மேலும் அறிய

Vaali Anniversary : தன்னுயிர் பிரிவதை கவிதையில் கூறிய வாலிக்கு நினைவு அஞ்சலி

காற்று வாங்க போனேன் - ஒரு கவிதை வாங்கி வந்தேன் - அதை கேட்டு வாங்கிப் போனால் - அந்த கன்னி என்னவானாள்...........

காற்று வாங்க போனேன் - ஒரு 
கவிதை வாங்கி வந்தேன் - அதை 
கேட்டு வாங்கிப் போனால் - அந்த 
கன்னி என்னவானாள்...........

என அந்த காலம் முதல் “ முன்பே வா என் அன்பே வா” என இந்த காலம் வரை காதலர்களின் கற்பனை பாடலை கொடுத்தவர் தான் கவிஞர் வாலி. ஸ்ரீரங்கத்தில் வைணவ குலத்தில் பிறந்து இருந்தாலும் வாலியின் கவிதை புலமையும், கற்பனை திறனும் அவரை எழுத்துலகில் ‘மார்க்கண்டேயக் கவிஞர்’ என அழைக்கப்படுகிறார். சிறுவயதிலேயே இலக்கியம் மீதும், ஓவியம் மீதும் ஆர்வம் கொண்ட வாலிக்கு 1958ம் ஆண்டு திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆண்டு வெளிவந்த ‘அழகர் மலைக்கள்ளன்’ படத்தில் சுசீல பாடிய ’நிலவும் தாரையும் நீயம்மா, உலகம் ஒரு நாள் உனதம்மா’ என தனது முதல் வரிகளை பதிவு செய்தார். அடுத்தடுத்து சினிமா உலகில் 15,000 க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதி ஜாம்பவனாக வலம் வந்தார். 

”தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்க்கிறேன்” 

என எம்ஜிஆர்- கே.ஆர். விஜயா நடித்த பணம் படைத்தவர் படத்தில் காதலனை பிரிவும் காதலி தனது உயிரே நீங்கி செல்வதை போல் உணர்வை வாலியால் மட்டுமே இப்ப வரிகளில் உணர்த்த முடியும். 

மரணித்த மனைவியை மறக்க முடியாமல் தவிக்கும் கணவனுக்கு, அந்த மனைவியின் ஆன்மா வந்து ஆறுதல் கூறினால் எப்படி இருக்கும் என்பதை கற்பகம் படத்தில், “மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா.....” என வாலி கூறியிருப்பார். ஆதிக்கவர்க்க தாழ்த்தப்பட்ட ஏழை சாதிகளை அடக்கி ஆள்வதை எதிர்த்தால் என்ன ஆகும் என்பதை எம்ஜிஆர் மூலம் ”நான் ஆணையிட்டால்....” பாடல் வரிகளால் வாலியால் மட்டுமே மிரட்ட முடிந்தது. நண்பனின் பாசம் எதற்கும் ஈடாகாது என்பதை “முஸ்தபா முஸ்தபா” பாடல் வரிகள் கூறும். 

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனும் அம்மா இல்லாமல் உயிர்ப்பிக்காது. அந்த அம்மாவின் பாசத்தை ”அம்மா என்றழைக்காத உயிரில்லையா, தாயில்லாமல் நானில்லை, நானாக நானில்லை தாயே. சின்னத்தாயவள் தந்த ராசாவே, ஆசைப்பட்ட எல்லாதையும் காசிருந்தா வாங்கலாம், காலையில் தினமும் கண்விழித்தால்” பாடல்கள் மூலம் கண்முன் காட்டி இருப்பார் வாலி. 

உலகில் பூமி சுழல காதலும் ஒரு காரணம் என காதலுக்கே தனி அதிகாரம் படைக்கும் காதலர்களுக்காகவே, “தொட்டால் பூ மலரும், மல்லிகை என் மன்னன் மயங்கும், மாலையில் சந்தித்தேன், வைகாசி நிலவே, மலையோரம் வீசும் காற்று, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, நிலவே வா, செல்லாதே வா, முன்பே வா என் அன்பே வா, என்ன விலை அழகே” பாடல் வரிகள் மூலம் காதலுக்கு தனி இலக்கணமே படைத்திருப்பார். 

”தரைமேல் பிறக்க வைத்தார், கொடுத்ததெல்லாம் கொடுத்தார், கண்போன போக்கிலே கால் போகலாமா” பாடல் வரிகள் மூலம் வாழ்க்கைக்கான எதார்த்த தத்துவங்களை தனது வரிகளில் காட்டி பசுமரத்தாணியாய் நெஞ்சில் பதிய வைத்தவர் தான் வாலி. ”ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம், துள்ளுவதோ இளமை” பாடல் வரிகளால் ஒவ்வொரு இளைஞரின் மனதையும் துள்ள விட்டார். 

இப்படி நண்பன், காதல், தாய்பாசம், தத்துவம் என அனைத்து விதமான உணர்வுகளையும் தனது பேனா நுனியில் நிறுத்திய வாலி 2013ம் ஆண்டு இதே நாளில் நுரையீரல் தொற்று காரணமாக விண்ணுலகை அடைந்தார். கற்பனையில் கவிதை படைப்பவனாக மட்டு இல்லாமல், ஓவியக்கவிஞனாகவும், நகைச்சுவை உணர்வுக்கு பஞ்சமில்லாதவனாகவும் இருந்த வாலி சந்தரகாந்த், எதையும் தாங்கும் இதயம், படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை, அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன், காவல் காரன், ஒலி விளக்கு, குடியிருந்த கோயில், அடிமைப்பெண், இருகோடுகள், நீரும் நெருப்பும், உலகம் சுற்றும் வாலிபன், பாரத விலாஸ், நினைத்தனை முடிப்பவன், அன்னை ஓர் ஆலயம், அன்புக்கு நான் அடிமை, வாழ்வே மாயம், அடுத்த வாரிசு, தங்க மகன், பாயும் புலி, தாய் வீடு, தர்மத்தின் தலைவர், ஊர்காவலன், நான் சிவப்பு மனிதன், படிக்காதவன், நல்லவனுக்கு நல்லன், மௌன ராகம், கிழக்கு வாசல், ராஜ நடை, இந்தியன், காதலர் தினம், ஹேராம், பிரியமானவளே, கஜினி, உழைப்பாளி, சந்திரமுகி, தேவர் மகன், காதலன், எஜமான், சிவாஜி, சென்னை 600028, தசாவரதாரம் நாடோடிகள், ஆதவன், கோவா, அயன், மங்காத்தா, எதிர்நீச்சல் படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். 

எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி - கமல், விஜய்- அஜித், தனுஷ் - சிம்பு என அடுத்தடுத்த தலைமுறை ஹீரோக்களுக்கு பாடல் எழுதிய ஒரே கவிஞர் வாலி தான். 

“எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன்.
ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்.”

இது கண்ணதாசன் மறைவுக்கு வாலி எழுதிய இரங்கல் குறிப்பு. இன்று அவரது வரிகள் அவருக்கே இரங்கல் தெரிவிப்பதாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

இது நிஜமா? அஜித்துடன் இணையும் விஜய்! 'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் அரங்கேறும் மாஸ் சம்பவம்!
இது நிஜமா? அஜித்துடன் இணையும் விஜய்! 'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் அரங்கேறும் மாஸ் சம்பவம்!
Bigg BossTamil 10: தலைவனுக்கான தகுதியே இல்ல.. விஜயை வம்பிழுத்தாரா விஜய் சேதுபதி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Bigg BossTamil 10: தலைவனுக்கான தகுதியே இல்ல.. விஜயை வம்பிழுத்தாரா விஜய் சேதுபதி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Actor Suhas: யூட்யூப் சேனல் டூ சினிமா.. மண்டாடியில் வில்லனாக அசத்திய சுஹாஸ்.. யார் தெரியுமா?
Actor Suhas: யூட்யூப் சேனல் டூ சினிமா.. மண்டாடியில் வில்லனாக அசத்திய சுஹாஸ்.. யார் தெரியுமா?
CM Vijay - AjithKumar: விஜயுடன் இணைந்த அஜித்.. இதெல்லாம் பச்ச துரோகம்.. சோசியல் மீடியாவில் கொந்தளித்த ரசிகர்கள்!
CM Vijay - AjithKumar: விஜயுடன் இணைந்த அஜித்.. இதெல்லாம் பச்ச துரோகம்.. சோசியல் மீடியாவில் கொந்தளித்த ரசிகர்கள்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Durai Vaiko: மக்கள் ஓட்டு பிச்சையா? .. அதுகூட ஸ்டாலினுக்கு கிடைக்கலையே.. திமுகவை விளாசிய துரை வைகோ!
Durai Vaiko: மக்கள் ஓட்டு பிச்சையா? .. அதுகூட ஸ்டாலினுக்கு கிடைக்கலையே.. திமுகவை விளாசிய துரை வைகோ!
Vanni Arasu: என் ஊருக்கே 80 வருஷமா பஸ் இல்ல.. வன்னி அரசு பிறந்த கிராமத்துக்கு முதல் முறையாக பஸ் சேவை!
Vanni Arasu: என் ஊருக்கே 80 வருஷமா பஸ் இல்ல.. வன்னி அரசு பிறந்த கிராமத்துக்கு முதல் முறையாக பஸ் சேவை!
Asia Cup: மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
TN Weather News: கனமழைக்கு அதிக வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு இன்று அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
கனமழைக்கு அதிக வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு இன்று அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mahindras Diesel SUV: மஹிந்த்ராவின் டயங்கரமான 4 டீசல் எஸ்யுவிக்கள் - எந்தெந்த மாடல் எப்போது? விலை, அம்சங்கள்
மஹிந்த்ராவின் டயங்கரமான 4 டீசல் எஸ்யுவிக்கள் - எந்தெந்த மாடல் எப்போது? விலை, அம்சங்கள்
பக்கவாத கணவர்...கள்ளக் காதலனுடன் உல்லாசம்.. காட்டிக் கொடுத்த தாய்...நடுங்க வைத்த கொடூரம்
பக்கவாத கணவர்...கள்ளக் காதலனுடன் உல்லாசம்.. காட்டிக் கொடுத்த தாய்...நடுங்க வைத்த கொடூரம்
Rasi Palan Today (14-09-2026): விநாயகரின் அருளால் லாபம் பெறும் ராசி எது? - மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ!
Rasi Palan Today (14-09-2026): விநாயகரின் அருளால் லாபம் பெறும் ராசி எது? - மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ!
MK Stalin's Plan: ராகுலுக்கு எதிராக 3-ம் அணி; ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்; தூதாக போன கனிமொழி; திட்டம் என்ன.?
ராகுலுக்கு எதிராக 3-ம் அணி; ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்; தூதாக போன கனிமொழி; திட்டம் என்ன.?
Embed widget