மேலும் அறிய

Rathna kumar: 'லியோ’ விழாவில் சர்ச்சை பேச்சு.. வச்சு செய்த நெட்டிசன்கள்.. சோசியல் மீடியாவுக்கு டாட்டா காட்டிய ரத்னகுமார்..!

லியோ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் ரத்னகுமார் பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

லியோ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் ரத்னகுமார் பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்த லியோ படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில், வசூலில் ரூ.540 கோடியை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லியோ படத்துக்கு வசனம் எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். இவர் மேயாத மான், ஆடை, குலு குலு ஆகிய 3 படங்களை இயக்கியுள்ள நிலையில், ரசிகர்களிடையே மிகப்பிரபலமான ஒருவராக ரத்னகுமார் உள்ளார். 

அதற்கு காரணம் லியோ படத்தின் அப்டேட்டுகளை ஒவ்வொன்றாக அவர் தான் முதலில் தெரிவிக்க தொடங்கினார். ரத்னகுமாருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உருவானது. அவர் என்ன போஸ்ட் போட்டாலும் அது ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஒரு கட்டத்தில்  லியோ படத்தின் பாதியை அவர் தான் இயக்கினார் என்றெல்லாம் பேசப்பட்டது. மேலும் படத்துக்கு எதிர்மறையான விமர்சனம் எழுந்தபோது, சமூக வலைத்தளத்தில் அப்படிப்பட்ட விமர்சனங்கள் சொன்னவர்களுக்கு பதிலடியும் கொடுத்தார். இப்படியான நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா நேற்று (நவம்பர் 1) சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய ரத்னகுமார், ‘தனக்கு சினிமா ஆசை வர காரணமே விஜய் தான் என்றும், அவரின் வாழ்க்கை மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் எனவும் புகழ்ந்து தள்ளினார். தொடர்ந்து பேசிய அவர், விஜய் எல்லோரையும் சமமாக தான் நடத்துவார் என கூறிவிட்டு எல்லாத்தையும் தாண்டி எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும்’ என ஒரு வார்த்தையையும் சொன்னார். அவ்வளவு தான் சமூக வலைத்தளங்கள் ஃபயர் மோடில் கொதிக்க தொடங்கியது. 

ஏற்கனவே ஜெயிலர் ஆடியோ விழாவில், ரஜினிகாந்த் ‘காக்கா - கழுகு’ கதை ஒன்றை சொன்னார். அதில் காக்கா என நடிகர் விஜய்யை குறிப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. அந்த கதையில் ரஜினி, ‘கழுகு பறக்கும் உயரத்துக்கு என்ன முயற்சித்தாலும் காகம் பறக்காது. அப்படி வாழ்க்கையில நாம் எதைப் பற்றியும் யோசிக்காமல் இலக்கை நோக்கி சென்றால் முன்னேறி விடலாம்’ என சொன்னார். ரத்னகுமாரோ, ‘எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும்' என சொன்னார். ஆக இரண்டையும் கலந்துக்கட்டி ரத்னகுமார் மீது விமர்சனம் கடுமையாக எழுந்தது. 

குறிப்பாக இப்படி ஒரு கருத்தை தன் முன்னாடி சொல்ல விஜய் அனுமதி அளித்திருக்க கூடாது என பலரும் தெரிவித்தனர். இந்த நிலையில் ரத்னகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘எழுத்து பணி உள்ளதால் நான் ஆஃப்லைனுக்கு செல்லவுள்ளேன். என்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பு வரும் வரை சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது காலத்திற்கு இடைவெளி எடுக்க போகிறேன்.  விரைவில் சந்திப்போம்’ என தெரிவித்துள்ளார். ஆனால் லியோ பட வெற்றி விழாவில் பேசிய கருத்துக்கு எழுந்த எதிர்ப்பு தான் அவர் சோசியல் மீடியாவில் இருந்து வெளியேற காரணம் என பலரும் தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget