மேலும் அறிய

Vairamuthu: "இந்தி மொழியின் மீது வெறுப்பு இல்லை..அச்சம் இருக்கிறது" : கவிப்பேரரசு வைரமுத்து காட்டம்..!

Hindi Imposition : வடமொழி கலந்தபொழுது எல்லாம் தமிழ் சிதைந்து இருக்கிறது என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Tamil Language : ஒருவருக்கு 3-வது மொழி கற்றுக்கொள்ளவேண்டியது என்பது சூழலால் வருகிறது. அதனை திணிப்பாக மாற்றக்கூடாது என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முழுவதும் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தலைநகர் சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், குழந்தைகளுக்கு அவர் எழுதிய திருக்குறள் தொடர்பாக போட்டிகள் என இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே சென்னையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவிப்பேரரசு வைரமுத்து பின் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, “ஆண்டுக்கு  ஆண்டு திருவள்ளூவர் திருநாளுக்கு தமிழர் கூட்டம் அவரின் பெருமையும், செல்வாக்கும் ஓங்குவதை காட்டுகிறது. திருவள்ளுவர் , திருக்குறள் என்பவை வெறும் இலக்கியம் மட்டும் இல்லை. திருவள்ளூவரை பண்பாட்டு அடையாளமாக, வரலாற்றின் அடையாளமாக, இனத்தின் குறியீடாக நாம் பார்த்து பழகியிருக்கிறோம். அவர் தமிழர்களின் ஞான அடையாளம். அவரையொட்டி சிந்திக்கிற பொழுது, தமிழ்நாட்டில் கடந்த வாரம் அதிகமாக பேசப்பட்ட இருமொழிக் கொள்கை குறித்து நான் கருத்து சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். இரண்டு முன்னாள் துணைவேந்தர்கள் முன்னிலையில் என் கருத்தை முன்வைக்கிறேன். திருக்குறள் என்பது நாங்கள் ஓதுகிற தமிழ் வேதம். திருவள்ளுவரை படிக்கும்போது நாங்கள் தமிழையே படிக்கிறோம் என்று தான்பொருள் கொள்கிறோம். 

இருமொழி கொள்கை தான் தமிழர்களுக்கு உகந்த கொள்கை என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.மும்மொழி கொள்கை என்பது திணிப்பு என்பது தான் தமிழர்களின் தீர்க்கமான எண்ணம். இந்தி மொழி மீது எங்களுக்கு என்ன வெறுப்பா? - இந்தி மொழி கூடாது என நாங்கள் கொடி பிடிக்கிறோம் என்றால் இந்தி திணிப்பு கூடாது என உறுதிபட கூறுகிறோம். இந்தி மொழி திணிப்பை தான் தமிழர்கள் காலம் காலமாக கடைபிடித்து வருகிறார்கள். நண்பர்களே ஆங்கிலமும் தமிழும் தமிழர்களுக்கு தாய்மொழியாகவும், உலக மொழியாகவும் திகழ்கிற போது இந்தி என்பது இந்த மூன்றாம் மொழியாக திணிப்பாகி விடுகிறது. 

இப்போது அது திணிக்கப்படாத வகையில் கற்க வேண்டியவர்கள் இந்தி கற்றுக் கொள்வார்கள்.உதாரணமாக பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டை ஆள வந்திருக்கிற ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் தமிழை கற்றுக் கொண்டார்கள். தமிழை நாங்கள் அதிகாரிகள் மீது, வடநாட்டில் இருந்து வருபவர்கள் மீதோ திணிக்கவில்லை. 3ஆம் மொழி என்பது சூழலால் வருவது. பின் ஏன் இந்தியை எங்கள் மீது திணிக்கிறீர்கள்? என்ற கேள்வி வருகிறது. தாய்மொழி என்பது பண்பாட்டு மொழி, ஆங்கிலம் என்பது நாகரீக மொழியாகும். ஒரு மனிதன் பண்பாடு மற்றும் நாகரீகத்துடன் திகழ இவை இரண்டும் போதும் என நினைக்கிறோம். ஆங்கிலம் உலக மொழி, அந்த உலகத்துக்குள் தான் வடநாடும் இருக்கிறது. அதனால் வடநாட்டை கடக்க எங்களுக்கு ஆங்கிலமே போதும். இந்தி மொழியின் மீது வெறுப்பு இல்லை ஆனால் அச்சம் இருக்கிறது. 

வடமொழி கலந்த பொழுது எல்லாம் தமிழ் சிதைந்து இருக்கிறது. இந்தியா முழுவதும் தமிழ் பேசப்பட்டது என அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். அந்த மொழி ஏன் குறுகியது என்பது வரலாறு. தமிழில் கலந்த வடமொழி வேறொரு மொழியாக பிரிகிறபோது நாங்கள் நிலத்தை இழந்தோம். ஒரு மொழி நிலத்தை பிரித்து விடுகிறது. அப்படி நாங்கள் நிறைய இழந்து விட்டோம். இனியும் மொழியையும், நிலத்தையும், இனத்தையும் இழக்க நாங்கள் தயாராக இல்லை” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Actress Imaya: விஜய் vs உதயநிதி .. யார் உங்க ஃபேவரைட்? .. தங்கம் தென்னரசு மகள் கொடுத்த ஷாக் பதில்!
Actress Imaya: விஜய் vs உதயநிதி .. யார் உங்க ஃபேவரைட்? .. தங்கம் தென்னரசு மகள் கொடுத்த ஷாக் பதில்!
GV Prakash: எக்ஸ் தளத்தில் உதவி கேட்ட ரசிகர்.. 50 ஆயிரத்தை அள்ளிக் கொடுத்த ஜிவி பிரகாஷ்
GV Prakash: எக்ஸ் தளத்தில் உதவி கேட்ட ரசிகர்.. 50 ஆயிரத்தை அள்ளிக் கொடுத்த ஜிவி பிரகாஷ்
நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'டார்க்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா
நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'டார்க்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா
என்னை புரிந்துகொள்ளாதவர்கள் தான் தற்குறி...மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சோலார் ஸ்டார் மகேந்திரன்
என்னை புரிந்துகொள்ளாதவர்கள் தான் தற்குறி...மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சோலார் ஸ்டார் மகேந்திரன்

வீடியோ

திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக
Yuvaraja resigns from TMC | ”தமாகா-வில் இருந்து விலகுகிறேன்” யுவராஜா அதிரடி அறிவிப்பு! தவெகவில் இணைகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Shipbuilding Thoothukudi : தூத்துக்குடி மக்களுக்கு ஜாக்பாட்.! 38,000 கோடி முதலீடு.. 15,000 பேருக்கு வேலை- மெர்சல் காட்டிய விஜய்
தூத்துக்குடி மக்களுக்கு ஜாக்பாட்.! 38,000 கோடி முதலீடு.. 15,000 பேருக்கு வேலை- மெர்சல் காட்டிய விஜய்
Mithun Palanisamy : ’மகனுக்காக அதிமுகவை காவு வாங்கும் எடப்பாடி?’ கட்சியில் நடப்பது என்ன..?
’மகனுக்காக அதிமுகவை காவு வாங்கும் எடப்பாடி?’ கட்சியில் நடப்பது என்ன..?
வேறு துறை கேட்கும் விசிக? திருமாவளவன் MASTERPLAN.. குழம்பி நிற்கும் தவெக!
வேறு துறை கேட்கும் விசிக? திருமாவளவன் MASTERPLAN.. குழம்பி நிற்கும் தவெக!
பள்ளிக் கல்வித்துறையே.. இதெல்லாம் செய்ங்க- பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு 9 முக்கிய கோரிக்கைகள்!
பள்ளிக் கல்வித்துறையே.. இதெல்லாம் செய்ங்க- பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு 9 முக்கிய கோரிக்கைகள்!
TN BY-Election: 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
Thangam Thennarasu: ’’தவெக இதை செஞ்சா பதவியில் இருந்தே விலகறேன்’’ தங்கம் தென்னரசு ஓப்பன் சவால்!
Thangam Thennarasu: ’’தவெக இதை செஞ்சா பதவியில் இருந்தே விலகறேன்’’ தங்கம் தென்னரசு ஓப்பன் சவால்!
ADMK vs TVK : அதிமுகவின் 4 MLA-க்கள் மட்டுமல்ல சென்னையின் 2 மா.செயலாளர்களும் ரெடி.? எடப்பாடியை அலற விடும் விஜய்
அதிமுகவின் 4 MLA-க்கள் மட்டுமல்ல சென்னையின் 2 மா.செயலாளர்களும் ரெடி.? எடப்பாடியை அலற விடும் விஜய்
ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்குவது சாத்தியமா? வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசின் செயல்திட்டம் என்ன? அன்புமணி கேள்வி
ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்குவது சாத்தியமா? வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசின் செயல்திட்டம் என்ன? அன்புமணி கேள்வி
Embed widget