மேலும் அறிய

Kavingar Kannadasan: சாகாது கம்பனவன் பாட்டு... கண்ணதாசனுக்கும் பொருந்தும்.. கவியரசர் நினைவலைகள்!

Kavingar Kannadasan: கண்ணதாசனின் வரிகள் துயரத்தில் இருக்கும் போது ஆறுதலாகவும் தாலாட்டாகவும், மனம் நொந்தவனுக்கு உத்வேகமாகவும் இருக்கும்.

மொழிகளிலே மூத்த மொழியான தமிழ் மொழிக்கு கடவுள் கொடுத்து வியக்கத்தக்க கொடை தான் ஈடு இணையில்லா கவியரசு கண்ணதாசன். இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நமது நெஞ்சங்களை விட்டும் செவியை விட்டும் நீங்காத வரிகளைத் தந்து தனியிடத்தில் குடிகொண்டு இருப்பார் கண்ணதாசன் என்றால் அது மிகையல்ல.

தனது வரிகளால் நம்மை ஆட்கொண்ட அந்தப் பிறவி கலைஞருக்கு ஈடு இணையாக இந்த உலகில் இதுவரையில் யாரும் பிறக்கவில்லை. அவருக்கு நிகர் அவர் மட்டுமே என்பது அவரின் தனி பெருமை. இந்தத் தலைமுறை கவிஞனின் 42வது நினைவு தினம் இன்று...

Kavingar Kannadasan: சாகாது கம்பனவன் பாட்டு... கண்ணதாசனுக்கும் பொருந்தும்.. கவியரசர் நினைவலைகள்!

சென்னை வருகை:

 சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் 1927ஆம் ஆண்டு பிறந்த இந்த மண்ணின் மைந்தன் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்து இருந்தாலும், தமிழ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு பத்திரிகையாளனாக வேண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என தன்னுடைய ஆசைக்காக வீட்டை விட்டு 16 வயதில் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
 

முதல் திரைப்பாடல் :

தான் விரும்பியபடியே பத்திரிகைகளுக்கு கவிதை, நாடகம், சிறுகதைகள், நாவல்கள் எழுதி வந்தவருக்கு சினிமா பாடல்களுக்கு வரிகள் எழுத வேண்டும் என ஆசை வந்தது. அப்படி அவரின் அந்த தாகத்தை தீர்த்தவர் தான் இயக்குநர் கே. ராம்நாத். ஜூபிடர் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான 'கள்வனின் காதலி' திரைப்படத்தில் ”கலங்காதிரு மனமே... உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்ற பாடலின் வரிகள் தான் கண்ணதாசன் எழுதிய முதல் திரைப்பாடல்.

 
Kavingar Kannadasan: சாகாது கம்பனவன் பாட்டு... கண்ணதாசனுக்கும் பொருந்தும்.. கவியரசர் நினைவலைகள்!
 

கொடி கட்டி பறந்தார் :

அன்று திரைத்துறையில் தொடங்கிய அவரது பயணம் தொடர்ந்து 30 ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பாக பயணித்தது. அவரின் பாடல்கள் வரிகளுக்காக அனைவரும் காத்து கொண்டு இருக்கும் நிலை ஏற்பட்டது. அவரின் பாடல் வரிகளுக்கு இசையமைப்பதை பாடுவதை மிக பெரிய பாக்கியமாக கருதினார்கள். 
 
அந்தக் காலகட்டத்தில் உச்சம் தொட்ட நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என ஏராளமான நடிகர்களுக்கு கண்ணதாசன் எழுதிய எண்ணற்ற பாடல்கள் இன்று வரை ஒலித்து கொண்டு இருக்கின்றன.  பாடலாசிரியர் மட்டுமின்றி கதை, வசனம், தயாரிப்பு என அனைத்திலும் இறங்கி அடித்தார். கொடிகட்டி பறந்த கண்ணதாசனுக்கு சேமித்து வைக்கும் பழக்கமில்லை. அவரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.

அனுபவக் கவிஞன் :

கண்ணதாசனின் வரிகள் துயரத்தில் இருக்கும் போது ஆறுதலாகவும் தாலாட்டாகவும், மனம் நொந்தவனுக்கு உத்வேகமாகவும் இருக்கும். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகளை எழுதியதோடு காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான கவிதைகள் நாவல்களையும் எழுதியுள்ளார்.
அவரின் பாடல்கள் பெரும்பாலும் அனுபவத்தால் எழுதப்பட்டவை என்பதால் சூழலுக்கு ஏற்ற வகையில் பாடலின் வரிகளை புனைவதில் அவருக்கு இணை யாருமில்லை. அதனால் அவரின் வரிகள் காலம் கடந்தும் உணர்வுகளால் தலைமுறைகளை கடந்து மேலோங்கி நிற்கிறது.

அரசியல் வாழ்க்கை :

பன்மொழி புலவராக இருந்த கண்ணதாசனுக்கு அரசியலிலும் ஆர்வம் இருந்ததால் அதிலும் களம் இறங்கிப் பார்த்தார். ஆனால் அவரின் வெளிப்படையான பேச்சு, நேர்மை, அஞ்சாத விமர்சனங்கள் இவை எதுவும் அரசியலுக்கு சரிபடாததால் அதில் இருந்து விலகினார். கண்ணதாசள் மறைந்து 42 ஆண்டுகள் கடந்தும், அவரது படைப்புகள் இன்றும் நமக்கு மத்தியில் இந்தத் தலைமுறையினரைக் கடந்த படைப்புகளாக வாழ்ந்து நம்மை ஆற்றுப்படுத்தவும் உத்வேகம் அளிக்கவும் செய்கின்றன. அவரை நினைவுகூர்வோம்!

தலைப்பு செய்திகள்

The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
ஜனநாயகன் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கு சர்பிரைஸ்...க்ளைமேக்ஸில் 41 நொடி காட்சிகள் இணைப்பு
ஜனநாயகன் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கு சர்பிரைஸ்...க்ளைமேக்ஸில் 41 நொடி காட்சிகள் இணைப்பு

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!
நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
Hyundai EV: ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் 500KM ரேஞ்ச் - ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி - மற்ற அம்சங்கள் எப்படி?
ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் 500KM ரேஞ்ச் - ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி - மற்ற அம்சங்கள் எப்படி?
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
Cheapest Diesel SUV: நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
Embed widget