மேலும் அறிய

`தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பேச்சுகள் திணறடிக்கின்றன!’ - மனம் திறக்கும் பாலிவுட் நடிகை ஆலியா பட்!

நடிகை ஆலியா பட் அனைவரும் அறிந்த நடிகராக இருப்பது எளிதல்ல என்றும், எப்போதும் கண்காணிக்கப்படுவதும், தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அனைவரின் பேச்சுகளும் தன்னை அவ்வபோது திணறடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

`கங்குபாய் கதியாவாடி’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகிறார் பாலிவுட் நடிகை ஆலியா பட். வெளியான முதல் வார இறுதி நாள்களிலேயே சுமார் 38.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. பாலிவுட் நடிகை ஆலியா பட் அனைவரும் அறிந்த நடிகராக இருப்பது எளிதல்ல என்றும், எப்போதும் கண்காணிக்கப்படுவதும், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அனைவரின் பேச்சுகளும் தன்னை அவ்வபோது திணறடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

`கங்குபாய் கதியாவாடி’ திரைப்பட வெளியீட்டிற்குப் பிறகு, செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் நடிகை ஆலியா பட்டிடம், அவரது வாழ்க்கை குறித்து மக்கள் தெரிந்துகொள்ள விரும்புவது அவருக்குப் பிரச்னையாக இருக்கிறதா எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை ஆலியா பட், `ஆம். ஆனால் அப்போது தோன்றும் போதெல்லாம், `நான் ஏன் நடிகையாக இருக்கிறேன்?’ எனத் தோன்றும். பொது வாழ்க்கையில் இருந்தால், வாழ்க்கையில் நிகழ்பவை பொதுவாகவே இருக்கும். அதனாலேயே பலரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதுகாக்க முயல்கின்றனர்’ எனக் கூறியுள்ளார். 

`தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பேச்சுகள் திணறடிக்கின்றன!’ - மனம் திறக்கும் பாலிவுட் நடிகை ஆலியா பட்!

தற்போது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் காதல் உறவில் இருக்கும் நடிகை ஆலியா பட், தனது தனிப்பட்ட வாழ்க்கையை மறைவாக வைத்துக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய நடிகை ஆலியா பட், `நான் எப்போது திருமணம் செய்து கொள்வேன் என்ற விவரங்களையோ, எனது மதிய உணவுக்காக எங்கு செல்கிறேன் என்ற விவரங்களையோ பிறருக்குத் தருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது பிறருக்குத் தேவையும் இல்லை. ஆனால் பிறர் அதனைப் பற்றி பேசுவதும், பூதாகரமாக்குவதுமாக இருப்பதால் என்னால் அதனைக் குறித்து எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன்’ எனக் கூறியுள்ளார். 

இந்த 2022ஆம் ஆண்டுடன் தனது திரைப்பயணத்தின் பத்தாவது ஆண்டை முடிக்கிறார் நடிகை ஆலியா பட். கரண் ஜோஹர் இயக்கிய `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார் நடிகை ஆலியா பட். தொடர்ந்து, தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் விதமாக, `ஹைவே’, `ஹம்டி ஷர்மா கி துல்ஹனியா’, `உட்தா பஞ்சாப்’, `டியர் ஸிந்தகி’, `ராஸி’, `கல்லி பாய்’ முதலான திரைப்படங்களில் முன்னணி வேடங்களில் நடித்துள்ளார் ஆலியா பட். 

`தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பேச்சுகள் திணறடிக்கின்றன!’ - மனம் திறக்கும் பாலிவுட் நடிகை ஆலியா பட்!

பிரபல பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட், பாலிவுட் நடிகை சோனி ராஸ்தான் ஆகியோரின் மகளான ஆலியா பட், தன்னுடைய திரைப்பயணம் குறித்து கூறும் போது, `நான் ஒரு நடிகராகவும், மனிதராகவும் பரிணாமம் அடைந்திருக்கிறேன் என நினைக்கிறேன். எதையேனும் நிருபிக்க எல்லா இடங்களில் ஓடிக் கொண்டே இருந்தேன்’ எனக் கூறுகிறார். 

28 வயதான நடிகை ஆலியா பட் தற்போது தன்னை மகிழ்விக்கும் பணிகளைச் செய்வதாகத் தெரிவித்துள்ளார். `என் மீது அதிக அழுத்தம் இல்லை. அழுத்தம் இருப்பது மகிழ்ச்சியான ஒன்று இல்லை. இது ஒரு போட்டி அல்ல. கலையை வெளிப்படுத்தும் ஊடகம் இது. உங்களுக்குள் இருக்கும் கற்பனை சக்தியைத் திருப்திப்படுத்திவிட்டு, அடுத்த படத்திற்கு நகர வேண்டும். சஞ்சய் லீலா பன்சாலியுடன் பணியாற்றிய பிறகு, நடிப்பு மீதான எனது அணுகுமுறை மாறியுள்ளது’ எனவும் அவர் கூறியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Indian 2 Trailer: இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
Embed widget