மேலும் அறிய

‛நஷ்டஈடு தரவான்னு அஜித் கேட்டாரு... ஒரு மாதம் பேசவே இல்ல...’ -11 ஆண்டு பஞ்சாயத்தை விளக்கும் ஜாக்குவார் தங்கம்!

‛‛அஜித் உடன் ஒரு மாதம் மனகசப்பு இருந்தது. ஒரு மாதத்திற்கு பின் பேச ஆரம்பித்தோம். அப்போது சரத்குமார், விஜயகாந்த் ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்தனர். அவர்கள் அழைத்து எங்களை சமரசம் செய்ய முயன்றனர்’’

அஜித் ரசிகர்கள்-ஜாக்குவார் தங்கம் போர் இன்னும் ஓய்ந்த பாடில்லை. கருணாநிதி முதல்வராக இருந்த போது, அவருக்கு சினிமாத்துறை சார்பில் வைக்கப்பட்ட பாராட்டு விழாவில், நடிகர் அஜித் பேசியதும், அதற்கு ரஜினி ஆதரவு கொடுத்ததும் இன்றும் பலருக்கும் நியாபகம் இருக்கும். ஆனால், அதே பேச்சை காரணம் காட்டி சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், அஜித்தை விமர்சித்ததும், அதற்கு எதிரொலியாக அஜித் ரசிகர்கள் ஜாக்குவார் தங்கம் வீட்டை உடைத்து சூறையாடியதும் நடந்தது. அது நடந்து பல ஆண்டுகள் ஆனாலும், இன்னும் ஜாக்குவார் தங்கத்தை இணையத்தை ஒரு கை பார்த்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள். சமீபத்தில் கூட, அஜித் ரசிகர்களால் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக ஜாக்குவார் தங்கம் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், அப்போது நடந்த என்ன என்பது குறித்து ஜாக்குவார் தங்கம் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இதோ அந்த பேட்டி...


‛நஷ்டஈடு தரவான்னு அஜித் கேட்டாரு... ஒரு மாதம் பேசவே இல்ல...’ -11 ஆண்டு பஞ்சாயத்தை விளக்கும் ஜாக்குவார் தங்கம்!

‛‛கலைஞருக்கு பாராட்டு விழா நடந்த போது, அஜித் தமிழை பற்றி ஒரு கருத்து பேசினார். அதனால் நான் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தேன். அதன் பின் அவரது ஆதரவாளர்கள் என் வீட்டை அடித்து உடைத்தனர். பின்னர் நடிகர் சங்கத்தில் வந்து நடந்த சம்பவத்திற்கு அஜித் வருத்தம் தெரிவித்தார். நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறினார். நடந்த சம்பவத்திற்கும் எனக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்றார். சேதத்திற்கு நஷ்டஈடு தருகிறேன் என்றார். நான் தான் அதெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டேன். அந்த காலகட்டத்தில் அந்த கருத்து காரசாரமாக இருந்தது. எனக்கு என தாய் மொழி மீது பற்று உள்ளது.

ரஷ்யாவில் குட்மார்னிங் என்று சொன்னால், பளார் என்று அடித்து விடுவார்கள். காரணம், தாய் மொழி மீது அங்கு அவ்வளவு பற்று. அவர்கள் மொழியில் தான் வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று வைத்திருக்கிறார்கள். ஷாஜகானில் பைக் பைட் ஒன்று வைத்தேன். இந்தியாவிலேயே பைட் சீனுக்கு ஒன்மோர் கேட்டது அந்த சண்டைக்கு மட்டும் தான்.

விஜய் பெற்றோருடன் சென்று படம் பார்த்தோம். ஒன்ஸ்மோர் கேட்டார்கள். அந்த சண்டையை பார்த்து கன்னட படத்திற்கு ஒரே நாளில் அது போன்ற சண்டை காட்சி கேட்டனர். 5 லட்சம் தருவேன் என்றார்கள். எத்தனை கோடி கேட்டாலும் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டேன். கன்னடாவில் தமிழர்களை அடிப்பார்கள். அதனால் எனக்கு அங்கு தொழில் செய்து, சம்பாதிக்க விருப்பமில்லை. அந்த அளவிற்கு எனக்கு என் மொழி மீது பற்று உண்டு.


‛நஷ்டஈடு தரவான்னு அஜித் கேட்டாரு... ஒரு மாதம் பேசவே இல்ல...’ -11 ஆண்டு பஞ்சாயத்தை விளக்கும் ஜாக்குவார் தங்கம்!

அஜித் உடன் ஒரு மாதம் மனகசப்பு இருந்தது. ஒரு மாதத்திற்கு பின் பேச ஆரம்பித்தோம். அப்போது சரத்குமார், விஜயகாந்த் ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்தனர். அவர்கள் அழைத்து எங்களை சமரசம் செய்ய முயன்றனர். அப்போது அஜித் மனம் திறந்து பேசினார். எனக்கு சோறு போடுவது தமிழ் தான். நான் ஏன் தமிழை தவறாக பேசப்போகிறேன் என அஜித் கூறினார். அதுமட்டுமல்லால் சில பிரச்சனைகளுக்கு தன்னுடன் இருந்தவர்கள் தான் காரணம் என்றார். அவர்களும் மன்னிப்பு கேட்டனர். 

நிறைய நடிகர்கள் என்னுடன் பணியாற்றியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் என்னுடைய ஸ்டைலில் தான் நடிக்க விரும்புவர். விஜயசாந்தி, ராம்கி எல்லாம் நான் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். உதவியாளர்களை வைத்தால் கூட, கட்டாயம் வர வேண்டும் என்று அன்பு கட்டளை போடுவார்கள். அதை தட்டமுடியாது,’’ என அந்த பேட்டியில் ஜாக்குவார் தங்கம் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Embed widget