மேலும் அறிய

அய்யய்யோ! தூக்கில் தொங்கிய கபாலி பட தயாரிப்பாளர் - என்னப்பா சொல்றீங்க?

ரஜினிகாந்தின் கபாலி படத்தின் தெலுங்கு தயாரிப்பாளர் கேபி செளத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் கே.பி.செளத்ரி. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தின் தெலுங்கு தயாரிப்பாளர் இவரே ஆவார். மேலும், பவன் கல்யாணின் கப்பர்சிங் படம் மட்டுமின்றி தெலுங்கில் பிரபலமான சீதம்மா வகீட்லோ ஸ்ரீமல்லே செட்டு, அர்ஜுன் சுரவரம் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். 

தூக்கிட்டு தற்கொலை:

கேபி செளத்ரி கோவாவில் உள்ள சீயோலிம் என்ற பகுதியில் வசித்து வந்தார். வழக்கமாக அவர் காலையில் வெளியில் வரும் நேரத்தை கடந்தும் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாமலே இருந்தது. இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. 

அப்போது, கேபி செளத்ரி வீட்டின் உள்ளே தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து, சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

போதையால் சறுக்கிய வாழ்க்கை:

கேபி செளத்ரியின் முழுமையான பெயர் சங்கர கிருஷ்ணபிரசாத் செளத்ரி.  இவர் ஆந்திராவிஜ் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்து வந்த இவர் மீது கடந்த 2023ம் ஆண்டு போதைப் பொருள் வழக்கு ஒன்று பதிவானது. இந்த வழக்கின் அடிப்படையில் அவர் சைபர்பாத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

இந்த கைதுக்கு பிறகு அவர் வாழ்க்கை தலைகீழாக மாறியது என்றே திரையுலகினர் கூறுகின்றனர். இந்த கைது காரணமாக அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினார். தொழில் ரீதியாக ஏராளமான நெருக்கடியைச் சந்திக்க நேரிட்டது. இதையடுத்து, அவர் தனது வாழ்வைப் புதியதாக தொடங்க கோவாவிற்கு சென்றார். 

தொழில் நஷ்டம்:

கோவாவில் புதியதாக கிளப் ஒன்றைத் தொடங்கினார். ஆனால், அந்த வியாபாரத்திலும் அவரால் பெரிதும் ஜொலிக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது. கடன் தொல்லை, பண நெருக்கடி, வியாபாரத்தில் நஷ்டம் என தொடர் நெருக்கடியில் சிக்கிக் கொண்ட கேபி செளத்ரி கடும் மன உளைச்சலில் சில நாட்களாக காணப்பட்டார். 

இதையடுத்து, அவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேபி செளத்ரியின் மரணத்தால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது குடும்பத்தினர் பல்வஞ்சாவில் வசித்து வருகின்றனர். கேபி செளத்ரியின் பிரேதத்தை அவரது சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
IND vs SA  3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
IND vs SA 3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Embed widget