BigBoss : "பிக்பாஸ் மூலம் என் வாழ்வின் அடுத்த அத்தியாயம் தொடங்கும்" - தஜிகிஸ்தான் பாடகர் நெகிழ்ச்சி..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் தன் வாழ்வின் அடுத்த அத்தியாயம் தொடங்கும் என்று தஜிகிஸ்தான் பாடகர் அப்து ரோசிக் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
![BigBoss : Big Boss 16 contestant Abdu Rozik talks about his Medical Condition and the difficulties he faced due to his Condition BigBoss :](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/02/b6e8e7475798421f29ca3be87297bda31664703383051501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சனிக்கிழமையன்று பிக் பாஸ் சீசன் 16 நிகழ்ச்சியின் பிரமாண்டமான ப்ரீமியருக்கு முன்னதாக, சல்மான் கான் பிக் பாஸ் 16 இன் முதல் போட்டியாளரான பாடகர் அப்து ரோசிக்கை அறிமுகப்படுத்தினார்.
19 வயதான பாடகர் தஜிகிஸ்தானில் பிறந்தவர் மற்றும் கடந்த இரண்டு வருடங்களாக ஏ.ஆர்.ரஹ்மான், பிரெஞ்ச் மொன்டானா, வில் ஐ ஏஎம் மற்றும் ரெடோன் உள்ளிட்ட மிகவும் புகழ்பெற்ற கலைஞர்களுடன் இணைந்து பாடியுள்ளார். அப்துவின் ஆரம்பப் புகழ் உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கொண்ட மாஸ்கோவில் நடந்த குத்துச்சண்டை செய்தியாளர் கூட்டம் மூலம் கிடைத்தது.
ஐந்து வயதில் வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு மற்றும் ரிக்கெட்ஸ் கண்டறியப்பட்டதால், அப்து வளரவில்லை. அவரது டீனேஜ் பருவத்தில் அவர் கேலி செய்யப்பட்டது மட்டுமல்லாமல், அவருடைய ஆசிரியர்கள் அவருக்கு புத்தகங்களை வழங்க மறுத்துவிட்டனர். எனவே அவர் மூன்று ஆண்டுகள் மட்டுமே முறையான கல்வியைப் பெற முடிந்தது.
Also Read| Vetrimaaran: ‘ராஜராஜசோழனை இந்துவா மாத்திட்டாங்க’ .. மேடையில் வெற்றிமாறன் வைத்த பகீர் குற்றச்சாட்டு!
அப்துவின் பள்ளி தோழர்கள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் அவரை அடிப்பார்கள். அவரது குடும்பம் உயிர்வாழ்வதற்கான குறைந்தபட்ச வழிகளைக் கொண்டிருந்தது மற்றும் அவரது குறைப்பாடுக்கு எந்த மருத்துவ சிகிச்சையும் வாங்க முடியவில்லை. எழுதப் படிக்கத் தெரியாத அப்து தன் சொந்த ட்யூன்களை ஹம் செய்து, பாடல் வரிகளை எழுதத் தொடங்கினார்.
"நான் மற்ற குழந்தைகளை விட உயரம் குறைவாக இருப்பதை நான் பள்ளியில் இருக்கும்போது உணர்ந்தேன். அவர்கள் ஆரம்பத்தில் என்னிடம் நன்றாக இருந்தார்கள், நானும் மிகவும் அழகாக இருந்தேன். ஆனால் பின்னர் என் பள்ளி தோழர்கள் என்னை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர், அப்போது நான் மிகவும் வருத்தமடைந்தேன். கிண்டல் செய்பவர்களுக்கு எதிராக போராடுவதற்காக, நான் குத்துச்சண்டையில் ஈடுபட்டேன்” என்று கூறினார் அப்து.
17 வயதில் IFCM அவரைக் கண்டறிந்தபோது, பணம் சம்பாதிப்பதற்கும் அவரது குடும்பத்திற்கு வழங்குவதற்கும் அப்து தஜிகிஸ்தானின் தெரு பஜார்களில் பாடிக்கொண்டிருந்தார். IFCM யை சேர்ந்த UAE இன் அரச குடும்பத்தின் யஸ்மீன் சஃபியா அவரது திறமையில் முதலீடு செய்ய முடிவு செய்தார்.
தனது பிக்பாஸ் பங்கேற்பு பற்றி அப்து கூறுகையில், “நான் உற்சாகமாகவும் பதட்டமாகவும் இருக்கிறேன், ஆனால் பிக் பாஸ் 16 உடன் எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன். குட்டையாகவும் சிறியதாகவும் இருப்பது மிகவும் தடையாக இருந்தது. மக்கள் எப்போதும் என் திறமையை குறைத்து மதிப்பிட்டார்கள். என்னை கடவுளின் துரதிர்ஷ்டவசமான குழந்தை என்று தவறாகப் பேசுவார்கள். என் குழந்தைப் பருவம் முழுவதும் எனது இயலாமைக்காக என்னை கேலி செய்தார்கள், ஆனால் இப்போது நான் இன்று எங்கு உள்ளேன் என்று பாருங்கள்! உலகம் நம்பாதபோது என்னை நம்பிய கடவுள், எனது ரசிகர்கள் மற்றும் IFCM க்கு நன்றி!
அவர்களின் நம்பிக்கையுடன், நான் இன்று இங்கு மனதாலும், உள்ளத்தாலும் உயர்ந்து நிற்கிறேன். எனது வாழ்க்கைக் கதையின் மூலம் இந்திய மக்களின் இதயங்களை வெல்வேன் என்று நம்புகிறேன், மேலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் என்னை உண்மையாக அறிந்துகொள்வார்கள் மற்றும் நான் ஏற்கனவே மிக மோசமான நிலையை அனுபவித்திருக்கிறேன் என்பதை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் “ என்று கூறினார் அப்து ரோசிக்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)