மேலும் அறிய

Yashika Aanand : யாஷிகா ஆனந்த் கார் விபத்து வழக்கு... மீண்டும் ஜூலை மாதம் ஆஜராக உத்தரவு!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரது அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் யாஷிகா

கார் விபத்து வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த் இன்று ஆஜரான நிலையில்,  ஜூலை மாதம் மீண்டும் அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

கோலிவுட் சினிமாவில் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டுக்குத்து,  நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த்,  2018ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரது அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில்,சென்ற 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது பள்ளித்தோழி வள்ளிசெட்டி பவனி (28) உள்ளிட்ட மூன்று நண்பர்களுடன் சேர்ந்து அவுட்டிங் சென்று விட்டு சென்னை திரும்பியபோது யாஷிகா சென்ற கார் விபத்தில் சிக்கி, அவரது தோழி வள்ளி பவனிசெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஜூலை மாதம் 2021, நடிகை யாஷிகா ஆனந்த், அவரது தோழி வள்ளிசெட்டி பவனி, ஆண் நண்பர்கள் சையத் (31), ஆமீர் (32) ஆகியோர் சென்னையில் இருந்து புதுச்சேரி சென்றனர். அங்கிருந்து நள்ளிரவு 12 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மீண்டும் இவர்கள் சென்னை திரும்பி கொண்டிருந்தனர். காரை நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த நிலையில், மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடத்தில் வந்தபோது கார் நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி, நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வள்ளிசெட்டி பவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மாமல்லபுரம் காவல் துறையினருக்கு அளித்த தகவலை அடுத்து, படுகாயம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட 3 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

யாஷிகா ஆனந்திற்கு முதுகுத்தண்டில் தீவிர பாதிப்பு ஏற்பட்டு நீண்ட காலமாக சிகிச்சைப் பெற்றார். தற்போது முழுமையாக மீண்டு மீண்டும் படங்கள், சமூக வலைதளங்கள் என யாஷிகா ஆக்டிவ்வாக செயல்பட்டுவருகிறார்.

யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்ததாகவும், அவரது தோழி பவானி வள்ளி செட்டி சீட் பெல்ட் அணியாததால், கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்தபோது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் யாஷிகாவின் வாக்குமூலத்தில் தகவல்கள் வெளியாகின.

இச்சூழலில் மாமல்லபுரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை  அடுத்து, செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த இந்த வழக்கு விசாரணைக்காக சென்ற மார்ச் 21ஆம் தேதி நேரில் ஆஜராக யாஷிகாவுக்கு  உத்தரவிட்டிருந்த நிலையில், யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜராகாததைத் தொடர்ந்து, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 

இதனையடுத்து கடந்த மாதம் மார்ச் 25ஆம் தேதி செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் யாஷிகா ஆஜரானார்.

தொடர்ந்து ஏப்ர்.25ஆம் தேதியான இன்று யாஷிகா ஆஜராக நீதிபதி மேவிஸ் தீஸ் தீபி,ஆ சுந்தரவதனா உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், விசாரணைக்குப் பிறகு மீண்டும் வரும் ஜூலை 27ஆம் தேதி ஆஜராகுமாறு யாஷிகாவுக்கு செஙகல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
IND Vs NZ ODI: இந்த ஃபர்னீட்சராச்சும் மிஞ்சுமா? இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்றிடாத நியூ., கில் தொடர்வாரா?
IND Vs NZ ODI: இந்த ஃபர்னீட்சராச்சும் மிஞ்சுமா? இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்றிடாத நியூ., கில் தொடர்வாரா?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Embed widget