மேலும் அறிய

KPY Bala: இல்லாதவர்களுக்கு உதவும் பாலா.. அவரின் வாழ்வை மாற்றிய தருணம் எது தெரியுமா?

ஒரு வாரம் ஊடகத்தில் வாய்ப்பு தேடுவோம். கிடைக்கவில்லை என்றால் திரும்ப படிக்க வந்துவிடுவோம் என நினைத்தேன். அந்த ஒரு வாரம் ஒரு மாதமாக மாறியது.

என்னை பொறுத்தவரை எல்லாரையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்பது தான் வேலையாக உள்ளது  என நடிகர் KPY பாலா தெரிவித்துள்ளார். 

உதவிக்கரம் நீட்டும் KPY பாலா

விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு', குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் நன்கு பிரபலமானவர் பாலா. வித்தியாசமான தலைமுடி, உடல்மொழி என ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் உதவும் பணியை பாலா செய்து வருகிறார். மாற்றுத்திறனாளிக்கு வீல்சேர் வாங்கி தந்தது, பெட்ரோல் போடும் பையனுக்கு புது பைக் வாங்கி தந்தது என பாலாவின் இந்த உதவிகள், அவரை கலியுக கர்ணன் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

வாழ்க்கையை மாற்றிய தருணம் 

ஒரு நேர்காணலில் பேசிய பாலா, “என்னை பொறுத்தவரை எல்லாரையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்பது தான் வேலையாக உள்ளது. அழுவுறது யார் வேண்டுமானாலும் செய்யாலும், சிரிக்க வைக்கிறது தான் கஷ்டம். வந்தோமா, வேலை செய்தமோ, காமெடி பண்ணோமா, காசை வாங்குனோமா என்பது தான் பாலாவின் ஸ்டைல்” என தெரிவித்தார். 

நான் வந்து படிக்கவில்லை. 12 ஆம் வகுப்பு வரை தான் படித்தேன். லயோலா கல்லூரியில் தான் படிப்பேன் என அடம் பிடித்தேன். வீட்டில் மிகவும் ஏழ்மை நிலை. கல்லூரி கட்டணம் ரூ.28 ஆயிரம் என்னால் கட்ட முடியவில்லை. சொந்தக்காரர்கள் தான் உதவினார்கள். நான் செகன்ட் ஷிஃப்டில் கல்லூரி போனேன். ஒருநாள் போகும்போது முதல் ஷிஃப்டில் வந்த பசங்க, பொண்ணுங்க எல்லாரையும் பார்க்கிறேன். மிகவும் வசதியாக இருக்கிறார்கள். நான் எல்லாரையும் ஜன்னல் வழியா பார்த்த அந்த நிகழ்வு தான் ஒட்டுமொத்த வாழ்க்கையும் திருப்பி போட்டது. 

நம்ம வீட்டில் வேறு கஷ்டமான சூழல் இருக்கும்போது இப்படியெல்லாம் வசதியாக வாழ முடியாது. கடன் வாங்கி தான் பீஸ் கட்டுறாங்க. அவங்க சாப்பிட்டார்களா? இல்லையா என்பது கூட தெரியவில்லை. சரி ஒரு வாரம் ஊடகத்தில் வாய்ப்பு தேடுவோம். கிடைக்கவில்லை என்றால் திரும்ப படிக்க வந்துவிடுவோம் என நினைத்தேன். அந்த ஒரு வாரம் ஒரு மாதமாக மாறியது. கிட்டதட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் ஊடகத்தில் வந்து விட்டேன். 

ஒருநாள் ஒரு நிகழ்ச்சிக்கு ஆடிஷன் வரும்போது பெண் ஒருவரை சந்தித்தேன். அப்பெண் முடியை பசங்க மாதிரி வெட்டியிருப்பார். அவர் என்னிடம் வந்து, ‘என்னை சமுதாயம் ஒருமாதிரி பார்க்குது. எப்படி படிக்கணும்னே தெரியல’ என வருத்தப்பட்டார். எனக்கு பீஸ் கட்டணும், யாராவது உதவி செய்யிறவங்க இருந்தா சொல்லுங்க என சொன்னார்.நான் அப்போது 5 ஆயிரம் தான் சம்பளம் வாங்கி கொண்டிருந்தேன். கிட்டதட்ட 5,6 நிகழ்ச்சி போய் சம்பாதித்து அப்பெண்ணுக்கு பீஸ் கட்டினேன். அவரின் அம்மா என்னிடம் மகிழ்ச்சியாக பேசியது 5 ஆஸ்கர் விருது வாங்கியது மாதிரி இருந்தது. தொடர்ந்து உதவிகள் செய்ய தொடங்கினேன்” என KPY பாலா கூறியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget