Dhanush Aishwarya Split: காதல்.. கருத்துவேறுபாடு, விவாகரத்து.. சமரச பேச்சுவார்த்தையில் குடும்பம்.. இணையுமா நட்சத்திர ஜோடி?
இரண்டு மகன்களும் தற்போது ஐஸ்வர்யாவின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வர, இவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாட்டை நீக்க குடும்பத்தினர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து கொண்டிருப்பது தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து செய்திகள்தான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படுபிஸியாக நடித்து வரும் தனுஷூம், யோகா, உடற்பயிற்சி, மகன்கள் என இருந்த ஐஸ்வர்யாவும் திடீரென இப்படி ஒரு முடிவை எப்படி எடுத்தார்கள் என்பதுதான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
காதல் முளைத்த தருணம்
காதல் கொண்டேன் படம் வெளியான சமயம் அது. அப்போதுதான் ஐஸ்வர்யாவிற்கு அறிமுகமாகிறார் தனுஷ். அடுத்த நாளே ஐஸ்வர்யாவிடம் இருந்து பூங்கொத்து ஒன்று தனுஷின் கைகளுக்கு செல்கிறது. அதனைத் தொடர்ந்து இருவரும் காதலிக்கிறார்கள் என கிசுகிசுக்கப்பட்டது. 6 மாத காலம் காதலில் இவர்களின் செய்தி இரு குடும்ப வீட்டாருக்குத் தெரிய வர, ஐஸ்வர்யா தனுஷை விட 2 வயது மூத்தவராக இருந்த போதும், தம்பதியினர் உறுதியாக இருந்ததால், பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் கல்யாணம் 2004 - ல் நடந்தது. 2006 ஆம் ஆண்டு யாத்ரா பிறக்க, 2010 ஆம் ஆண்டு இராண்டாவது குழந்தையாக லிங்கா பிறக்கிறார்.

டைரக்டராக அறிமுகமான ஐஸ்வர்யா தனது தனுஷை ஹீரோவாக வைத்து 3 படத்தை எடுத்தார். என்னதான் அது படம் என்றாலும், கணவனுடன் இவ்வளவு நெருக்கத்தில் மற்றொரு பெண்ணை ஐஸ்வர்யாவால் எப்படி வைத்து பார்க்க முடிந்தது என்பது கேள்வி அப்போது எழாமல் இல்லை. ஆரம்ப கால பேட்டி ஒன்றில், ஐஸ்வர்யாவின் உறவை பற்றி தனுஷ் பகிர்ந்த போது, நாங்கள் மற்றவருக்காக மாறுவதை நம்புவதில்லை. 20 களின் நடுப்பகுதியில் எதை நீங்கள் நம்புகிறீர்களோ அதைத்தான் உங்கள் மனம் நம்புகிறது” என்று கூறியிருந்தார். ஆனால் 3 பட பிரோமோஷன் பேட்டிகளில், அவர்களுகிடையேயான உரையாடல்கள் ஒன்றுக்கொன்று முரணாகவே இருந்தது.

கருத்து வேறுபாடு
2020 ஆம் ஆண்டுக்கு பிறகு தனுஷ் ஐஸ்வர்யாவுக்கிடையேயான கருத்து வேறுபாடு அதிகமானதாகவும், கதாநாயகிகளுடன் தனுஷ் நெருங்கி பழகுவது ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் தனுஷ் நீண்ட நாட்களாக ஐஸ்வர்யாவை பிரிந்து சென்று விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இரண்டு மகன்களும் தற்போது ஐஸ்வர்யாவின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வர, இவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாட்டை நீக்க குடும்பத்தினர் பல முறை சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் எதிலும் பலன் கிடைக்கவில்லையாம். இதனை வைத்துதான் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கீழே இணைக்கப்பட்ட ட்விட்டை போட்டதாக சொல்லப்படுகிறது.
தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.
— selvaraghavan (@selvaraghavan) December 3, 2021

இவர்களின் முடிவை கேட்ட ரசிகர்களும், தனுஷ் அண்ணாவிற்கு நாங்கள் இருக்கிறோம் என்றும் ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாகவும் போஸ்ட்களை பறக்க விட, உடல்நிலை சரியில்லாத ரஜினி தைரியமாக இருக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே ஐஸ்வர்யாவிடமும், தனுஷிடமும் குடும்பத்தினர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்களாம். ஆனால், இருவரும் தத்தமது முடிவுகளில் உறுதியாக இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















