிக்கவும், எழுதவும் இது ஒரு சிறந்த ஆசனமாகும். மேலும் இந்த ஆசனம் தோள்களில் இருக்கும் அழுத்தத்தை குறைக்க உதவும். மொத்தத்தில் இந்த ஆசனம் மனதையும் உடலையும் தளர்த்தி, அமைதி, தைரியம், மற்றும் நேர்மறை எண்ணங்கள் பெருக உதவுகிறது.
த்ரிகோனாசனா
த்ரிகோணசனா இது உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் வலிமையை கொடுக்க கூடியது. இது கை மற்றும் கால்களில் உள்ள வலிகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. த்ரிகோனாசனா செய்வதால், முட்டி வலிகளை போக்குகிறது. கை மற்றும் முழங்கைக்கு பலத்தை கொடுக்கிறது. பின் முதுகு வலியை சரிசெய்கிறது.முதுகில் உள்ள நரம்புகளை தூண்ட உதவுகிறது. குடல் பகுதிக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. கழுத்து சுழுக்குக்கு நல்ல உடற்பயிற்சியாக இருக்கும்.
அதோமுக சுவானாசனம்:
அதோமுகம் என்றால் 'கீழ்நோக்கும் முகம்' என்றும், சுவானம் என்றால் 'நாய்' என்றும் பொருள். நாய் சோம்பலை முறிப்பதற்காக முதுகை நன்றாக நீட்டுவது போல் இவ்வாசனம் இருப்பதால் இப்பெயர் பெற்றது. இந்த ஆசனம் முதுகுப் பகுதியின் பிடிப்புகள், சுளுக்குகள் நீங்க உதவுகிறது. தொடைகளின் பின்பகுதி, முழங்கால், கணுக்கால் பகுதி மற்றும் முதுகு தண்டுவடப் பகுதியை வன்மையடையச் செய்கிறது. இரு கை மற்றும் கால்களுக்கு உறுதித் தன்மையை அளிக்கிறது. இவ்வாசனம் தோள்பட் டை வலியைப் போக்கி வலுப்படுத்தும் சிறந்த ஆசனம் ஆகும். தலைப்பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலுக்கு சுறுசுறுப்பை அளிக்கிறது.வயிற்றுப் பகுதியில் கொழுப்பு படிவதால் ஏற்படும் தொப்பையை குறைக்க உதவிகிறது.கழுத்து எலும்புகளை உறுதியடையச் செய்கிறது. இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் நோய்களை சரிசெய்ய உதவிகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )