மேலும் அறிய

விஜயை புகழ்ந்து முருகன் பாடல்.. கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட பாடகர் வேல்முருகன்!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழாவில் முருகன் பாடலை மாற்றி பாடிய பாடகர் வேல்முருகன் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேல்முருகன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு விழாவில் நடிகர் விஜய்யை புகழ்ந்து முருகனின் பக்தி பாடலை வரிகளை மாற்றி பாடிய விவகாரத்தில் பாடகர் வேல்முருகன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். 

தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு விழா

தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியாக உருவெடுத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா கடந்த பிப்ரவரி 2ம் தேதி சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விஜய், செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சி.டி.நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகனின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. 

அப்போது அவர் கடவுள் முருகனுக்குரிய மருதமலை மாமணியே முருகையா பாடலின் வரிகளை மாற்றி விஜயை புகழ்ந்து பாடினார். தொடர்ந்து வேல்முருகன் பாட, விஜய் நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது. அதேசமயம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் குற்றால நாதன் நெல்லை மாவட்ட காவல் துறையில் வேல்முருகன் மீது புகார் ஒன்றை அளித்தார். 

அதில் முருகன் பாடலை மாற்றி பாடியதால் இந்து மக்களின் மனம் புண்பட்டு விட்டதாக தெரிவித்திருந்தார். பாடகர் வேல்முருகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். 

மன்னிப்பு கேட்ட வேல்முருகன்

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பாடகர் வேல்முருகனிடம், தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியில் மருதமலை மாமணியே முருகையா பாடலை விஜயை வைத்து ஒப்பிட்டு பாடினீர்கள். அது இப்போது சர்ச்சையாகி வருகிறதே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சர்ச்சையாக வேண்டும் என அப்படி செய்யவில்லை. விஜய்க்கும், அந்த பாட்டு பாடியதற்கும் துளிகூட சம்பந்தமில்லை. தொடர்ச்சியாக பாடல் பாடிக் கொண்டிருக்கும்போது உற்சாக படுத்த வேண்டும் என எதேச்சையாக பாடினேன்.

என்னைப் படைத்த முருகனை நான் அவமானம் செய்வது என்பது என்னை நானே கத்தியால் குத்திக் கொல்வது போன்றது. நான் விஷம் குடித்த மாதிரி. ஒருநாளும் அப்படி செய்ய மாட்டேன். பாடல் பாடும்போது எதிரில் இருப்பவர்களை உற்சாகப்படுத்த இந்த பாடலை பாடினால் கொஞ்சம் வேகமாக இருக்கும் என நினைத்து அதை தேர்வு செய்தேன். முருகப்பெருமான் எல்லோருக்கும் வழிகாட்டுகிறார். எல்லா வளமும் கொடுக்கிறார். எந்த மேடையில் போய் பாடினாலும் அந்தந்த இடங்களின் வரிகளை போட்டு பாடுவேன். அதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் யாருக்கும் சம்பந்தமில்லை. ஒருவேளை யாராவது நான் தவறாக நினைத்து பாடி விட்டேன் என நினைத்தால் அவர்கள் அனைவரிடத்திலும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget