மேலும் அறிய

‛முதல் நாள் கிளம்பச் சொன்னேன்... மறுநாள் கடைசி வாய்ப்பு கேட்டான்’ மன்சூர் அலிகான் குறித்து செல்வமணி சொன்ன ரகசியம்!

Mansoor Ali Khan| மன்சூர் அலிகான் எப்போதுமே ஒரு சிறந்த நடிகன் என பெருமிதம் கொள்ளும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. அவர் தனது முதல் படத்தில் செய்த சுவாரஸ்யங்களைபகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் 80-90 காலக்கட்டத்தில் வில்லனாக மிரட்டியவர் நடிகர் மன்சூர் அலிகான். வித்தியாசமான முக பாவனைகள் , தனக்கென தனி உடல்மொழி என திரையில் மிரட்டிய மன்சூர் அலிகான் , தனக்கு கொடுக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் தன்னுடைய பாணியில் நேர்த்தியாக நடிக்க கூடியவர். மன்சூர் அலிகானை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணிதான். விஜயகாந்த் நடிப்பில். செல்வமணி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிநடை போட்ட திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன் ‘ . இந்த திரைப்படத்தில்தான் மன்சூர் அலிகான் முதன் முதலாக அறிமுகமானார். வீரபத்திரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த மன்சூர் அலிகான் , முதல் கதாபாத்திரத்திலேயே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


‛முதல் நாள் கிளம்பச் சொன்னேன்... மறுநாள் கடைசி வாய்ப்பு கேட்டான்’ மன்சூர் அலிகான் குறித்து செல்வமணி சொன்ன ரகசியம்!

மன்சூர் அலிகான் எப்போதுமே ஒரு சிறந்த நடிகன் என பெருமிதம் கொள்ளும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. அவர் தனது முதல் படத்தில் செய்த சுவாரஸ்யங்களைபகிர்ந்துள்ளார். மன்சூர் அலிகான் முதல் படமான கேப்டன் பிரபாகரனில் நடித்த கதாபாத்திரமான வீரபத்திரன் , சந்தனக்கடத்தல் வீரப்பனின் சாயலை கொண்டு உருவாக்கப்பட்டது. படத்தில் மன்சூர் அலிகான் காதில் ஒரு கடுக்கன் ஒன்றை அணிந்திருப்பார். அது ஷூட்டிங் சமயத்தில் கீழே விழுந்துவிட்டதாம் . உடனே காஸ்டியூம் அசிஸ்டண்ட் கடுக்கன் கீழே விழுந்துவிட்டது எங்கே என பார் என்றாராம். அதற்கு மன்சூர் அலிகான் “ நீயே பாருடா...” என திமிராக கூறியிருக்கிறார். பளார் என அறைவிட்டதாக கூறிய செல்வமணி, மன்சூர் அலிகான் தன்னிடம் வந்து ‘அண்ணே ...வீரப்பன்கிட்ட எப்படி பேசனும்னு சொல்லிக்கொடுங்கண்ணே “ என்றாராம். இதன் மூலம் கொடுக்கும் கதாபாத்திரமாகவே மன்சூர் அலிகான் மாறிவிடுவார் என்கிறார் செல்வமணி.


‛முதல் நாள் கிளம்பச் சொன்னேன்... மறுநாள் கடைசி வாய்ப்பு கேட்டான்’ மன்சூர் அலிகான் குறித்து செல்வமணி சொன்ன ரகசியம்!

இதே போலதான் குதிரை சவாரி ஒன்றை செய்ய வேண்டியிருந்ததாம். இது குறித்து மன்சூர் அலிகானிடம் . “உனக்கு குதிரை ஓட்ட தெரியுமாடா ?” என கேட்டாராம் செல்வமணி. அதற்கு மன்சூரும் “ம்ம்ம்ம் பண்ணிடலாம்ணே ..” என்றாராம். உடனே தமிழ் சினிமாவில் பிரபலமான குதிரை ஒன்றை அழைத்து வந்தார்களாம் . குதிரை உரிமையாளர் எப்படி  குதிரை ஓடுவது என சில டிப்ஸுகளை சொல்லியிருக்கிறார். அப்போது ஃபிலிமில்தான் படம் எடுக்க வேண்டும் என்பதால் கொடுக்கப்பட்ட ஃபிலிம்ஸுக்கு காட்சியை எடுத்தாக வேண்டும். 74 ஃபிரேமில் எடுக்க வேண்டிய காட்சி என்பதால் மிகுந்த வேகமாவும் நேர்த்தியாகவும் குதிரையை கையாள வேண்டும் என கூறியிருக்கிறார் செல்வமணி..லைட்...கேமரா..ஆக்‌ஷன் என்றதும், குதிரை ஒரே இடத்திலேயே இருந்திருக்கிறது. உடனே செல்வமணி என்ன ஆச்சு என கேட்டாராம். அதற்கு மன்சூர் அலிகான் “குதிரை வரமாட்டிங்குது அண்ணே..” என்றாராம். அதன் பிறகு இரண்டு மூன்று டேக்குகளுக்கு பிறகு குதிரை பயிற்சியாளரை அழைத்து பார்க்க சொன்னாராம் செல்வமணி. அப்போதுதான் மன்சூர் குதிரையை இறுக்கமாக பிடித்திருப்பது தெரிந்திருக்கிறது. உடனே அவரை திட்டியிருக்கிறார் செல்வமணி. இதனால் கோவமான மன்சூர் குதிரையை சரமாரியாக அடித்துவிட்டாராம். குதிரை பின்னர் அத்துமீரி ஓட ஆரமிக்க , கேமராவை தாண்டி குத்தித்ததும். மன்சூர் அலிகான் தனியாக பறந்து வந்திருக்கிறார். அதன் பிறகு பேக் செய்துவிட்டு , வீரப்பன் கதாபாத்திரத்திற்கு வேறு ஆளை மாற்றலாம் என முடிவெடுத்துவிட்டாராம் மன்சூர். பின்னர் இரவு முழுவதும் பயிற்சி எடுத்து, அடுத்த நாள் ஒரே ஒரு முறை, நான் ஓட்டிக்காட்டுகிறேன் , அதன் பிறகு முடிவெடுங்கள் என்றாராம் மன்சூர் அலிகான். அதன் பிறகு அற்புதமாக குதிரை ஓட்டினார் , அவர் ஒரு விடாமுயற்சி கொண்ட கலைஞன் என பெருமிதம் கொள்கிறார் செல்வமணி.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS vs Duraimurugan:
EPS vs Duraimurugan: "86 வயதில் பொய்யா? திமுகவின் பித்தலாட்டம்” துரைமுருகனை நேரடியாகச் அட்டாக் செய்த ஈபிஎஸ்
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
Ramadoss Vs Anbumani: முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS vs Duraimurugan:
EPS vs Duraimurugan: "86 வயதில் பொய்யா? திமுகவின் பித்தலாட்டம்” துரைமுருகனை நேரடியாகச் அட்டாக் செய்த ஈபிஎஸ்
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
Ramadoss Vs Anbumani: முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
CHN AC Electric Bus: சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்.! - 11-ம் தேதில இருந்து ஏசி மின்சார பேருந்துல பயணம் செய்யலாம்
சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்.! - 11-ம் தேதில இருந்து ஏசி மின்சார பேருந்துல பயணம் செய்யலாம்
Trump Modi: கடுப்பேற்றிய மோடி? பழிவாங்கும் ட்ரம்ப் - பாகிஸ்தான் செய்ததை செய்யாத இந்தியா? நட்பு காலி..
Trump Modi: கடுப்பேற்றிய மோடி? பழிவாங்கும் ட்ரம்ப் - பாகிஸ்தான் செய்ததை செய்யாத இந்தியா? நட்பு காலி..
State Education Policy: 3 ஆண்டாக தூங்கிவிட்டு, இப்போது எதற்காக கல்விக் கொள்கை? விளம்பரமா? அண்ணாமலை கேள்வி
3 ஆண்டாக தூங்கிவிட்டு, இப்போது எதற்காக கல்விக் கொள்கை? விளம்பரமா? அண்ணாமலை கேள்வி
Rahul Warns EC: “காலம் மாறும்.. எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“ - ராகுல் காந்தியின் எச்சரிக்கை யாருக்கு தெரியுமா.?
“காலம் மாறும்.. எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“ - ராகுல் காந்தியின் எச்சரிக்கை யாருக்கு தெரியுமா.?
Embed widget