மேலும் அறிய

Ayodhya Ram Mandir: பரபரப்பான ராமர் கோவில் திறப்பு விழா; சூப்பர் ஸ்டாரைப் பார்த்ததும் மோடி கொடுத்த ஸ்பெஷல் ரியாக்‌ஷன்

Ayodhya Ram Mandir: உத்திர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று அதாவது ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது.

நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான ஊடகங்களில் இடம் பெற்றுள்ள தலைப்புச் செய்தி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு தொடர்பானதாகத்தான் உள்ளது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்ததும்தான். இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது. 

இந்த குடமுழுக்கு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார்  எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இப்படியான நிலையில், இன்று நடைபெற்ற ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். 

ராமர் கோவில் திறப்பு விழாவின் தொடக்கம் முதல் இறுதி வரை இருந்த ரஜினிகாந்த், அங்கிருந்து கிளம்பும்போது தனது அனுபவத்தை ஊடகவியலாளரிடம் பகிர்ந்து கொண்டார். அதில் “ இந்த வரலாற்று தருணத்தில் நான் பங்கேற்றது எனது பாக்கியமாக கருதுகின்றேன். இனி ஒவ்வொரு ஆண்டும் நான் தவறாமல் இங்கு வருவேன். இன்று இங்கு நடந்தது ஒரு இதிகாச நிகழ்வு” என பேசியுள்ளார். 

கோவில் திறப்பு நிகழ்வில் கலந்து கொள்ள வந்த ரஜினிகாந்த், விழா மேடையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விருந்தினர்களுக்கான இடத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்தார். சிறப்பு விருந்தினர்களுக்கு வணக்கம் சொல்லிக்கொண்டு வந்த பிரதமர் மோடி சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்த்ததும், மிகவும் உற்சாகமாகி தனது இரண்டு கரங்களையும் உயர்த்தி ஏதோ கேட்டார். இதற்கு ரஜினியும் ஏதோ பதில் சொன்னார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

ராமர் கோவில் குறித்த முக்கிய தகவல்கள்

அயோத்தி ராமர் கோயில் மொத்தம் 1800 கோடி ரூபாய் செலவில் 2.7 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. கோயில் கட்டப்பட்ட பகுதி 57,400 சதுர அடிகளைக் கொண்டுள்ளது. இது கட்டிடக்கலை முயற்சியின் பிரமாண்டத்தையும், அளவையும் பிரதிபலிக்கிறது.

கோயிலானது மொத்தமாக 360 அடி நீளமும் 235 அடி அகலமும் கொண்டிருக்க, அதன் சிகரத்தையும் சேர்த்து 161 அடியை உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கணிசமான அமைப்பு மூன்று தளங்களில் பரவியுள்ளது, ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டுள்ளது. போதிய அளவிலான இடவசதி வழங்கப்பட்டு இருப்பது, அங்கு பல்வேறு செயல்பாடு மற்றும் சடங்குகள் நடைபெற வழிவகை செய்கிறது. 

கோயிலின் அடித்தளம் கணிசமான எண்ணிக்கையிலான தூண்களால் ஆதரிக்கப்படுகிறது. தரை தளத்தில் 160 தூண்கள் உள்ளன. முதல் தளம் 132 தூண்களாலும், இரண்டாவது தளம், சிக்கலான வடிவமைப்பு மற்றும் விவரங்களைக் காண்பிக்கும், 74 தூண்களாலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இவை கோயிலின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மை மற்றும் அழகியலுக்கு பங்களிக்கிறது.

கோயிலுக்கு கீழே 2000 அடி ஆழத்தில் ஒரு டைம் கேப்ஸ்யூல் புதைக்கப்பட்டுள்ளது. அதில் ராமர் கோயில் மற்றும் ராமர் பற்றிய தகவல்கள் பொறிக்கப்பட்ட செப்பு தகடு உள்ளது. வருங்கால சந்ததியினருக்கு கோயிலின் விவரங்களை கடத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத முக்கியத்துவத்திற்கு அப்பால், ராமர் கோயில் ஒரு கலாசார மையமாக கருதப்படுகிறது. கல்வி இடங்கள் மற்றும் தியானத்திற்கான பகுதிகளைச் சேர்ப்பது ஆன்மீக, கலாச்சார மற்றும் கல்வி நோக்கங்களை வளர்ப்பதில் கோயிலின் பங்களிப்பை பிரதிபலிக்கிறது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணியில் எஃகு அல்லது இரும்பு முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு ஒரு தனித்துவமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. பாரம்பரிய கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பன்சி பஹர்பூர் இளஞ்சிவப்பு மணற்கற்கள் பிரதான கோயில் அமைப்பைக் கொண்டுள்ளது. கிரானைட் கற்கள் அஸ்திவாரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இது கோயிலுக்கு நீடித்த அடித்தளத்தை வழங்குகிறது. கிரானைட்டின் பயன்பாடு, கோயிலின் ஒட்டுமொத்த ஆயுளுக்கு பங்களிப்பதோடு,  கட்டமைப்பில் வலிமையையும் சேர்க்கிறது. 

கட்டுமானமானது "ராம் ஷிலாஸ்" என்று அழைக்கப்படும் சிறப்பு செங்கற்களை உள்ளடக்கியது, அவற்றில் "ஸ்ரீ ராம்" என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கற்கள் ராமர் சேது பாலம் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கற்களை பறைசாற்றும் விதமாக பயன்படுத்தப்பட்டுள்ளன

நேபாளத்தின் கண்டகி ஆற்றில் காணப்படும் புனித புதைபடிவமான ஷாலிகிராம் பாறை ராமர் கோயில் கட்டுமானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்து மதத்தில் போற்றப்படும், ஷாலிகிராம் விஷ்ணுவின் அடையாளமாகக் கருதப்படுகிறது, இது கோயிலுக்கு ஆன்மீக பரிமாணத்தை சேர்க்கிறது.

2587 மத வழிபாட்டுத் தலங்களின் புனித மண்ணைக் கொண்டு ராமர் கோயிலின் அடித்தளம் கட்டப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவிற்கு தாய்லாந்தின் அயுத்யா நகரில் இருந்தும் மண் அனுப்பப்பட்டுள்ளது. கூடுதலாக, தாய்லாந்தில் உள்ள சாவ் பிரயா, லோப் பூரி மற்றும் பா சாக் ஆகிய மூன்று நதிகளில் இருந்தும் தண்ணீர் அனுப்பப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன் பதிவுக்கு ‘ஹாஹா’ கமெண்ட்...ஷான் ரோல்டன் விளக்கம்
சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன் பதிவுக்கு ‘ஹாஹா’ கமெண்ட்...ஷான் ரோல்டன் விளக்கம்
Karthigai Deepam: ஆத்திரத்தின் உச்சியில் ரேவதி.. மனம் மாறுவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஆத்திரத்தின் உச்சியில் ரேவதி.. மனம் மாறுவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபத்தில் இன்று
Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Embed widget