மேலும் அறிய

மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?

CBSE Scholarships: சிபிஎஸ்இ கல்வி உதவித்தொகை திட்டங்கள் 2026: தகுதி, தேர்வு முறை, உதவித்தொகை- முழு விவரம்!

2026-ம் ஆண்டிற்கான 'சிபிஎஸ்இ கல்வி உதவித்தொகை' திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு என்ன தகுதி? எவ்வளவு உதவித் தொகை? விண்ணப்பிப்பது எப்படி? கீழே விரிவாகக் காணலாம். 

பள்ளிக் கல்வியை முடித்து உயர் கல்வியைத் தொடர நினைக்கும் மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், பல்வேறு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி ஆதரவுத் திட்டங்களைச் (CBSE Scholarships and Education Support) செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், 2026-ம் ஆண்டிற்கான 'சிபிஎஸ்இ கல்வி உதவித்தொகை' திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, அவர்களின் மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பிற்கான கல்விச் செலவுகளை ஈடுகட்ட மாதாந்திர மற்றும் வருடாந்திர அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை திட்டங்களில் பயன்பெற மாணவர்களுக்கான தகுதிகள் என்ன? தேர்வு முறை எப்படி இருக்கும்? எவ்வளவு உதவித்தொகை கிடைக்கும்? அதன் கால அளவு என்ன? என்பது குறித்த முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.

  1. சிபிஎஸ்இ ஒற்றைப் பெண் குழந்தை உதவித்தொகை (CBSE Single Girl Child Scholarship)


ஒரே ஒரு பெண் குழந்தையை மட்டும் கொண்ட பெற்றோருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

  • தகுதிகள்: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 11 மற்றும் 12-ம் வகுப்புகளை சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளிலேயே தொடர வேண்டும். அந்தப் பள்ளியின் கல்விக் கட்டணம் மாதம் ரூ.1,500-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • தேர்வு முறை : 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • உதவித்தொகை: தேர்ந்தெடுக்கப்படும் மாணவிகளுக்கு மாதம் ரூ.500 வீதம், ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
  • கால அளவு: இந்த உதவித்தொகை 11 மற்றும் 12-ம் வகுப்பு என இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும். (11-ம் வகுப்பில் 50% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டுக்கு உதவித்தொகை புதுப்பிக்கப்படும்).
  1. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவித்தொகை (Central Sector Scheme of Scholarship - CSSS)


பொருளாதாரத்தில் பின்தங்கிய, அதேசமயம் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களின் உயர்கல்விக்கு உதவுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

  • தகுதிகள்: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 80 பெர்சன்டைல் அல்லது அதற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், அவர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் வழக்கமான இளங்கலை அல்லது முதுகலை படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும்.
  • தேர்வு முறை: 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் குடும்ப வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • உதவித்தொகையின் அளவு: இளங்கலை படிப்பின் முதல் மூன்று ஆண்டுகளுக்கு, வருடத்திற்கு ரூ.12,000 வழங்கப்படும். தொழில்முறை அல்லது ஒருங்கிணைந்த படிப்புகளில் 4 மற்றும் 5-ம் ஆண்டுகள் படிக்கும் மாணவர்களுக்கு வருடத்திற்கு ரூ.20,000 வீதம் வழங்கப்படும்.
  • கால அளவு: இந்தப் படிப்புகளுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை உதவித்தொகை பெறலாம்.
  1. எஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கான சிபிஎஸ்இ உதவித்தொகை

பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தகுதி அடிப்படையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

  • தகுதிகள்: சிபிஎஸ்இ 10 அல்லது 12-ம் வகுப்பு தேர்வுகளில் குறைந்தபட்சம் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்ற எஸ்சி/எஸ்டி மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
  • தேர்வு முறை : இடஒதுக்கீடு விதிமுறைகள் மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஒரு வகுப்பிற்கு தலா 50 மாணவர்கள் (33 SC, 17 ST) வீதம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • உதவித்தொகை, கால அளவு: தேர்வாகும் மாணவர்களுக்கு அவர்களின் உயர்கல்விச் செலவுகளை ஈடுகட்ட ஆண்டுக்கு ரூ.12,000 வீதம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in மூலமாகவோ அல்லது தேசிய உதவித்தொகை இணையதளம் வாயிலாகவோ ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும்போது மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றைச் சரியாகச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! பாலுடன் சாக்லேட் ஹெல்த் மிக்ஸ் வழங்கும் புதுச்சேரி அரசு!
இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! பாலுடன் சாக்லேட் ஹெல்த் மிக்ஸ் வழங்கும் புதுச்சேரி அரசு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
Embed widget