Actress Priya Bhavani Shankar: ’காலேஜ் முடிச்சதும் கல்யாணம் பண்ண நெனச்சேன், ஆனா...’ - ப்ரியா பவானி சங்கர் கவலை!
தமிழ் சினிமாவில் ஒரு தமிழ்ப் பெண்ணாக த்ரிஷாவுக்கு பின் பெரும் புகழ் பெற்றுள்ள நடிகை ப்ரியா பவானி சங்கர் தான்.

தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் அதிக படங்களைக் கையில் வைத்திருக்கும் நடிகை ப்ரியா பவானி சங்கர்.
டஜன் படங்கள்

நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2, எஸ்.டி.ஆருடன் பத்து தல, எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை, அருண் விஜய்யுடன் யானை, அதர்வாவுடன் குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், அகிலன், என இவர் நடிப்பில் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
தமிழ் நடிகை
தமிழ் சினிமாவில் ஒரு தமிழ்ப் பெண்ணாக த்ரிஷாவுக்கு பின் பெரும் புகழ் பெற்றுள்ளவர் ப்ரியா பவானி சங்கர் தான். மறுபுறம் பல ஆண்டுகளாகக் காதலித்து வரும் தன் காதலர் ராஜ்வேலுடனான காதல் வாழ்விலும் ப்ரியா பவானி சங்கர் ஸ்டெடியாகவும் அழகாகவும் சென்று கொண்டிருக்கிறார்.
View this post on Instagram
இந்நிலையில், தன் பிசியான திரை வாழ்க்கையின் நடுவே தான் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து ப்ரியா தற்போது தெரிவித்துள்ளார்.
காலேஜ் முடிச்சதும் கல்யாணம் பண்ண விரும்பினேன்...
தன்னுடைய சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது குறித்துப் பேசியுள்ள ப்ரியா பவானி தான் கல்லூரி முடித்ததுமே சீக்கிரம் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்வில் செட்டில் ஆக விரும்பியதாகவும், ஆனால், எதிர்பாராதவிதமாக திரைத்துறையில் நுழைந்து வெற்றிகரமான சென்று கொண்டிருப்பதால், தான் மேலும் திரைத்துறையில் பெரிதாக சாதிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிசி சினிமா வாழ்க்கை
View this post on Instagram
மேலும், தன்னுடைய பிசியான சினிமா வாழ்க்கை தன் திருமணத்தை மேலும் தள்ளிப்போடுகிறது என்றும் ப்ரியா தெரிவித்துள்ளார்.
முதலில் செய்தி வாசிப்பாளராக தன் கரியரைத் தொடங்கிய ப்ரியா பவானி, சின்னத்திரை சீரியலான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் ரசிகர்களைக் கவர்ந்து பின் ’மேயாத மான்’மூலம் திரைத்துறையில் நுழைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















