Madurai - சிவகார்த்திகேயன் கனவு: அஜித் சாருடன் ஒரு மாஸ் படம் இருக்கும், அது கொண்டாடும்படியாக இருக்கும் !
அஜித் சாருடன் ஒரு மாஸ் படம் இருக்கும், அது கொண்டாடும்படியாக இருக்கும் - தாய்க்கிழவி படத்திற்கு பின் சிவகார்த்திகேயன்.

நான் வளர்ந்து அஜித் சார் ஒப்புக் கொண்டால் ஒரு படம் செமையாக செய்வோம். அந்தத் திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு திருவிழாவாக தான் இருக்கும். அது ஒரு கனவு தான். நடிகர் சிவகார்த்திகேயன் மதுரையில் பேட்டி.
நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், பிரபல நடிகை ராதிகா சரத்குமார் நடித்து தாய்க்கிழவி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்கில் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், நடிகை ராதிகா சரத்குமார், இயக்குனர் சிவக்குமார் முருகேசன் ஆகியோர் ரசிகர்களோடு தாய்க்கிழவி படத்தை பார்த்து ரசித்தனர். தொடர்ந்து இந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான். கல்லூரிக்கு போகாமல், பட்டப்படிப்பு படிக்காமல், ஒரு குடும்ப நிர்வாகத்தை பார்த்துக் கொள்ளும் பெண்கள் இந்தியாவில் அதிகம் உள்ளார்கள். இந்த திரைப்படம் ஹிட் ஆகி வேறு இடத்தில் வெளியானாலும் இது ஒரு Pan India திரைப்படம் தான்.
இடையூறு?
இடையூறு தருபவர்கள் யார் என்று எல்லோரும் கேட்கிறார்கள், அதை வெளியில் சொன்னால் யூடியூபில் அதிக views தான் கிடைக்கும். மற்றவரை குறை சொல்வதற்காக நான் இது போன்ற கருத்துகளை சொல்லவில்லை. இதையெல்லாம் தாண்டி ஒரு திரைப்படத்தை செய்கின்றோம் என்பதை தான் இதன் மூலம் சொல்கிறேன்.
சினிமா அரசியலை பார்த்துவிட்டீர்கள், மக்களுக்கான அரசியலை பார்பீர்களா?
படத்தில் அரசியலை பற்றி பேசுவோம் தவிர, அதைப்பற்றி எனக்குத் தெரியாது. நான் நடிகனாக ஒரு நல்ல நடிகனாக இருக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளராக நல்ல ஒரு தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
சினிமாவில் பொழுதுபோக்கு தாண்டி அரசியல் கருத்துகள் அதிகளவில் புகுக்கப்படுகிறதா?
எல்லா காலகட்டத்திலும் அரசியல் இருந்துள்ளது அது தப்பு ஒன்றும் இல்லை. REFLECTION OF SOCIETY ஆக தான் சினிமா இருந்துள்ளது.
நடிகர் அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா?
நான் குட்டியாக ஒரு கம்பெனி வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கின்றேன். அவ்வளவு பெரிய கம்பெனியாக நாம் என்றும் வளரவில்லை. நாம் வளர்ந்து அஜித் சார் ஒப்புக் கொண்டால் ஒரு படம் செமையாக செய்வோம். அந்தத் திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு திருவிழாவாக தான் இருக்கும். அது ஒரு கனவு தான்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















