![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
dhansuh | selvarahavan | ‛என் அண்ணன்தான் எனக்கு God Father..அவருக்கு நன்றியுள்ளவனா இருப்பேன்’ - தனுஷ் உருக்கம் !
தேஜாவு (ஒரு சம்பவம் இதற்கு முன்னால் நடந்தது போல உணர்தல்) என்னும் உணர்வினை அடிப்படையாக கொண்டு படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
![dhansuh | selvarahavan | ‛என் அண்ணன்தான் எனக்கு God Father..அவருக்கு நன்றியுள்ளவனா இருப்பேன்’ - தனுஷ் உருக்கம் ! EXCLUSIVE: Dhanush says 'my brother is my godfather'; Reacts to rumours on playing dual role in Naane Varuven dhansuh | selvarahavan | ‛என் அண்ணன்தான் எனக்கு God Father..அவருக்கு நன்றியுள்ளவனா இருப்பேன்’ - தனுஷ் உருக்கம் !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/30/5595c78eb00817cc2ced63812877bf31_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் . ஒரு காலத்தில் இவரெல்லாம் என்னப்பா நடிகர் என விமர்சிக்கப்பட்ட நடிகர் , தற்போது தன்னை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கு , இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகருள் ஒருவராக உருவெடுத்திருக்கிறார். கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட் , ஹாலிவுட் என பல சினிமா துறைகளில் தனுஷ் வெற்றி முகம் கண்டு வருகிறார். பாலிவுட்டில் அம்பிகாபதி என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமான தனுஷ் தற்போது கலாட்டா கல்யாணம் என்னும் இந்தி மொழி திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் தனுஷ் நடிப்பிற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
View this post on Instagram
இந்த நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த தனுஷ் , தனது அண்ணன் கூறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதாவது “ என் அண்ணன் தான் என் காட் ஃபாதர், அவர்தான் என்னை உருவாக்கினார். அவர்தான் எனக்கு நடிப்பை கற்றுக்கொடுத்தார். அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் இப்படியான நிலையை அடைந்திருக்கிறேன் என்றால் அதற்கு அவர்தான் காரணம். இன்னும் தொழில் ரீதியாக எங்களுக்குள் எந்த மாற்றமும் இல்லை. அவர் நான் படப்பிடிப்புக்கு செல்லும் போது அவர் என்ன சொன்னாலும் அதனை கேட்டு சரண்டர் ஆகிவிடுவேன் “ என பெருமிதமாக கூறியுள்ளார்.
செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணி ஐந்தாவது படமாக உருவாகி வருகிறது ‘நானே வருவேன்’. தேஜாவு (ஒரு சம்பவம் இதற்கு முன்னால் நடந்தது போல உணர்தல்) என்னும் உணர்வினை அடிப்படையாக கொண்டு படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் முதல் ஷெடியூல் முடிந்த நிலையில் , இறுதிக்கட்ட படப்பிடிப்பை வருகிற ஜனவரி மாதத்திற்குள் முடித்துவிட திட்டமிட்டிருப்பதாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
தற்போது வாத்தி , அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ஒரு படம் , இயக்குநர் நரேனுடன் மாறன் , நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களை கையில் வைத்திருக்கிறார் தனுஷ். மாறன் படத்தின் அடுத்த போஸ்டர் நாளை வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் வாத்தி படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் தனுஷ் என கூறப்படுகிறது. இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)