Karthigai Deepam: ரோகிணிக்காக நடந்த ஏமாத்து வேலை! மாட்டிக்கொள்வாரா கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
ரோகிணி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று கார்த்திகை தீபத்தில் நடக்கப்போவது என்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரோகினிக்கு ரத்தம் தேவைப்பட சாமுண்டீஸ்வரி பரமேஸ்வரி பாட்டி ரத்தம் கொடுக்க கூடாது என சொல்லி விட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ரோகிணியை காப்பாற்ற நடந்த ஏமாற்று வேலை:
அதாவது ரோகினியை காப்பாற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்தால் சாமுண்டீஸ்வரிக்கு தெரியாமல் இரத்தம் கொடுப்பவரின் பெயரை மாற்றி பின்பக்கமாக பரமேஸ்வரி பாட்டியை ஹாஸ்பிடல் அழைத்துச் சென்று ரோகிணிக்கு ரத்தம் கொடுக்கின்றனர். இதனால் ரோகிணி உடல்நிலை தேறி இயல்பு நிலைக்கு வருகிறாள். பிறகு அவளை பரிசோதனை செய்த டாக்டர் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று சொல்கிறார்.
கொடுத்த வாக்கை காப்பாற்ற துடிக்கும் சாமுண்டீஸ்வரி:
அடுத்ததாக ரோகிணியை வீட்டுக்கு அழைத்து வந்ததும் கோவில் பூஜைக்கு செல்ல வேண்டும் என்பது குறித்து பேச சந்திரகலா கண்டிப்பாக இந்த கோவில் பூஜைக்கு போகணுமா என்று கேள்வி எழுப்புகிறாள். சாமுண்டீஸ்வரி கொடுத்த வாக்கை காப்பாற்றணும். அதனால் நிச்சயமாக போகணும் என்று சொல்கிறாள்.
ஊருக்குத் தெரியப்போகும் உண்மை?
இதையடுத்து ராஜராஜன் கார்த்தியை தனியாக அழைத்துச் சென்று ஊர்ல உங்களை எல்லாருக்கும் தெரியும் அப்படி இருக்கும்போது உண்மை தெரிந்து விடாதா? என கேள்வி கேட்கிறார். கார்த்திக் என் பிரண்டை இளையராஜா எல்லா ஏற்பாட்டையும் பண்ணி வைத்திருக்கான்.. எதுவும் வெளியே தெரியாது என திட்டத்தை சொல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















