மேலும் அறிய

Imran Khan : வீட்டை விட்டு வெளியில் வராமல் அடைந்து கிடந்தேன்.. மனம் திறந்த இம்ரான் கான்

Imran Khan : நடிகர் இம்ரான் கான் தன்னுடைய மனைவி அவந்திகா மாலிக்கை விவாகரத்து செய்த பிறகு எதிர்கொண்ட மன அழுத்தத்தை பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார்.

பாலிவுட் திரையுலகில் 2008ம் ஆண்டு வெளியான 'இல் ஜானே து... யா ஜானே நா' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகர் இம்ரான் கான். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல பாராட்டை பெற்ற இப்படத்தில் இம்ரான் நடிப்பும் பாராட்டுகளை குவித்தது. அதன் தொடர்ச்சியாக  ஹேட் லவ் ஸ்டோரிஸ், டெல்லி பெல்லி, மேரே பிரதர் கி துல்ஹான், ஏக் மெயின் அவுர் ஏக் து உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2015ம் ஆண்டு வெளியான 'கட்டி பட்டி' படத்தில் நடித்திருந்தார். 

Imran Khan : வீட்டை விட்டு வெளியில் வராமல் அடைந்து கிடந்தேன்.. மனம் திறந்த இம்ரான் கான்

 

இம்ரான் கான் பர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை பல மன அழுத்தங்களை சந்தித்துள்ளார். 2011ம் ஆண்டு இம்ரான் கான்  - அவந்திகா மாலிக் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. சந்தோஷமாக இருந்து வந்த அவர்களின் வாழ்க்கையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 

இந்நிலையில் தான் இம்ரான் கானுக்கு நடிகை லேகா வாஷிங்டன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். அவர்கள் இருவரும் டேட்டிங் செய்யும் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருவரும் காதலித்து வருவதாக வெளிப்படையாக தெரிவித்தனர். நடிகை லேகா வாஷிங்டன் கோலிவுட்டில் ஜெயம்கொண்டான், கல்யாண சமையல் சாதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.

இம்ரான் கான் தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு எதிர்கொண்ட மன வலிகளை சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருந்தார். அது தொடர்பாக அவர் பேசுகையில் "2019ம் ஆண்டு விவாகரத்து பெற்ற பிறகு நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். அவை நான் எதிர்கொண்ட கொடுமையான காலங்கள். ஒரு வாரமாக நான் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டின் கதவு ஜன்னல் என அனைத்தையும்  பூட்டிக்கொண்டு படுக்கையறையிலேயே படுத்து இருந்தேன். அந்த இறுக்கமான சூழலில் இருந்து மெல்ல மெல்ல நான் மீண்டு வந்தேன்.   

Imran Khan : வீட்டை விட்டு வெளியில் வராமல் அடைந்து கிடந்தேன்.. மனம் திறந்த இம்ரான் கான்

அதற்கு பிறகு தான் நடிகை லேகா வாஷிங்டனை சந்தித்தேன். அவருடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறிய பிறகு தான் என் வாழ்க்கையில் மாற்றங்கள் வந்தன. புது அத்தியாயத்தை துவங்கியதுபோல இருந்தது. கொரோனா காலகட்டத்தில் நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வந்தோம். லேகா வாஷிங்டன் உடன் நான் சேர்ந்து வாழ்ந்து வந்தாலும் எனக்கும் அவந்திகா மாலிக்கும் பிறந்த பெண் குழந்தையை நாங்கள் இருவருமே பார்த்து கொள்கிறோம். ஒரு குழந்தையின் பெற்றோராக என்னென்ன கடமைகள் உள்ளதோ அவை அனைத்தையும் நாங்கள் இருவரும் செய்து வருகிறோம்" என தெரிவித்து இருந்தார் நடிகர் இம்ரான் கான். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget