மேலும் அறிய

‛முதல் நாள் கிளம்பச் சொன்னேன்... மறுநாள் கடைசி வாய்ப்பு கேட்டான்’ மன்சூர் அலிகான் குறித்து செல்வமணி சொன்ன ரகசியம்!

Mansoor Ali Khan| மன்சூர் அலிகான் எப்போதுமே ஒரு சிறந்த நடிகன் என பெருமிதம் கொள்ளும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. அவர் தனது முதல் படத்தில் செய்த சுவாரஸ்யங்களைபகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் 80-90 காலக்கட்டத்தில் வில்லனாக மிரட்டியவர் நடிகர் மன்சூர் அலிகான். வித்தியாசமான முக பாவனைகள் , தனக்கென தனி உடல்மொழி என திரையில் மிரட்டிய மன்சூர் அலிகான் , தனக்கு கொடுக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் தன்னுடைய பாணியில் நேர்த்தியாக நடிக்க கூடியவர். மன்சூர் அலிகானை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணிதான். விஜயகாந்த் நடிப்பில். செல்வமணி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிநடை போட்ட திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன் ‘ . இந்த திரைப்படத்தில்தான் மன்சூர் அலிகான் முதன் முதலாக அறிமுகமானார். வீரபத்திரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த மன்சூர் அலிகான் , முதல் கதாபாத்திரத்திலேயே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


‛முதல் நாள் கிளம்பச் சொன்னேன்... மறுநாள் கடைசி வாய்ப்பு கேட்டான்’ மன்சூர் அலிகான் குறித்து செல்வமணி சொன்ன ரகசியம்!

மன்சூர் அலிகான் எப்போதுமே ஒரு சிறந்த நடிகன் என பெருமிதம் கொள்ளும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. அவர் தனது முதல் படத்தில் செய்த சுவாரஸ்யங்களைபகிர்ந்துள்ளார். மன்சூர் அலிகான் முதல் படமான கேப்டன் பிரபாகரனில் நடித்த கதாபாத்திரமான வீரபத்திரன் , சந்தனக்கடத்தல் வீரப்பனின் சாயலை கொண்டு உருவாக்கப்பட்டது. படத்தில் மன்சூர் அலிகான் காதில் ஒரு கடுக்கன் ஒன்றை அணிந்திருப்பார். அது ஷூட்டிங் சமயத்தில் கீழே விழுந்துவிட்டதாம் . உடனே காஸ்டியூம் அசிஸ்டண்ட் கடுக்கன் கீழே விழுந்துவிட்டது எங்கே என பார் என்றாராம். அதற்கு மன்சூர் அலிகான் “ நீயே பாருடா...” என திமிராக கூறியிருக்கிறார். பளார் என அறைவிட்டதாக கூறிய செல்வமணி, மன்சூர் அலிகான் தன்னிடம் வந்து ‘அண்ணே ...வீரப்பன்கிட்ட எப்படி பேசனும்னு சொல்லிக்கொடுங்கண்ணே “ என்றாராம். இதன் மூலம் கொடுக்கும் கதாபாத்திரமாகவே மன்சூர் அலிகான் மாறிவிடுவார் என்கிறார் செல்வமணி.


‛முதல் நாள் கிளம்பச் சொன்னேன்... மறுநாள் கடைசி வாய்ப்பு கேட்டான்’ மன்சூர் அலிகான் குறித்து செல்வமணி சொன்ன ரகசியம்!

இதே போலதான் குதிரை சவாரி ஒன்றை செய்ய வேண்டியிருந்ததாம். இது குறித்து மன்சூர் அலிகானிடம் . “உனக்கு குதிரை ஓட்ட தெரியுமாடா ?” என கேட்டாராம் செல்வமணி. அதற்கு மன்சூரும் “ம்ம்ம்ம் பண்ணிடலாம்ணே ..” என்றாராம். உடனே தமிழ் சினிமாவில் பிரபலமான குதிரை ஒன்றை அழைத்து வந்தார்களாம் . குதிரை உரிமையாளர் எப்படி  குதிரை ஓடுவது என சில டிப்ஸுகளை சொல்லியிருக்கிறார். அப்போது ஃபிலிமில்தான் படம் எடுக்க வேண்டும் என்பதால் கொடுக்கப்பட்ட ஃபிலிம்ஸுக்கு காட்சியை எடுத்தாக வேண்டும். 74 ஃபிரேமில் எடுக்க வேண்டிய காட்சி என்பதால் மிகுந்த வேகமாவும் நேர்த்தியாகவும் குதிரையை கையாள வேண்டும் என கூறியிருக்கிறார் செல்வமணி..லைட்...கேமரா..ஆக்‌ஷன் என்றதும், குதிரை ஒரே இடத்திலேயே இருந்திருக்கிறது. உடனே செல்வமணி என்ன ஆச்சு என கேட்டாராம். அதற்கு மன்சூர் அலிகான் “குதிரை வரமாட்டிங்குது அண்ணே..” என்றாராம். அதன் பிறகு இரண்டு மூன்று டேக்குகளுக்கு பிறகு குதிரை பயிற்சியாளரை அழைத்து பார்க்க சொன்னாராம் செல்வமணி. அப்போதுதான் மன்சூர் குதிரையை இறுக்கமாக பிடித்திருப்பது தெரிந்திருக்கிறது. உடனே அவரை திட்டியிருக்கிறார் செல்வமணி. இதனால் கோவமான மன்சூர் குதிரையை சரமாரியாக அடித்துவிட்டாராம். குதிரை பின்னர் அத்துமீரி ஓட ஆரமிக்க , கேமராவை தாண்டி குத்தித்ததும். மன்சூர் அலிகான் தனியாக பறந்து வந்திருக்கிறார். அதன் பிறகு பேக் செய்துவிட்டு , வீரப்பன் கதாபாத்திரத்திற்கு வேறு ஆளை மாற்றலாம் என முடிவெடுத்துவிட்டாராம் மன்சூர். பின்னர் இரவு முழுவதும் பயிற்சி எடுத்து, அடுத்த நாள் ஒரே ஒரு முறை, நான் ஓட்டிக்காட்டுகிறேன் , அதன் பிறகு முடிவெடுங்கள் என்றாராம் மன்சூர் அலிகான். அதன் பிறகு அற்புதமாக குதிரை ஓட்டினார் , அவர் ஒரு விடாமுயற்சி கொண்ட கலைஞன் என பெருமிதம் கொள்கிறார் செல்வமணி.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
Embed widget