Karthigai Deepam: புருஷனுக்காக அம்மாவை வெறுப்பேற்றிய மகள்.. கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் கணவன் கார்த்திக்கிற்காக தனது தாய் சாமுண்டீஸ்வரி கடுப்பேற்றிய நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான செய்திகள் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய சண்டே ஸ்பெஷல் எபிசோடில் சாமுண்டீஸ்வரி கார்த்தியின் கையால் விருது வழங்கிய நிலையில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கடுப்பேத்திய ரேவதி:
அதாவது, சாமுண்டீஸ்வரி கார்த்திகேயன் விருது வாங்கிய கடுப்பில் வீட்டுக்கு வர, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ரேவதி, என்னம்மா போகும்போது சந்தோஷமா போன? இப்போ சோகமா வர்ற என்ன ஆச்சு? என்று கேட்கிறாள்.
சாமுண்டீஸ்வரி அங்க என்ன நடந்துச்சு? சிறப்பு விருந்தினராக வந்தது யார் என்று உனக்கு தெரியாதா? என்று கேட்க, தெரியும் என் புருஷன் கார்த்தி கையால தான் வாங்கினீங்கனு தெரியும் என சொல்கிறாள். பிறகு சாமுண்டீஸ்வரி கடுப்பாக சந்திரகலா எல்லாம் தெரிஞ்சுரும் எதுக்கு இது கேட்கிற? என கோபப்படுகிறாள்.
என் புருஷன் உங்கள பத்தி பெருமையா தான் பேசினாரு, உங்களுக்கு சப்போர்ட் பண்ணி தான் பேசினாரு ஆனா நீங்க தான் அப்புறம் இப்போ வரைக்கும் புரிஞ்சுக்கவே இல்ல என சொல்கிறாள். சாமுண்டீஸ்வரி கடுப்பாகி உள்ளே சென்று விடுகிறாள்.
கார்த்திக் போட்ட ஸ்கெட்ச்:
இதைத்தொடர்ந்து முத்துவேல் ஒயின் ஷாப்பில் சரக்கு அடித்து கொண்டிருக்க, கார்த்திக் ரவுடி போல் போன் செய்து நூறு சவரன் ஆக ஏன் விக்கிறதுக்கு உதவி பண்ணுங்க குடும்பத்துல ரொம்ப கஷ்டமா இருக்கு என்று சொல்லி பேசி முத்து வேலையும் நம்ப வைக்கிறான்.
முத்துவேல் இந்த விஷயத்தை சந்திரகலாவுக்கு தெரியப்படுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















