அஜித்-விஜய் நேருக்கு நேர் மோதி... விஜய்-சூர்யாவாக மாறிய ‛நேருக்கு நேர்’ 25 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்!
மணிரத்தினம் தயாரித்த இந்த படத்தின் ரகுவரன், மணிவண்ணன் உள்ளிட்ட சிறந்த கதாபாத்திரங்கள் நடித்திருந்தன. மாநில விருதுகளை அள்ளிய நேருக்கு நேர், கடந்த ஆண்டு இதே நாளில் தியேட்டர்களை திருவிழா ஆக்கியது.
தல-தளபதி சண்டை இன்று உச்சத்தில் இருக்கலாம். ராஜாவின் பார்வையிலே படத்தில் அவர்கள் இருவரும் இணைந்து நடித்தவர்கள் தான். அதன் பின், இன்றுவரை இருவரும் நடிப்பார்களா என்கிற எதிர்பார்ப்பு பலரிடத்தில் உள்ளது. உண்மையில், அந்த எதிர்பார்ப்பு 1997 ல் நிறைவேறியிருக்கும். ஆம்... நேருக்கு நேர் திரைப்படத்தில் முதலில் நடித்தது அஜித்-விஜய் தான்.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, அதிலிருந்து விலகினார் அஜித். அந்த படத்தின் கதையே இரு கதாநாயகர்கள் மோதிக் கொள்ளும் படியானது. நினைத்து பாருங்கள், அந்த படம் முடிந்திருந்திருந்தால், அன்றே அஜித்-விஜய் மோதியிருப்பார்கள்; இன்று ரசிகர்கள் மோதுவதை விட.
View this post on Instagram
அஜித் விலக என்ன காரணம் என தெரியாத நிலையில், அது தொடர்பாக பேட்டி ஒன்றில் கூறிய நடிகர் தாமு, ‛அஜித் படப்பிடிப்பில் இருந்து திடீரென விலகினார். அதற்கு காரணம் ‛டேட்டா... ரேட்டா’ என்பது தனக்கு தெரியவில்லை’ என்று கூறியிருந்தார். அஜித்தை ஆசைநாயகனாக மாற்றிய வஸந்தின் படம் தான் நேருக்கு நேர். ஒரு ஹீரோவின் அண்ணனும், மற்றொரு ஹீரோவின் அக்காவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை.
தம்பதிக்குள் மனஸ்தாபம். இதனால் அவர்கள் பிரிகிறார்கள். இதை காரணம் காட்டி, தம்பிகள் இருவரும் மோதிக் கொள்கிறார்கள். இதற்கிடையில், அண்ணனின் பகை, அவர் குடும்பத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. தம்பிகள் இருவரும் இணைந்து, அதை எப்படி முறியடித்து, தம்பதியை சேர்த்து வைக்கிறார்கள் என்பது தான் கதை.
View this post on Instagram
அஜித் போன கையோடு, அந்த கதாபாத்திரத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என யோசித்த வஸந்த், நடிகர் சிவக்குமாரின் மூத்த மகனான சூர்யாவை அறிமுகம் செய்து வைத்தார். இன்று பலரால் கொண்டாடப்படும் சூர்யாவை அறிமுகம் செய்து வைத்த திரைப்படம் தான், நேருக்கு நேர். அது மட்டுமின்றி, இந்த திரைப்படத்தில் தான் சிம்ரன் முதலில் நடித்தார் என்றும், ஆனால், அதே ஆண்டில் விஜய் உடன் வெளியான ஒன்ஸ்மோர் திரைப்படம் வெளியானதால், அது அவருடைய முதல்படமானது என்றும் கூறப்படுகிறது.
இசையில் பெரிய மேஜிக் செய்திருப்பார் தேவா. வஸந்த்-தேவா கூட்டணியில் அட்டகாசமான பாடல்கள், படத்தின் வெற்றிக்கு பெரிய பலம். மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இந்த படத்தின் ரகுவரன், மணிவண்ணன் உள்ளிட்ட சிறந்த கதாபாத்திரங்கள் நடித்திருந்தன. மாநில விருதுகளை அள்ளிய நேருக்கு நேர், கடந்த ஆண்டு இதே நாளில் தியேட்டர்களை திருவிழா ஆக்கியது.