மேலும் அறிய

Ayodhya Ram Mandir: பரபரப்பான ராமர் கோவில் திறப்பு விழா; சூப்பர் ஸ்டாரைப் பார்த்ததும் மோடி கொடுத்த ஸ்பெஷல் ரியாக்‌ஷன்

Ayodhya Ram Mandir: உத்திர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று அதாவது ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது.

நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான ஊடகங்களில் இடம் பெற்றுள்ள தலைப்புச் செய்தி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு தொடர்பானதாகத்தான் உள்ளது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்ததும்தான். இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது. 

இந்த குடமுழுக்கு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார்  எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இப்படியான நிலையில், இன்று நடைபெற்ற ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். 

ராமர் கோவில் திறப்பு விழாவின் தொடக்கம் முதல் இறுதி வரை இருந்த ரஜினிகாந்த், அங்கிருந்து கிளம்பும்போது தனது அனுபவத்தை ஊடகவியலாளரிடம் பகிர்ந்து கொண்டார். அதில் “ இந்த வரலாற்று தருணத்தில் நான் பங்கேற்றது எனது பாக்கியமாக கருதுகின்றேன். இனி ஒவ்வொரு ஆண்டும் நான் தவறாமல் இங்கு வருவேன். இன்று இங்கு நடந்தது ஒரு இதிகாச நிகழ்வு” என பேசியுள்ளார். 

கோவில் திறப்பு நிகழ்வில் கலந்து கொள்ள வந்த ரஜினிகாந்த், விழா மேடையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விருந்தினர்களுக்கான இடத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்தார். சிறப்பு விருந்தினர்களுக்கு வணக்கம் சொல்லிக்கொண்டு வந்த பிரதமர் மோடி சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்த்ததும், மிகவும் உற்சாகமாகி தனது இரண்டு கரங்களையும் உயர்த்தி ஏதோ கேட்டார். இதற்கு ரஜினியும் ஏதோ பதில் சொன்னார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

ராமர் கோவில் குறித்த முக்கிய தகவல்கள்

அயோத்தி ராமர் கோயில் மொத்தம் 1800 கோடி ரூபாய் செலவில் 2.7 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. கோயில் கட்டப்பட்ட பகுதி 57,400 சதுர அடிகளைக் கொண்டுள்ளது. இது கட்டிடக்கலை முயற்சியின் பிரமாண்டத்தையும், அளவையும் பிரதிபலிக்கிறது.

கோயிலானது மொத்தமாக 360 அடி நீளமும் 235 அடி அகலமும் கொண்டிருக்க, அதன் சிகரத்தையும் சேர்த்து 161 அடியை உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கணிசமான அமைப்பு மூன்று தளங்களில் பரவியுள்ளது, ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டுள்ளது. போதிய அளவிலான இடவசதி வழங்கப்பட்டு இருப்பது, அங்கு பல்வேறு செயல்பாடு மற்றும் சடங்குகள் நடைபெற வழிவகை செய்கிறது. 

கோயிலின் அடித்தளம் கணிசமான எண்ணிக்கையிலான தூண்களால் ஆதரிக்கப்படுகிறது. தரை தளத்தில் 160 தூண்கள் உள்ளன. முதல் தளம் 132 தூண்களாலும், இரண்டாவது தளம், சிக்கலான வடிவமைப்பு மற்றும் விவரங்களைக் காண்பிக்கும், 74 தூண்களாலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இவை கோயிலின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மை மற்றும் அழகியலுக்கு பங்களிக்கிறது.

கோயிலுக்கு கீழே 2000 அடி ஆழத்தில் ஒரு டைம் கேப்ஸ்யூல் புதைக்கப்பட்டுள்ளது. அதில் ராமர் கோயில் மற்றும் ராமர் பற்றிய தகவல்கள் பொறிக்கப்பட்ட செப்பு தகடு உள்ளது. வருங்கால சந்ததியினருக்கு கோயிலின் விவரங்களை கடத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத முக்கியத்துவத்திற்கு அப்பால், ராமர் கோயில் ஒரு கலாசார மையமாக கருதப்படுகிறது. கல்வி இடங்கள் மற்றும் தியானத்திற்கான பகுதிகளைச் சேர்ப்பது ஆன்மீக, கலாச்சார மற்றும் கல்வி நோக்கங்களை வளர்ப்பதில் கோயிலின் பங்களிப்பை பிரதிபலிக்கிறது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணியில் எஃகு அல்லது இரும்பு முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு ஒரு தனித்துவமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. பாரம்பரிய கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பன்சி பஹர்பூர் இளஞ்சிவப்பு மணற்கற்கள் பிரதான கோயில் அமைப்பைக் கொண்டுள்ளது. கிரானைட் கற்கள் அஸ்திவாரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இது கோயிலுக்கு நீடித்த அடித்தளத்தை வழங்குகிறது. கிரானைட்டின் பயன்பாடு, கோயிலின் ஒட்டுமொத்த ஆயுளுக்கு பங்களிப்பதோடு,  கட்டமைப்பில் வலிமையையும் சேர்க்கிறது. 

கட்டுமானமானது "ராம் ஷிலாஸ்" என்று அழைக்கப்படும் சிறப்பு செங்கற்களை உள்ளடக்கியது, அவற்றில் "ஸ்ரீ ராம்" என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கற்கள் ராமர் சேது பாலம் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கற்களை பறைசாற்றும் விதமாக பயன்படுத்தப்பட்டுள்ளன

நேபாளத்தின் கண்டகி ஆற்றில் காணப்படும் புனித புதைபடிவமான ஷாலிகிராம் பாறை ராமர் கோயில் கட்டுமானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்து மதத்தில் போற்றப்படும், ஷாலிகிராம் விஷ்ணுவின் அடையாளமாகக் கருதப்படுகிறது, இது கோயிலுக்கு ஆன்மீக பரிமாணத்தை சேர்க்கிறது.

2587 மத வழிபாட்டுத் தலங்களின் புனித மண்ணைக் கொண்டு ராமர் கோயிலின் அடித்தளம் கட்டப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவிற்கு தாய்லாந்தின் அயுத்யா நகரில் இருந்தும் மண் அனுப்பப்பட்டுள்ளது. கூடுதலாக, தாய்லாந்தில் உள்ள சாவ் பிரயா, லோப் பூரி மற்றும் பா சாக் ஆகிய மூன்று நதிகளில் இருந்தும் தண்ணீர் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Embed widget