Karthigai Deepam: ஹனிமூனில் பாத்திரம் கழுவ நிற்கும் ரேவதி! ஏற்காட்டில் நடக்கப்போவது என்ன?
கார்த்திகை தீபம் சீரியலில் ஹனிமூனுக்குச் சென்ற இடத்தில் ரேவதிக்கு நிகழ்ந்த சம்பவம் குறித்து கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் ஏற்காட்டில் வந்து இறங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மாயாவின் சதி:
அதாவது, கார்த்திக் ரேவதியை பிரிக்க திட்டம் போடும் மாயாவும் இன்னொரு பக்கம் ஏற்காட்டிற்கு வந்து இறங்குகிறாள். அடுத்து கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் ரூமுக்குள் நுழைய ரூம் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்க ரேவதி கடுப்பாகிறாள், கார்த்திக்கும் எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என சொல்லியும் நம்ப மறுக்கிறாள்.
அதன் பிறகு கார்த்திக் வெளியே சென்றிருக்க அப்போது மாயா ஏற்பாடு செய்த சர்வெண்ட் உள்ளே வந்து பொக்கேவை கொடுத்து உங்க ஹஸ்பண்ட் கொடுக்க சொன்னதாக சொல்ல ரேவதி இன்னும் கடுப்பாகிறாள்.
பாத்திரம் கழுவ நிற்கும் ரேவதி:
பிறகு கார்த்திக் வந்ததும் அவனிடம் கோப்பட கார்த்திக் சர்வெண்ட்டை கூப்பிட்டு விசாரிக்க மாற்றி கொடுத்து விட்டதாக சொல்கிறான். அடுத்து ரேவதி கோபித்து கொண்டு தனியாக வெளியே சென்று ஒரு ஹோட்டலில் சாப்பிடுகிறாள், சாப்பிட்டு முடித்த பிறகு பர்ஸில் பணம் இல்லை என தெரிய வருகிறது. இதனால் கடை ஓனர் பாத்திரம் கழுவ சொல்ல ரேவதி செய்வதறியாது நிற்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

