Vaikaipuyal Vadivelu: வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் மதுரையில் காலமானார்..!
நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் நேற்று மதுரையில் காலமானார்.

நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் நேற்று மதுரையில் காலமானார். நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி என்கின்ற பாப்பா உடல்நலக்குறைவால் நேற்று இரவு மதுரையில் காலமானார். காலமான அவரது தாயாருக்கு வயது 87.
படப்பிடிப்புக்காக பல்வேறு இடங்களில் தங்கி வந்தாலும், தன் சொந்த ஊரான மதுரையில் குடும்பத்தினருடன் நடிகர் வடிவேலு வசித்து வருகிறார். இந்த நிலையில் வயது மூப்பினால் உடல் நலம் பாதித்து இருந்த வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி நேற்று இரவு காலமானார். தனது தாயை இழந்த நடிகர் வடிவேலு பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார்.
மேலும் அனைவரையும் சிரிக்க வைத்த நடிகர் வடிவேலு சோகத்தில் மூழ்கி காணப்படுவதை யாராலும் பார்க்க முடியவில்லை. திரையுலகினர், நண்பர்கள், அவரது உறவினர்கள் என அனைவரும் நடிகர் வடிவேலுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















