மேலும் அறிய

Mansoor Ali Khan: த்ரிஷா பற்றி ஆபாசமாகப் பேசிய மன்சூர் அலிகான்.. லோகேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கடும் கண்டனம்..!

நடிகை த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்ட பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

நடிகை த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்ட பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்து கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி லியோ படம் வெளியானது. இதில் விஜய், த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மாயா கிருஷ்ணா, வையாபுரி, அனுராக் காஷ்யப், இயக்குநர் ராமகிருஷ்ணன், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 

இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், ‘ லியோ படத்தில் த்ரிஷாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் இப்படத்தில் அவர் அருகில் கூட என்னால் செல்ல முடியவில்லை. அட்லீஸ்ட் மடோனா பாப்பா கிட்டயேவாது போகணும்னு நினைச்சேன். ஆனால் அதுவும் நடக்கவில்லை’ என தெரிவித்திருந்தார். அவரின் இந்த பேச்சை அனைவருமே சாதாரணமாக கடந்து சென்ற நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துகள் கடும் சர்ச்சையை கிளப்பியது.

அதாவது, “வில்லனையே பாலியல் வன்முறை செய்ய விட மாட்டேன் என்கிறார்கள். எனக்கும் ரொம்ப ஆசையாக இருந்தது. த்ரிஷாவுடன் நடிக்கப்போகிறோம் என்பதால் பெட்ரூம் சீன் எல்லாம் இருக்கும் என நினைத்தேன். 150 படத்தில் நான் பார்க்காத பாலியல் வன்கொடுமை சீனா. ஆனால் த்ரிஷாவை கண்ணிலேயே காட்டவில்லை"  என ஆபாசமாக கருத்து தெரிவித்தார். மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சு இணையத்தில் கடும் எதிர்ப்புகளை பெற்றது. 

இதுதொடர்பாக நேற்று எக்ஸ் தளத்தில் நடிகை த்ரிஷா பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “திரு.மன்சூர் அலிகான் என்னைப் பற்றி சமீபத்தில் அருவெறுக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்று என் கவனத்துக்கு வந்தது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது அவமரியாதையான, பெண் வெறுப்புமிக்க, பாலியல் அத்துமீறல் பேச்சாகும். அவர் இதற்கெல்லாம் ஆசைப்படலாம். ஆனால் இவ்வளவு மோசமான ஒருவருடன் திரையைப் பகிர்ந்து கொள்ளாததற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். என் திரை வாழ்க்கை முழுவதும் இது ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். இது மாதிரியான நபர்கள் தான் மனித குலத்திற்கே கெட்டப் பெயரை ஏற்படுத்துகிறார்கள்” என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து, நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சை கண்டித்தும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நாங்கள் அனைவரும் ஒரே அணியில் பணியாற்றி இருந்தாலும் திரு. மன்சூர் அலி கான் தெரிவித்துள்ள பெண் வெறுப்புக் கருத்துக்களைக் கேட்டு கோபமடைந்துள்ளோம். எந்த துறையிலும் பெண்களுக்கான மரியாதை பேச்சுவார்த்தைக்குட்படாத ஒன்றாக இருக்க வேண்டும். அவரின் இந்த செயலை நான் முற்றிலும் கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

இதேபோல் நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள பதிவில், “இது அருவருப்பான ஒன்று. இந்த ஆண் (மன்சூர் அலிகான்) பெண்களை இப்படித்தான் பார்க்கிறான் , அவர்களைப் பற்றி சிந்திக்கிறான் என்பது வெட்கக்கேடானது. ஆனால் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் இதைப் பற்றி வெளிப்படையாகவும் பேசுவதற்குத் துணிவு(!!) இருக்கிறதா? இது அவமானம். நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட கேவலம் “ என சரமாரியாக விமர்சித்துள்ளார். 

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது பதிவில், “திரு.மன்சூர் அலி கானின் இந்த நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் நான் இதை கடுமையாக கண்டிக்கிறேன். நான் த்ரிஷாவுக்கு ஆதரவாக நிற்பதோடு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கிறேன். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget