மேலும் அறிய

Na.Muthukumar: சாம்பல் கரையும்.. வார்த்தை கரையுமா? கொண்டாடப்படும் கலைஞன் நா.முத்துக்குமார் பிறந்தநாள் இன்று!

மழைக்கால மாலையில் எம்.எப்.ரேடியோ, சோஷியல் மீடியாவில்  ஏதோ ஒரு வீடியோ எடிட் என கேட்கும் இடமெல்லாம் நாமு நின்று புன்னகைக்கிறார். ஜூலை 12 நாமுவின் பிறந்தநாள். 

இசை ரசிக்கும் யாரும், கவிதை ரசிக்கும் யாரும் நாமுத்துக்குமாரை நினைக்காமல் இருக்க முடியாது. இலையை அசைக்கும் காற்றுதால் ஒலியைக் கடத்துக்கிறது என்கிறது அறிவியல். அந்தக்காற்று அசையும் வரை ஒலி பரவும் வரை இசையும் நம்மிடம் சேர்ந்துகொண்டே இருக்கிறது. நிச்சயம் அதில் நாமு இருக்கிறார். தூர தேசத்தில் அரைகுறையாய் ஒலிக்கும் ஏதோ ஒரு பாடல் நாமுவுக்கு உரியதாய் இருக்கும், யாரோ ஒருவரின் காலர் ட்யூன், பொது இடத்தில் அழைப்புக்காக ஒலிக்கும் அறிமுகமில்லாத ஒருவரின் ரிங்டோன், மழைக்கால மாலையில் எம்.எப்.ரேடியோ, சோஷியல் மீடியாவில்  ஏதோ ஒரு வீடியோ எடிட் என கேட்கும் இடமெல்லாம் நாமு நின்று புன்னகைக்கிறார். ஜூலை 12 நாமுவின் பிறந்தநாள். 


Na.Muthukumar: சாம்பல் கரையும்.. வார்த்தை கரையுமா? கொண்டாடப்படும் கலைஞன் நா.முத்துக்குமார் பிறந்தநாள் இன்று!

நாமுத்துக்குமார் குறித்து சொன்ன பாலுமகேந்திரா, ‘சுவாசம்போல் கவிதை வருகிறது இவனிடம்’என்றார். ஆமாம், உண்மைதான் என்பதுபோல அழகான கவிதை வரிகளை எல்லாம் பாடல்களில் கொடுத்து ரசிக்க வைத்தவர் நாமு. 

''அடடா
தெய்வம் இங்கே வரம் ஆனதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே''

''வேரின்றி விதையின்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூப்பூக்குதே''

''அடி கோவில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி''

''பறவை பறந்தப் பிறகும் கிளை தொடங்கும் நடனம் முடிவதில்லையே''

''தொடு வானம்
போலவே கதை பேசிக்
கொண்டே வா காற்றோடு
போவோம் உரையாடல்
தீர்ந்தாலும் உன் மௌனங்கள்
போதும் ''


Na.Muthukumar: சாம்பல் கரையும்.. வார்த்தை கரையுமா? கொண்டாடப்படும் கலைஞன் நா.முத்துக்குமார் பிறந்தநாள் இன்று!

இப்படியாக பாட்டுக்குபாட்டு வரிகளை கோடிட்டுக்காட்ட முடியும். ‘வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்’ என வெயிலை தொடர்ந்து ரசித்து ஆமோதித்த ஒரு கவிஞன். ’மழை மட்டுமா அழகு.. சுடும் வெயில்கூடத்தான் அழகு’ என அழுத்திச் சொன்ன பாடலாசிரியர். ’ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு’ என தந்தைக்குள் இருக்கும் தாயை கண்முன்னே கொண்டு வந்தவர். 

காதல் களிப்பு, காதல் தோல்வி, நட்பு, அம்மா, அப்பா,  உறவுகள், மழை, வெயில் என நாமு தொடாத புள்ளியே இல்லை. தன் வார்த்தைகள் வழியே, காதலுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கவும் செய்வார், காதல்  தோல்வியால் துவண்ட மனதுக்கு ஆறுதல் கூறவும் செய்வார். நீங்கள் எந்த மனநிலையில் தேடினாலும் உங்களுக்கான வார்த்தைகளை பாடல்களாக வைத்திருப்பவர் நாமு. தமிழ்ச் சினிமாத்துறையில் புயலென புகுந்து வீசி இன்று அமைதியாய் கடந்து சென்ற நாமுவின் பிறந்ததினம் இன்று. உடலால் மறைந்தாலும் எங்கோ ஒரு மூலையில், ஒரு தூர ஒலியாக நாமுவின் வரி பாடலாக கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது. இசை இருக்கும் வரை, மொழி இருக்கும் வரை நாமுவுக்கு இறப்பில்லை. 

நாமுவுக்கு என்றுமே அவர் வார்த்தைகள் சரியாய் பொருந்தும். அது,

'சாம்பல் கரையும்.. வார்த்தை கரையுமா?'

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ஊட்டிவிடும் கார்த்திக்.. ஏத்திவிடும் சந்திரகலா.. ரொமான்ஸும், பரபரப்பும்!
Karthigai Deepam: ஊட்டிவிடும் கார்த்திக்.. ஏத்திவிடும் சந்திரகலா.. ரொமான்ஸும், பரபரப்பும்!
Sardaar 2: 20 கோடி கூட வசூல் ஆகல... காத்து வாங்கும் சீட்டால் சர்தார் 2 கல்லாப்பெட்டி காலி!
Sardaar 2: 20 கோடி கூட வசூல் ஆகல... காத்து வாங்கும் சீட்டால் சர்தார் 2 கல்லாப்பெட்டி காலி!
‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்காக சசிகுமாருக்கு விருது… ‘காந்தா’வுக்காக சமுத்திரக்கனிக்கு விருது!
‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்காக சசிகுமாருக்கு விருது… ‘காந்தா’வுக்காக சமுத்திரக்கனிக்கு விருது!
எம் எஸ் சுப்புலட்சுமி பையோபிக்கில் ராஷ்மிகா மந்தனா
எம் எஸ் சுப்புலட்சுமி பையோபிக்கில் ராஷ்மிகா மந்தனா

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Paranthaman DMK:
Paranthaman DMK: "நானும் விஜய் ரசிகன்தான்.." முதலமைச்சர் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்ட திமுக வேட்பாளர்! கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்!
Vaaladi Karthik : ‘அன்பில் மகேஸின் வலதுகரம் - குறி வைத்த போலீஸ்’ யார் இந்த வாளாடி கார்த்திக்..?
‘குறி வைத்த போலீஸ் – அன்பில் மகேஸின் வலதுகரம்’ யார் இந்த வாளாடி கார்த்திக்..?
Anbil Mahesh Case : 'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட அறிக்கை..!
Rain Alert: இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பொளக்கும் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பொளக்கும் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
kN Nehru: ”திமுகவினரை குறிவைத்து அடிக்கும் விஜய் அரசு” எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார் என கே.என். நேரு சவால்
”திமுகவினரை குறிவைத்து அடிக்கும் விஜய் அரசு” எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார் என கே.என். நேரு சவால்
Anbil Mahesh : ’நில்லுங்க பிரச்சாரத்துக்கு போகக் கூடாது’ அன்பில் மகேஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றது ஏன் ?
Anbil Mahesh : ’நில்லுங்க பிரச்சாரத்துக்கு போகக் கூடாது’ அன்பில் மகேஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றது ஏன் ?
Chennai Press Club: 8 மாதம் கழித்து அரெஸ்ட் ஏன்? நக்கீரன் பிரகாஷ் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
8 மாதம் கழித்து அரெஸ்ட் ஏன்? நக்கீரன் பிரகாஷ் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
Attack On Mecca: இஸ்லாமியர்களின் புனித தலத்திற்கு வார்னிங் - ஹவுதிக்களால் அதிர்ந்துபோன சவுதி, மக்கள் பீதி
இஸ்லாமியர்களின் புனித தலத்திற்கு வார்னிங் - ஹவுதிக்களால் அதிர்ந்துபோன சவுதி, மக்கள் பீதி
Embed widget