மேலும் அறிய

Rathna kumar: 'லியோ’ விழாவில் சர்ச்சை பேச்சு.. வச்சு செய்த நெட்டிசன்கள்.. சோசியல் மீடியாவுக்கு டாட்டா காட்டிய ரத்னகுமார்..!

லியோ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் ரத்னகுமார் பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

லியோ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் ரத்னகுமார் பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்த லியோ படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில், வசூலில் ரூ.540 கோடியை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லியோ படத்துக்கு வசனம் எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். இவர் மேயாத மான், ஆடை, குலு குலு ஆகிய 3 படங்களை இயக்கியுள்ள நிலையில், ரசிகர்களிடையே மிகப்பிரபலமான ஒருவராக ரத்னகுமார் உள்ளார். 

அதற்கு காரணம் லியோ படத்தின் அப்டேட்டுகளை ஒவ்வொன்றாக அவர் தான் முதலில் தெரிவிக்க தொடங்கினார். ரத்னகுமாருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உருவானது. அவர் என்ன போஸ்ட் போட்டாலும் அது ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஒரு கட்டத்தில்  லியோ படத்தின் பாதியை அவர் தான் இயக்கினார் என்றெல்லாம் பேசப்பட்டது. மேலும் படத்துக்கு எதிர்மறையான விமர்சனம் எழுந்தபோது, சமூக வலைத்தளத்தில் அப்படிப்பட்ட விமர்சனங்கள் சொன்னவர்களுக்கு பதிலடியும் கொடுத்தார். இப்படியான நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா நேற்று (நவம்பர் 1) சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய ரத்னகுமார், ‘தனக்கு சினிமா ஆசை வர காரணமே விஜய் தான் என்றும், அவரின் வாழ்க்கை மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் எனவும் புகழ்ந்து தள்ளினார். தொடர்ந்து பேசிய அவர், விஜய் எல்லோரையும் சமமாக தான் நடத்துவார் என கூறிவிட்டு எல்லாத்தையும் தாண்டி எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும்’ என ஒரு வார்த்தையையும் சொன்னார். அவ்வளவு தான் சமூக வலைத்தளங்கள் ஃபயர் மோடில் கொதிக்க தொடங்கியது. 

ஏற்கனவே ஜெயிலர் ஆடியோ விழாவில், ரஜினிகாந்த் ‘காக்கா - கழுகு’ கதை ஒன்றை சொன்னார். அதில் காக்கா என நடிகர் விஜய்யை குறிப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. அந்த கதையில் ரஜினி, ‘கழுகு பறக்கும் உயரத்துக்கு என்ன முயற்சித்தாலும் காகம் பறக்காது. அப்படி வாழ்க்கையில நாம் எதைப் பற்றியும் யோசிக்காமல் இலக்கை நோக்கி சென்றால் முன்னேறி விடலாம்’ என சொன்னார். ரத்னகுமாரோ, ‘எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும்' என சொன்னார். ஆக இரண்டையும் கலந்துக்கட்டி ரத்னகுமார் மீது விமர்சனம் கடுமையாக எழுந்தது. 

குறிப்பாக இப்படி ஒரு கருத்தை தன் முன்னாடி சொல்ல விஜய் அனுமதி அளித்திருக்க கூடாது என பலரும் தெரிவித்தனர். இந்த நிலையில் ரத்னகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘எழுத்து பணி உள்ளதால் நான் ஆஃப்லைனுக்கு செல்லவுள்ளேன். என்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பு வரும் வரை சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது காலத்திற்கு இடைவெளி எடுக்க போகிறேன்.  விரைவில் சந்திப்போம்’ என தெரிவித்துள்ளார். ஆனால் லியோ பட வெற்றி விழாவில் பேசிய கருத்துக்கு எழுந்த எதிர்ப்பு தான் அவர் சோசியல் மீடியாவில் இருந்து வெளியேற காரணம் என பலரும் தெரிவித்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget