மேலும் அறிய

Ethirneechal : லெட்டர் எழுதி வைத்த குணசேகரன்... பேசாமல் வந்து போனவரை கூட இனிமேல் பார்க்க முடியாதே! எதிர்நீச்சல் ரசிகர்கள் வருத்தம்

Ethirneechal Sep 18 promo : லெட்டர் எழுதி வைத்து வீட்டை விட்டு வெளியேறிய குணசேகரன். உண்மையை அறிந்த ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஷாக். இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது? 


சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஈஸ்வரியையும் தர்ஷனையும் காணவில்லை என பதற்றத்தில் இருக்கிறார்கள் ஜனனியும் சக்தியும். அந்த நேரத்தில் புதிய பைக்கில் அவர்கள் இறங்குவதை பார்த்து அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். உடனே பிரச்சனை செய்த வந்துவிட்டார்கள் கதிரும் ஞானானும். "ஏன் இப்படி குடும்ப மானத்தை வாங்குறீர்கள்? எங்க அண்ணன் 13  வயசுல இருந்து கஷ்டப்பட்டு ஏங்க வளர்த்தார் ஆனா இந்த பையன் இப்படி பேசுறான்" என் ஞானம் சொன்னதும் "அவர் அப்பா செத்து கஷ்டப்படுத்துனாரு இவர் உயிரோட இருந்து கஷ்டப்படுத்துறாரு" என சொன்னதும் கதிர் தர்ஷனை ஓங்கி அறைந்து விடுகிறான். பெரிய கைகலப்பே நடக்கிறது. அனைவரும் சேர்ந்து தடுத்து விடுகிறார்கள்.

Ethirneechal : லெட்டர் எழுதி வைத்த குணசேகரன்... பேசாமல் வந்து போனவரை கூட இனிமேல் பார்க்க முடியாதே! எதிர்நீச்சல் ரசிகர்கள் வருத்தம்

இரவு தர்ஷனும் தர்ஷினியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது தர்ஷன் ஜீவானந்தத்தை சந்தித்தது பற்றியும் வெண்பா எவ்வளவு அழகாக பேசுகிறாள் என்பதை பற்றியும் சொல்லி ஒருமுறை நீ அவரை சந்திக்க வேண்டும் என தர்ஷினியிடம் சொல்லி கொண்டு இருக்கிறான். அப்போது தர்ஷினி இது போல ஒருவர் நமக்கு அப்பாவாக இருந்தால் எப்படி இருக்கும் என சொல்ல அதை கேட்டுக்கொண்டு இருந்த கதிர் எகிறிக்கொண்டு வருகிறான்.

Ethirneechal : லெட்டர் எழுதி வைத்த குணசேகரன்... பேசாமல் வந்து போனவரை கூட இனிமேல் பார்க்க முடியாதே! எதிர்நீச்சல் ரசிகர்கள் வருத்தம்
இந்த பிரச்சினை பெரிய அளவில் வெடிக்க ஈஸ்வரியுடன் மற்றவர்களும் வந்து தடுக்கிறார்கள். "அந்த தாடிக்காரன் அப்பனாக வந்து இருந்தால் நல்லா இருக்குமாம். நீ தானே இதை இவங்களுக்கு சொல்லி கொடுத்து வளக்குற" என ஈஸ்வரியை மோசமாக கதிர் பேச, திருப்பி லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாள் ஈஸ்வரி.

"அநாவசியமாக பேசாத... உங்களை வெட்டிட்டு போக எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும். இதை வீட்ல யாரும் யாருக்கும் அடிமை கிடையாது" என சொல்லிவிட்டு அங்கிருந்து அனைவரும் சென்றுவிடுகிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. நேற்றைய எபிசோட் முழுவதும் குணசேகரன் அவ்வப்போது வந்து சென்றது ரசிகர்களின் கண்களை குளமாக்கியது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அனைவரும் ஒன்றாக வீட்டின் டைனிங் டேபிள் அருகே இருக்கிறார்கள். விசாலாட்சி அம்மா சக்தியிடம் "டேய் சக்தி உங்க அண்ணனை பாத்தியா டா" என கேட்கிறார். "இல்லையே மா மேல நான் பாக்கலையே" என்கிறான்.
Ethirneechal : லெட்டர் எழுதி வைத்த குணசேகரன்... பேசாமல் வந்து போனவரை கூட இனிமேல் பார்க்க முடியாதே! எதிர்நீச்சல் ரசிகர்கள் வருத்தம்
மாடிக்கு சென்ற ஞானம் மேஜையில் போனும் அது அடியில் ஒரு லெட்டரும்  இருப்பதை பார்க்கிறான். அதை பார்த்து படித்துவிட்டு "என்ன அண்ணே இது... டேய் கதிர் வாடா டேய்" என அழைக்கிறான். ஞானம் அலறுவதை கேட்ட அனைவரும் அதிர்ச்சியாகி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு மாடிக்கு ஓடுகிறார்கள். சக்தி லெட்டரை வாங்கி படிக்க கதிர் அவனிடம் இருந்து புடுங்க முயற்சிக்கிறான். அவனை தள்ளி விட்டு சக்தி லெட்டரை படிக்கிறான். கதிர் அனைவரையும் பார்த்து கத்துகிறான். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
 


குணசேகரன் கதாபாத்திரமாக மறைந்த நடிகர் மாரிமுத்துவை நேற்று வரை வாய் பேசாமல் அமைதியாக வந்து போவது போல காட்டினார்கள். ஆனால் இனி நடிகர் மாரிமுத்துவை எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலில் பார்க்க முடியாது என்பது ரசிகர்களுக்கு வருத்தமாக உள்ளது. அதே சமயத்தில் புதிய குணசேகரனாக யார் வர போகிறார் என்பது ஒரே சஸ்பென்சாகவே இருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
“தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?BJP MP Bajan in Vande Bharat : ஓடும் ரயிலில் பஜனை! பாஜக MP-யின் சர்ச்சை வீடியோVCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
“தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
Aadhav Arjuna :  “ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த பரபரப்பு விளக்கம் இதுதான்..!
“ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த விளக்கம் இதுதான்..!
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Embed widget