மேலும் அறிய

Sarathkumar: ‛ராஜராஜ சோழனின் மதத்தைப் பற்றி பேச இப்போ என்ன அவசியம்?’ -சரத்குமார் சூடான அறிக்கை!

கி.பி. 8 – ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், சூரியன், விநாயகர் ஆகிய கடவுள்களை வழிபடுபவர்களை  சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், கணாபத்தியம், ஸ்மார்த்தம் என ஆறு பிரிவுகளாக பிரித்தார்.

ராஜராஜசோழன் குறித்து கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், அதுகுறித்து  நடிகர் சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன்  சினிமா என்னும் கலையை சரியாக நாம கையாள தவறும்போது தான்  நம்முடைய அடையாளம் நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது. வள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது,ராஜராஜ சோழனை இந்து அரசனாக குறிப்பிடுவது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். அவரது கருத்து கடும் சர்ச்சைகளை கிளப்பியது. 

இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கமலிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது என்றும், வைணவம், சைவம், சமணம் என இருந்தது எனவும் தெரிவித்தார். இது குறித்து பலரும் தங்கள் ஆதரவு, எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மாமன்னன் ராஜராஜசோழன் புகழ் பரப்புவோம்..உலகறிய செய்வோம்...என்ற தலைப்பில் அந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் ராஜராஜசோழன் இந்துவா?... சைவமா? ...வைணவமா?...சைவம் இந்து மதமா? - பரபரப்பான சர்ச்சையாக சென்று கொண்டிருக்கிறது. கி.பி. 8 – ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், சூரியன், விநாயகர் ஆகிய கடவுள்களை வழிபடுபவர்களை  சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், கணாபத்தியம், ஸ்மார்த்தம் என ஆறு பிரிவுகளாக பிரித்தார்.,

இது இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சைவம், வைணவம், சமணம், பெளத்தம், சீக்கியம் மற்றும் அனைத்து நாட்டுப்புற சமயங்களையும் உள்ளடக்கி பொதுவாக இந்து சமயம் என வரையறுத்துள்ளது.1790  ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் சட்டங்களை தொகுத்தபோது கிறிஸ்தவம், இஸ்லாமியத்தை தவிர்த்து இருந்த பெரும் பிரிவு சமயங்களை சேர்த்து சிந்து நதியில் (Indus Valley) இருந்து மருவிய இந்து (Indus) என்ற பெயரிடப்பட்டது.

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன், மனிதகுரங்கு எதிலிருந்து வந்தது?. குரங்கு விலங்கு என்றால், விலங்கினத்திற்கு மனிதன் என பெயரிட்டது யார்?. மனிதனை  இப்போது  குரங்கு என்று சொல்வோமா? அல்லது குரங்கை இப்போது மனிதன் என சொல்வோமா? இந்த சர்ச்சைகள் எல்லாம் நாட்டிற்கு தேவையான ஒன்று தானா? என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. 

மேலும் கிறிஸ்தவம் எப்போது உருவானது? கிறிஸ்தவர்கள் என்ற பெயர் எப்போது வந்தது? இஸ்லாம் எப்போது உருவானது? இஸ்லாமியர்கள் என்ற பெயர் எப்போது வந்தது? தேசம் முதலில் வந்ததா? இங்கு வசிக்கும் மக்கள் முதலில் வந்தார்களா?தமிழ்நாடு முதலில் வந்ததா? தமிழர்கள் முதலில் இங்கு இருந்தார்களா? சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றி விட்டோம், ஆனால், இது தமிழ்நாடு அல்ல என்பது என்ன வாதம்?  கோழி வந்ததா? முட்டை வந்ததா? என்பது போல ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்?

யார் முதலில் வந்தார்கள்? எது முதலில் வந்தது? என்பதை வைத்து பின்னாளில் மாற்றியமைக்கப்பட்ட பெயரை விடுத்து ஆதிகால பெயரையே அழைக்க தீர்மானிப்பது அறிவார்ந்த செயலாக இருக்க முடியுமா?. காலத்திற்கேற்ற ஆட்சியமைப்பு – ஒருங்கிணைப்பு - வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது – அப்போது ஹோமோசேப்பியன்ஸ் என்றிருந்த மனித இனத்தை இன்றும் அவ்வாறு அழைக்கிறோமா?

சைவ சமயம் இருந்தது உண்மை, வைணவ சமயம் இருந்தது உண்மை. அந்த சமயங்களை இந்து சமயத்தில் இணைத்தது உண்மை எனும் போது இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்? இவை அனைத்துமே இறை கொள்கையை அடிப்படையாக கொண்டது. அவரவர் நம்பிக்கைக்கேற்ப இறைவனை வழிபட்டு மதச்சார்பின்மையுடன் செயல்படும் நாட்டில், தொடர்ந்து சர்ச்சைகள் எழுவது வேதனைக்குரியது.

மனித இனத்தின் அடிப்படை தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், சுவாசிக்க தூய்மையான காற்று, கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம், தனிமனித வாழ்க்கைத்தர உயர்வு அனைவருக்கும் கிடைக்கப்பெறுவது எப்போது?

புவி வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, இயற்கை சீர்கேடு நோய்த் தொற்று பரவல், புதுப்புது வைரஸ் தாக்கம், சமூக சீர்கேடுகள் என தேசத்தில் நடந்தேறும் நிலையை தடுப்பது எப்படி? மாற்றுவது எப்போது?

மக்கள் நலனுக்கான முற்போக்கு சிந்தனைகளில் நேரத்தை செலவிடாமல், பின்னோக்கி சென்று வரலாற்றில் சாதித்த மன்னர்களின் புகழை ஆராயாமல் சமயத்தை ஆராய்ந்து இது உண்மையா? பொய்யா? என மீண்டும் மீண்டும் பேசி சர்ச்சைக்குரிய ஒன்றாக உருவாக்குவது நியாயமா?

விலங்கினமாக இருந்த இனம் இரு கற்களை உரசி தீப்பொறி உருவாகுவதை கண்டுபிடித்ததில் இருந்து, சக்கரங்கள், உலோகங்கள் என அன்றாட கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப வளர்ச்சிகளும் மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் நீண்டு செல்கிறது.அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியால் ஆலிஸ் (Alice) என பெயரிடப்பட்ட உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்துள்ளது.

நாளைய மனிதன் விண்வெளிக்கு பாதை அமைக்க திட்டமிடும் போது, செவ்வாய் கோள்களில் குடியேற சிந்திக்கும் போது, ராஜ ராஜ சோழன் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று விவாதிக்காமல், உலக அதிசயங்களுள் ஒன்றாக வைத்து போற்றக்கூடிய மாபெரும் புகழ்மிக்க தஞ்சை பெரிய கோவிலை மக்களுக்கு அர்ப்பணித்த அந்த மாமன்னன், வீரத் தமிழன் ராஜ ராஜ சோழனின் புகழை உலகின் எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில் இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

காரில் சென்ற பாக்யராஜ்.. கல்லால் அடிக்கப்போன சுந்தர்ராஜன் - நட்புக்குள் நடந்தது என்ன?
காரில் சென்ற பாக்யராஜ்.. கல்லால் அடிக்கப்போன சுந்தர்ராஜன் - நட்புக்குள் நடந்தது என்ன?
Sundarrajan:
Sundarrajan: "நான் இடைஞ்சலா இருப்பேனு பாக்யராஜ் நினைச்சுட்டான்.." இயக்குனர் சுந்தர்ராஜன் வேதனை
Sundarrajan:
Sundarrajan: "1ம் வகுப்பு முதல் நண்பன்.." பாரதிராஜாவிடம் பாக்யராஜ் சென்றது எப்படி? மனம் திறந்த சுந்தர்ராஜன்
Parijatham: ஹனிமூனில் விஷால் - இசை நெருக்கம்.. பாரிஜாதத்தில் கிளுகிளுப்பு!
Parijatham: ஹனிமூனில் விஷால் - இசை நெருக்கம்.. பாரிஜாதத்தில் கிளுகிளுப்பு!
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடியின் 15 லட்சம் வாக்குறுதி என்னாச்சு? அதிமுக எதிர்க்கட்சியாக கூட ஜெயிக்காது: அமைச்சர் இ. பெரியசாமி பரபரப்பு பேட்டி!
மோடியின் 15 லட்சம் வாக்குறுதி என்னாச்சு? அதிமுக எதிர்க்கட்சியாக கூட ஜெயிக்காது: அமைச்சர் இ. பெரியசாமி பரபரப்பு பேட்டி!
PTR Slams BJP:
PTR Slams BJP: "டெல்லியில் சர்வாதிகாரி அரசு! தமிழ்நாடு தலைகுனியாது.." பாஜக-வை விளாசிய பி.டி.ஆர்
கன்னியாகுமரியில் IT புரட்சி! டைடல் நியோ பூங்கா: இளைஞர்களின் கனவு நனவாகுமா? வேலைவாய்ப்பு உறுதி!
கன்னியாகுமரியில் IT புரட்சி! டைடல் நியோ பூங்கா: இளைஞர்களின் கனவு நனவாகுமா? வேலைவாய்ப்பு உறுதி!
Nallakannu: ஆயுதம் ஏந்தி.. போராட்டங்களால் நிறைந்த நல்லகண்ணு வாழ்க்கை; மீசையே வைக்காத காரணம் தெரியுமா?
Nallakannu: ஆயுதம் ஏந்தி.. போராட்டங்களால் நிறைந்த நல்லகண்ணு வாழ்க்கை; மீசையே வைக்காத காரணம் தெரியுமா?
Nissan Tekton Review: மாஸ் காட்டப்போகும் நிசான்.. வரப்போது Nissan Tekton - விலை எவ்ளோ தெரியுமா?
Nissan Tekton Review: மாஸ் காட்டப்போகும் நிசான்.. வரப்போது Nissan Tekton - விலை எவ்ளோ தெரியுமா?
Nallakannu Death: இவர்தான் மாமனிதன்..! நல்லகண்ணுவின் உடலை என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா?
Nallakannu Death: இவர்தான் மாமனிதன்..! நல்லகண்ணுவின் உடலை என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா?
Lunar Eclipse 2026: சந்திர கிரகணம் எப்போது? எங்கெல்லாம் தெரியும்? என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது? - முழு விவரம்
சந்திர கிரகணம் எப்போது? எங்கெல்லாம் தெரியும்? என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது? - முழு விவரம்
Nallakannu: நல்லகண்ணு: மகள் காது குத்து முதல் விருதுப் பணம் வரை; வியக்க வைக்கும் தியாகம்!
Nallakannu: நல்லகண்ணு: மகள் காது குத்து முதல் விருதுப் பணம் வரை; வியக்க வைக்கும் தியாகம்!
Embed widget