5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
'விஸ்வநாத் & சன்ஸ்' இசை வெளியீட்டு விழாவில், 5,000 ரத்ததானம் மற்றும் 40,000 நலத்திட்ட உதவிகளை செய்த ரசிகர்களை மனதார பாராட்டினார் சூர்யா.

நடிகர் சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' வரும் ஆக்ஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யாவுடன் மமீதா பைஜு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் குடும்ப உறவுகள், காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த விழாவில் படக்குழுவினர் மட்டுமின்றி ரசிகர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.
ரசிகர்களின் சேவையை பெருமையாக குறிப்பிட்ட சூர்யா
விழாவில் பேசிய சூர்யா, தனது ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் சமூகப் பணிகளைப் பற்றி பெருமிதத்துடன் பேசினார். குறிப்பாக, ரசிகர்கள் இணைந்து 5,000-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்திருப்பதும், 40,000-க்கும் அதிகமான மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருப்பதும் தன்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்ததாக தெரிவித்தார். ஒரு நடிகரின் ரசிகர் மன்றம் வெறும் சினிமா கொண்டாட்டத்தில் மட்டுமே இருக்காமல், சமூகப் பொறுப்புடன் செயல்படுவது பாராட்டுக்குரிய விஷயம் என்றும் அவர் கூறினார்.
ரசிகர்களுக்கு சூர்யா தெரிவித்த நன்றி
ரசிகர்கள் செய்திருக்கும் ஒவ்வொரு சமூகப் பணியும் பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயலாக இருப்பதாக சூர்யா குறிப்பிட்டார். திரையுலகில் கிடைக்கும் அன்பை சமூக நலனாக மாற்றியிருக்கும் ரசிகர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்த அவர், இதுபோன்ற சேவைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். மேடையில் அவர் பேசிய இந்த வார்த்தைகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
'விஸ்வநாத் & சன்ஸ்' மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் படத்தின் காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட கதை, சூர்யாவின் வித்தியாசமான தோற்றம், ஜி.வி. பிரகாஷின் இசை ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. இயக்குநர் வெங்கி அட்லூரி, இது உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையாக இருக்கும் என்றும், அதே நேரத்தில் நகைச்சுவை மற்றும் காதல் அம்சங்களும் நிறைந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















