திருமணத்திற்கு அழைக்காத அமீர் - பாவனி... நாயோடு ஒப்பிட்டு அசிங்கப்படுத்திய ஐஷுவின் தந்தை அஷ்ரப்!
தன்னை அழைக்காத அமீரை இன்ஸ்டா ஸ்டோரி மூலமாக விளாசி தள்ளிய ஐஸூவின் அப்பா அஷ்ரப்.

அமீர் மற்றும் பாவனி ரெட்டியின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் அமீருக்கு அக்காவாக, பாவனிக்கு நாத்தனாராக இருந்து பிரியங்கா தேஷ்பாண்டே தான் எல்லா சம்பிரதாயங்களையும் செய்துள்ளார்.
அமீர் மற்றும் பாவனி ரெட்டி திருமணத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் வசி திருமணத்திற்கு அமீர் மற்றும் பாவனி தான் எல்லா சம்பிரதாயங்களையும் செய்திருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான அமீர், நடிகை பாவனியை காதலித்து இப்போது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. அமீர் இந்தளவிற்கு திருமணம் செய்ய காரணமாக இருந்தது பிக் பாஸ் ஐஸ்வர்யாவின் குடும்பம் தான். ஆனால், அவரது குடும்பம் அமீர் பாவனி திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறதாம். அதை பற்றி பார்க்கலாம்.
அமீருக்கு பொருளாதார ரீதியாக எல்லா உதவிகளையும் செய்தது அஷ்ரப் குடும்பத்தினர். அதுமட்டுமின்றி அமீரை தங்களது வீட்டில் ஒருவராக கவனித்து வந்துள்ளார்கள். அமீர் மற்றும் பாவனி காதலுக்கு பிறகு அஷ்ரப் குடும்பத்தினர் மற்றும் அமீர் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அமீர் தனது திருமணத்திற்கு அஷ்ரப் குடும்பத்தினரை அழைக்கவே இல்லை.
இதனால் மன வேதனை அடைந்த அஷ்ரப் இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "நாய் ஒன்று மழையில் நனைந்து கொண்டிருந்தால், அந்த நாயை காப்பாற்றி வீட்டில் வைத்து பேணி காத்து வளர்க்கலாம். இதுவே அதே ஒரு இடத்தில் ஒரு மனிதர் இருந்தால் அப்படியே கண்டு கொள்ளாமல் அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றுவிடுங்கள். அந்த மனிதருக்கு உதவ வேண்டும் என்ற ஆசையில் வீட்டிற்கு மட்டும் அழைத்து வந்து பாதுகாத்து வளர்க்க வேண்டாம். அப்படி வளர்த்தால் எனன் நடக்கும் என்பற்கு நான் தான் சிறந்த உதாரணம் என கூறியுள்ளார். அஷ்ரப் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஐஷுவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி அஷ்ரப் பாதுக்காத்து உதவி செய்தவர் தான் அமீர். இப்படி அமீரைத் நேரடியாக தாக்கும் விதமாக அஷ்ரப் தாக்கி பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமீர் ஆதரவு இன்றி இருந்த போது தன்னை பாதுகாத்த குடும்பத்துடன் என்ன பிரச்சனை இருந்தாலும், திருமணத்திற்கு அழைத்திருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

