கேட்ட கேள்வியில் ஸ்ருதி நாராயணன் மூஞ்சி தொங்கிய போச்சு! கடுக்கா பட விழாவில் நேர்ந்த மோசமான சம்பவம்!
கடுக்கா படத்தின் வீரமங்கை வேலுநாச்சியார் போஸ்டரை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார், 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணன்.

சர்ச்சைக்கு பெயர் போன ஸ்ருதி நாராயணன் கடுக்கா படத்திற்காக பெண்களின் அடையாளமான வீரமங்கை வேலு நாச்சியார் போஸ்டரை வெளியிட்டதால் சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
ஸ்ருதி நாராயணனை வைத்து வேலு நாச்சியார் புகைப்படம் இடம் பெற்ற 'கடுக்கா' பட போஸ்டரை வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது வேலு நாச்சியாரை கேவலப்படுத்துவது போன்று இருப்பதாக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சிறகடிக்க ஆசை:
குமரன் இயக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த தொடர் மூலமாக பிரபலமானவர் தான் ஸ்ருதி நாராயணன். கல்லூரி காலத்திற்கு பிறகு, சின்னத்திரை பக்கம் திரும்பிய ஸ்ருதி நாராயணன் கார்த்திகை தீபம் சீரியலில், ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு தான் இப்போது ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து.
ஸ்ருதி நாராயணன் ஏஐ வீடியோவா:
இந்த நிலையில் தான், ஸ்ருதி நாராயணனின் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஏஐ வீடியோவா அல்லது உண்மையான வீடியோ என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து ஸ்ருதி நாராயணன் இது ஏஐ வீடியோ என விளக்கம் கொடுத்தார். பின்னர் அது ஏஐ வீடியோ இல்லை உண்மையான வீடியோ என்பது தெரியவந்தது. இந்த சர்ச்சைக்கு பின்னர், ஸ்ருதி நாராயணன் ஹீரோயினாக நடிக்கும் பட விழாவில் கலந்து கொண்டபோது, அந்த வீடியோ குறித்து யாரும் கேள்வி கேட்க வேண்டாம் என கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து தற்போது ஸ்ருதி, கடுக்கா படத்தின் மூலமாக மீண்டும் பேசுபொருளாகி உள்ளார். கடுக்கா படத்தின் போஸ்டரை ஸ்ருதி வெளியிட்ட நிலையில், அதில் பெண்களின் அடையாளமான வீரமங்கை வேலு நாச்சியார் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில்... சில பத்திரிகையாளர்கள், "வேலு நாச்சியார் ஒரு வீர மங்கை. ஆபாச வீடியோ மூலமாக பிரபலமான ஸ்ருதி நாராயணனை வைத்து வீர மங்கை போஸ்டர் வெளியிட்டது அவர்களை வேகலப்படுத்துவது போன்று இல்லையா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு விளக்கம் கொடுத்த படத்தின் ஹீரோவான விஜய் கௌரிஷ்... தவறான முறை என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. கடுக்கா பெண்கள் பற்றிய படம். இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுக்கவே ஸ்ருதி நாராயணன் வந்திருக்கிறார். பெண்களை எந்தளவிற்கு உயர்வாக நினைக்கிறோமோ அந்தளவிற்கு நம் பண்பாடு தெரியும். பெண்களுக்கு ஆதரவு கொடுக்கும் ஒரு படமாக கடுக்கா படம் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். 
இவரைத் தொடர்ந்து பேசிய ஸ்ருதி நாராயணன் கூறியிருப்பதாவது: இது 1990 மற்றும் 2000க்கு இடைப்பட்ட ஒரு காதல் கதையை பிரதிபலிக்கிறது. இது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. இது பெண்களை மையப்படுத்திய படம் என்பதால் படத்திற்கு என்னுடைய முழு ஆதரவை கொடுப்பேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதற்காகத்தான் இன்று வந்திருந்தேன். படம் வெளியாவதற்காக காத்திருக்கிறேன்.
ஒரே பெண்ணை 2 நண்பர்கள் காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் காதல் காமெடி கலந்த ஒரு போராக வெடிக்கிறது. ஒவ்வொருவரும் தங்களது காதல் காட்சிகளால் வசீகரிக்க முயற்சி செய்கிறார்கள். இறுதியில் அவர்களது காதல் கை கூடியதா இல்லையா என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. கடுக்கா படமானது ஈரோட்டை சுற்றிலும் நடக்கும் கதையை பிரதிபலிப்பதாக சொல்லப்படுகிறது.
தன்னுடைய முகத்தில் எந்த ஒரு பதட்டத்தையும் வெளிப்படுத்தாமல் பேசி இருந்தாலும், பத்திரிகையாளர்கள் இந்த கேள்வியை கேட்டதும், ஸ்ருதியின் முகம் வாடி போனதையும் பார்க்க முடிந்தது. கடுங்கா போஸ்டர் மூலம் புது சர்ச்சையில் சிக்கியுள்ள ஸ்ருதி நாராயணனுக்கு ஆதரவாக ஒரு தரப்பும்... எதிராக ஒரு தரப்பும் தங்களின் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





















