மேலும் அறிய

Ethirneechal: குணசேகரன் வீட்டில் டேரா போடும் ராமசாமி அப்பத்தா: எஸ்கேப்பான ஜீவானந்தம்: எதிர்நீச்சலில் இன்று!

Ethirneechal : கான்ஸ்டபிள் உதவியால் போலீசிடம் இருந்து எஸ்கேப்பான ஜீவானந்தம். குணசேகரன் வீட்டுக்குள் நுழைந்த ராமசாமி குடும்பம் செய்யும் கலகம். இந்த எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 22) எபிசோடில் நீதிபதியிடம் ஈஸ்வரி மகளை தேடித் தருமாறு கெஞ்சி கேட்கிறாள். அதற்கு பிறகு எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்று கொள்கிறேன் என ஈஸ்வரி சொல்கிறாள். ஜீவானந்தத்தையும் ஈஸ்வரியையும் மேலும் நான்கு நாட்களுக்கு காவலில் வைக்க சொல்லி தீர்ப்பு வழங்குகிறார் நீதிபதி.

ஜனனியும், சக்தியும் வீட்டுக்கு வருகிறார்கள். மனு கொடுத்துவிட்டு வந்தது பற்றியும் அவர்கள் ஸ்பெஷல் ஃபோர்ஸ் வைத்து விசாரிப்பதாக சொன்னது பற்றியும் மற்றவர்களிடம் சொல்கிறார்கள். கதிர், நாமும் போய் தர்ஷினியைத் தேடலாம் என சொல்ல, ஜனனி அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறாள். அந்த நேரத்தில் நாச்சியப்பனின் குடும்பத்தில் இருந்து ராமசாமி, கிருஷ்ணசாமி, உமையாள் மற்றும் அப்பத்தா குணசேகரனை பார்க்க வருகிறார்கள். வீட்டில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி கவலையுடன் விசாலாட்சி அம்மா பேசுகிறார்.

 

Ethirneechal: குணசேகரன் வீட்டில் டேரா போடும் ராமசாமி அப்பத்தா: எஸ்கேப்பான ஜீவானந்தம்: எதிர்நீச்சலில் இன்று!

"இத்தனை வருஷமா உன்னோட வாழ்ந்த பொண்டாட்டியே இப்படி பண்ணிட்டாளே" என ராமசாமியின் அப்பத்தா குணசேகரனை ஏத்தி விடுகிறார். அதைக்கேட்டு கோபமான ஜனனி உள்ளே நுழைந்து "நீங்க எதுக்காக இங்க வந்தீங்க?" என அதட்டலாக கேட்க குணசேகரன் ஜனனியை "நீ யாரு அதை கேட்க. வாயை மூடு" என அதட்டுகிறார். உமையாள் ஜனனியை பற்றியும் ஜனனியின் அம்மாவைப் பற்றியும் கேவலமாக பேசுகிறாள்.

தம்பிகளை பற்றி கேவலமாக பேசுகிறார் குணசேகரன். அந்த நேரம் பார்த்து ரேணுகாவின் அம்மா வீட்டுக்கு வருகிறார். அவரை அவமானாக பேசுகிறார் குணசேகரன். ஞானத்திற்கும் ரேணுகாவிற்கும் 15 லட்சம் பணம் கொண்டு வந்து தொழில் செய்வதற்காக கொடுக்கிறார். ஞானம் பிச்சை எடுத்து பொழைக்கிறான் என குணசேகரன் சொல்ல ரேணுகா அவரை எதிர்த்து பேசுகிறார்.

குணசேகரனுக்கு சப்போர்ட்டாக தர்ஷனை அசிங்கப்படுத்தி ராமசாமி பேச, கதிர் கோபமாகச் சென்று அவன் சட்டையைப் பிடிக்க கதிரை அசிங்கப்படுத்துகிறார் குணசேகரன். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறான் கதிர். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ரேணுகாவின் அம்மா ஞானத்திடம் பணத்தைக் கொடுத்து "ஏதாவது தொழில் பண்ணி அந்த ஆள் மூஞ்சியில கரியை பூசணும் தம்பி" என சொல்கிறார்.

 

Ethirneechal: குணசேகரன் வீட்டில் டேரா போடும் ராமசாமி அப்பத்தா: எஸ்கேப்பான ஜீவானந்தம்: எதிர்நீச்சலில் இன்று!

ராமசாமியின் அப்பத்தா "நான் இங்க இரண்டு நாள் தங்கிட்டு வரேன்" என சொல்லி அவர்களை அனுப்பிவிடுகிறார். அனைவரையும் அவர்கள் அவமானப்படுத்தி பேச கோபமான ஞானம் "நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரவா" என எழுந்திரிக்க ரேணுகா அவனை அடக்கி உட்காரவைக்கிறாள். கதிர் அவர்களின் மூஞ்சில் அடித்தது போல ஏதோ ஒரு பொருளை தூக்கி விசிறியடிக்கிறான்.

 


ஜீவானந்தத்தை காவலில் வைப்பதற்காக கோர்ட்டில் இருந்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல வண்டியில் உட்கார வைக்கிறார்கள். அப்போது காவலுக்காக இந்த கான்ஸ்டபிள் ஜீவானந்தத்தை பார்த்து "நீங்க போய் அந்த பொண்ணை எப்படியாவது தேடி கண்டுபிடிங்க" என சொல்லி அனுப்பி வைக்கிறார்.

போலீஸ் வந்து தேட கான்ஸ்டபிள் மயக்கம் போட்டு விழுந்து கிடப்பது போல நடிக்கிறார். ஜீவானந்தம் கான்ஸ்டபிளை அடித்து விட்டு எஸ்கேப் ஆனது போல சொல்லி விடுகிறார். ஈஸ்வரிக்கு கண்ணை காட்டி அனுப்பி வைத்ததை பற்றி சொல்கிறார். ஈஸ்வரியும் சற்று ஆறுதல் அடைகிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal ) எபிசோடுக்கான ஹிண்ட்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
Embed widget