மேலும் அறிய

Ponniyin Selvan : ஐயோ.. என்னாச்சு.. பொன்னியின் செல்வன் திரைக்கதை ஆசிரியர் இளங்கோ குமரவேலிடம் செல்போன் பறிப்பு

பொன்னியின் செல்வன் திரைக்கதை ஆசிரியர் இளங்கோ குமரவேலிடமிருந்து செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிந்த போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் திரைக்கதை ஆசிரியர் இளங்கோ குமரவேலிடமிருந்து செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிந்த போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கிறார் இளங்கோ குமரவேல். இவர் அபியும் நானும், அழகிய தீயே என நிறைய படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்ல திரைக்கதை ஆசிரியரும் கூட. அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இவர் திரைக்கதை எழுதியிருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு இவருடைய செல்போனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இவர் செல்போன் பேசியபடி பட்டினப்பாக்கம் நோக்கி நடந்து கொண்டிருந்தபோது பைக்கில் வந்த சில மர்ம நபர்கள் அவரிடம் செல்போன் பறித்தனர். அந்த செல்போன் விலையுயர்ந்த செல்போன் எனத் தெரிகிறது. தன்னிடம் செல்போன் பறித்த நபர்களை இளங்கோ குமரவேலும் சிறிது தூரம் துரத்தியுள்ளார். ஆனால் பைக் பறந்த மின்னல் வேகத்திற்கு அவரால் இயங்க இயலவில்லை. இதனையடுத்து அவர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இளங்கோ குமரவேலை ஒரு நடிகராக சில ஆண்டுகள் மட்டும் தான் பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால், இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். முதன் முதலாக 2001 ஆம் ஆண்டு நாசர் இயக்கி நடித்த மாயன் திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து இவருக்கு இயக்குநர் ராதா மோகனின் அறிமுகம் கிடைத்தது. அதன் பின்னர் ராதா மோகன் இயக்கிய பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அபியும் நானும் திரைப்படத்தில் ரவி சாஸ்திரி என்ற பிச்சைக்காரர் ரோலில் தன்னுடைய அசத்தலான நடிப்பில் அனைவரையும் கவர்ந்து இருந்தார்.

அதன் பின்னர் தமிழில் இவர் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார் இறுதியாக விக்ரம் திரைப்படத்தில் ஏஜென்ட் லாரன்ஸ் ஆக இவரை நீங்கள் பார்த்திருக்கலாம். பொன்னியின் செல்வன் படத்தில் நீங்கள் பங்கு மிகவும் முக்கியமானது. மணிரத்தினத்திற்கு முன்பே பொன்னியின் செல்வனை நடத்தி முடித்திய பெருமை இவருக்கு உண்டு ஆனால் இவர் அதை நாடகமாக நடத்தி முடித்திருக்கிறார்.

இவர் எழுதிய பொன்னியின் செல்வன் மேடை நாடகம் சென்னையிலும் மதுரையிலும் பட்டையை கிளப்பியது. பொன்னியின் செல்வன் திரைக்கதைக்கு இவருடைய நாடகம்தான் அடிப்படை.  பசுபதி ,நாசர் போன்ற புகழ் பெற்ற கூத்துப் பட்டறை நடிகர்களால்‌ நடிக்கப்பட்ட இந்த நாடகம் அப்போதே பெரும் பாராட்டு பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் திரைக்கதையை மணிரத்னம், ஜெயமோகனுடன் இணைந்து வடிவமைத்ததும் இவரே 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
Embed widget