த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
சுதந்திர தின விழாவில் த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லை என வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் விஜய் தலைமையில் சென்னையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா கலந்து கொண்டது சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற இந்த விழாவில் விஜயின் பெற்றோர்களான இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த நிகழ்விற்கு வருகை தந்த த்ரிஷா முதல்வர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கு வணக்கம் தெரிவித்தபோது த்ரிஷாவை அவர் கண்டுகொள்ளாதது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இது முதல்வராக அவர் பங்கேற்ற முதல் சுதந்திர தின விழாவாகும். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விஜயின் பெற்றோர்களான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் ஆகிய இருவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டர். அதே நேரம் நடிகை த்ரிஷாவும் தனது தாயார் உமா கிருஷ்ணனுடன் இந்த விழாவில் பங்கேற்றது அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது
த்ரிஷாவை கண்டுகொள்ளாத எஸ்.ஏ.சி
இந்த நிகழ்வில் த்ரிஷா முதல்வர் விஜயின் தந்தையை பார்த்து வணக்கம் தெரிவித்த நிலையில் அவரை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளாதது பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே முதல்வர் விஜய் தனது மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் முதல்வர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் த்ரிஷாவும் கலந்துகொள்வது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் முதல்வர் குடும்பத்தினர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடாகவே எஸ்.ஏ.சி த்ரிஷாவை கண்டுகொள்ளவில்லை என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
சொல்லிக்கொண்டு போன எஸ்.ஏ.சி
ஆனால் வெகுஜன கருத்திற்கு மாறாக விழா முடிந்து அங்கிருந்து புறப்படும் நேரத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் த்ரிஷாவிடம் சொல்லிக்கொண்டு தான் கிளம்பியதாக கூறப்படும் காட்சியும் வெளியாகியுள்ளது. இதனால், விழாவின் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அவர் த்ரிஷாவை கண்டுகொள்ளவில்லை என்ற விவாதத்திற்கு மாறாக, நிகழ்ச்சி முடிவில் இருவரும் இயல்பாக விடைபெற்றுக் கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, விழாவில் விஜய் திறந்த வாகனத்தில் சென்றபோது முன்வரிசையில் இருந்த த்ரிஷா மற்றும் தனது பெற்றோரை பார்த்து சல்யூட் அடித்த காட்சியும் வைரலானது. அதற்கு த்ரிஷாவும் விஜயின் பெற்றோரும் பதிலளித்தனர். விழா முடிந்து விஜய் புறப்பட்டபோது த்ரிஷா கையசைத்து ‘டாடா’ தெரிவித்ததும், விஜய் கையசைத்து பதிலளித்ததும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















