மேலும் அறிய

Vaali Anniversary : தன்னுயிர் பிரிவதை கவிதையில் கூறிய வாலிக்கு நினைவு அஞ்சலி

காற்று வாங்க போனேன் - ஒரு கவிதை வாங்கி வந்தேன் - அதை கேட்டு வாங்கிப் போனால் - அந்த கன்னி என்னவானாள்...........

காற்று வாங்க போனேன் - ஒரு 
கவிதை வாங்கி வந்தேன் - அதை 
கேட்டு வாங்கிப் போனால் - அந்த 
கன்னி என்னவானாள்...........

என அந்த காலம் முதல் “ முன்பே வா என் அன்பே வா” என இந்த காலம் வரை காதலர்களின் கற்பனை பாடலை கொடுத்தவர் தான் கவிஞர் வாலி. ஸ்ரீரங்கத்தில் வைணவ குலத்தில் பிறந்து இருந்தாலும் வாலியின் கவிதை புலமையும், கற்பனை திறனும் அவரை எழுத்துலகில் ‘மார்க்கண்டேயக் கவிஞர்’ என அழைக்கப்படுகிறார். சிறுவயதிலேயே இலக்கியம் மீதும், ஓவியம் மீதும் ஆர்வம் கொண்ட வாலிக்கு 1958ம் ஆண்டு திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆண்டு வெளிவந்த ‘அழகர் மலைக்கள்ளன்’ படத்தில் சுசீல பாடிய ’நிலவும் தாரையும் நீயம்மா, உலகம் ஒரு நாள் உனதம்மா’ என தனது முதல் வரிகளை பதிவு செய்தார். அடுத்தடுத்து சினிமா உலகில் 15,000 க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதி ஜாம்பவனாக வலம் வந்தார். 

”தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்க்கிறேன்” 

என எம்ஜிஆர்- கே.ஆர். விஜயா நடித்த பணம் படைத்தவர் படத்தில் காதலனை பிரிவும் காதலி தனது உயிரே நீங்கி செல்வதை போல் உணர்வை வாலியால் மட்டுமே இப்ப வரிகளில் உணர்த்த முடியும். 

மரணித்த மனைவியை மறக்க முடியாமல் தவிக்கும் கணவனுக்கு, அந்த மனைவியின் ஆன்மா வந்து ஆறுதல் கூறினால் எப்படி இருக்கும் என்பதை கற்பகம் படத்தில், “மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா.....” என வாலி கூறியிருப்பார். ஆதிக்கவர்க்க தாழ்த்தப்பட்ட ஏழை சாதிகளை அடக்கி ஆள்வதை எதிர்த்தால் என்ன ஆகும் என்பதை எம்ஜிஆர் மூலம் ”நான் ஆணையிட்டால்....” பாடல் வரிகளால் வாலியால் மட்டுமே மிரட்ட முடிந்தது. நண்பனின் பாசம் எதற்கும் ஈடாகாது என்பதை “முஸ்தபா முஸ்தபா” பாடல் வரிகள் கூறும். 

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனும் அம்மா இல்லாமல் உயிர்ப்பிக்காது. அந்த அம்மாவின் பாசத்தை ”அம்மா என்றழைக்காத உயிரில்லையா, தாயில்லாமல் நானில்லை, நானாக நானில்லை தாயே. சின்னத்தாயவள் தந்த ராசாவே, ஆசைப்பட்ட எல்லாதையும் காசிருந்தா வாங்கலாம், காலையில் தினமும் கண்விழித்தால்” பாடல்கள் மூலம் கண்முன் காட்டி இருப்பார் வாலி. 

உலகில் பூமி சுழல காதலும் ஒரு காரணம் என காதலுக்கே தனி அதிகாரம் படைக்கும் காதலர்களுக்காகவே, “தொட்டால் பூ மலரும், மல்லிகை என் மன்னன் மயங்கும், மாலையில் சந்தித்தேன், வைகாசி நிலவே, மலையோரம் வீசும் காற்று, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, நிலவே வா, செல்லாதே வா, முன்பே வா என் அன்பே வா, என்ன விலை அழகே” பாடல் வரிகள் மூலம் காதலுக்கு தனி இலக்கணமே படைத்திருப்பார். 

”தரைமேல் பிறக்க வைத்தார், கொடுத்ததெல்லாம் கொடுத்தார், கண்போன போக்கிலே கால் போகலாமா” பாடல் வரிகள் மூலம் வாழ்க்கைக்கான எதார்த்த தத்துவங்களை தனது வரிகளில் காட்டி பசுமரத்தாணியாய் நெஞ்சில் பதிய வைத்தவர் தான் வாலி. ”ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம், துள்ளுவதோ இளமை” பாடல் வரிகளால் ஒவ்வொரு இளைஞரின் மனதையும் துள்ள விட்டார். 

இப்படி நண்பன், காதல், தாய்பாசம், தத்துவம் என அனைத்து விதமான உணர்வுகளையும் தனது பேனா நுனியில் நிறுத்திய வாலி 2013ம் ஆண்டு இதே நாளில் நுரையீரல் தொற்று காரணமாக விண்ணுலகை அடைந்தார். கற்பனையில் கவிதை படைப்பவனாக மட்டு இல்லாமல், ஓவியக்கவிஞனாகவும், நகைச்சுவை உணர்வுக்கு பஞ்சமில்லாதவனாகவும் இருந்த வாலி சந்தரகாந்த், எதையும் தாங்கும் இதயம், படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை, அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன், காவல் காரன், ஒலி விளக்கு, குடியிருந்த கோயில், அடிமைப்பெண், இருகோடுகள், நீரும் நெருப்பும், உலகம் சுற்றும் வாலிபன், பாரத விலாஸ், நினைத்தனை முடிப்பவன், அன்னை ஓர் ஆலயம், அன்புக்கு நான் அடிமை, வாழ்வே மாயம், அடுத்த வாரிசு, தங்க மகன், பாயும் புலி, தாய் வீடு, தர்மத்தின் தலைவர், ஊர்காவலன், நான் சிவப்பு மனிதன், படிக்காதவன், நல்லவனுக்கு நல்லன், மௌன ராகம், கிழக்கு வாசல், ராஜ நடை, இந்தியன், காதலர் தினம், ஹேராம், பிரியமானவளே, கஜினி, உழைப்பாளி, சந்திரமுகி, தேவர் மகன், காதலன், எஜமான், சிவாஜி, சென்னை 600028, தசாவரதாரம் நாடோடிகள், ஆதவன், கோவா, அயன், மங்காத்தா, எதிர்நீச்சல் படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். 

எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி - கமல், விஜய்- அஜித், தனுஷ் - சிம்பு என அடுத்தடுத்த தலைமுறை ஹீரோக்களுக்கு பாடல் எழுதிய ஒரே கவிஞர் வாலி தான். 

“எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன்.
ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்.”

இது கண்ணதாசன் மறைவுக்கு வாலி எழுதிய இரங்கல் குறிப்பு. இன்று அவரது வரிகள் அவருக்கே இரங்கல் தெரிவிப்பதாக உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

காரில் சென்ற பாக்யராஜ்.. கல்லால் அடிக்கப்போன சுந்தர்ராஜன் - நட்புக்குள் நடந்தது என்ன?
காரில் சென்ற பாக்யராஜ்.. கல்லால் அடிக்கப்போன சுந்தர்ராஜன் - நட்புக்குள் நடந்தது என்ன?
Sundarrajan:
Sundarrajan: "நான் இடைஞ்சலா இருப்பேனு பாக்யராஜ் நினைச்சுட்டான்.." இயக்குனர் சுந்தர்ராஜன் வேதனை
Sundarrajan:
Sundarrajan: "1ம் வகுப்பு முதல் நண்பன்.." பாரதிராஜாவிடம் பாக்யராஜ் சென்றது எப்படி? மனம் திறந்த சுந்தர்ராஜன்
Parijatham: ஹனிமூனில் விஷால் - இசை நெருக்கம்.. பாரிஜாதத்தில் கிளுகிளுப்பு!
Parijatham: ஹனிமூனில் விஷால் - இசை நெருக்கம்.. பாரிஜாதத்தில் கிளுகிளுப்பு!
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடியின் 15 லட்சம் வாக்குறுதி என்னாச்சு? அதிமுக எதிர்க்கட்சியாக கூட ஜெயிக்காது: அமைச்சர் இ. பெரியசாமி பரபரப்பு பேட்டி!
மோடியின் 15 லட்சம் வாக்குறுதி என்னாச்சு? அதிமுக எதிர்க்கட்சியாக கூட ஜெயிக்காது: அமைச்சர் இ. பெரியசாமி பரபரப்பு பேட்டி!
PTR Slams BJP:
PTR Slams BJP: "டெல்லியில் சர்வாதிகாரி அரசு! தமிழ்நாடு தலைகுனியாது.." பாஜக-வை விளாசிய பி.டி.ஆர்
கன்னியாகுமரியில் IT புரட்சி! டைடல் நியோ பூங்கா: இளைஞர்களின் கனவு நனவாகுமா? வேலைவாய்ப்பு உறுதி!
கன்னியாகுமரியில் IT புரட்சி! டைடல் நியோ பூங்கா: இளைஞர்களின் கனவு நனவாகுமா? வேலைவாய்ப்பு உறுதி!
Nallakannu: ஆயுதம் ஏந்தி.. போராட்டங்களால் நிறைந்த நல்லகண்ணு வாழ்க்கை; மீசையே வைக்காத காரணம் தெரியுமா?
Nallakannu: ஆயுதம் ஏந்தி.. போராட்டங்களால் நிறைந்த நல்லகண்ணு வாழ்க்கை; மீசையே வைக்காத காரணம் தெரியுமா?
Nissan Tekton Review: மாஸ் காட்டப்போகும் நிசான்.. வரப்போது Nissan Tekton - விலை எவ்ளோ தெரியுமா?
Nissan Tekton Review: மாஸ் காட்டப்போகும் நிசான்.. வரப்போது Nissan Tekton - விலை எவ்ளோ தெரியுமா?
Nallakannu Death: இவர்தான் மாமனிதன்..! நல்லகண்ணுவின் உடலை என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா?
Nallakannu Death: இவர்தான் மாமனிதன்..! நல்லகண்ணுவின் உடலை என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா?
Lunar Eclipse 2026: சந்திர கிரகணம் எப்போது? எங்கெல்லாம் தெரியும்? என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது? - முழு விவரம்
சந்திர கிரகணம் எப்போது? எங்கெல்லாம் தெரியும்? என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது? - முழு விவரம்
Nallakannu: நல்லகண்ணு: மகள் காது குத்து முதல் விருதுப் பணம் வரை; வியக்க வைக்கும் தியாகம்!
Nallakannu: நல்லகண்ணு: மகள் காது குத்து முதல் விருதுப் பணம் வரை; வியக்க வைக்கும் தியாகம்!
Embed widget