Vetrimaaran: ‘ராஜராஜசோழனை இந்துவா மாத்திட்டாங்க’ .. மேடையில் வெற்றிமாறன் வைத்த பகீர் குற்றச்சாட்டு!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்தநாளை அவரது கட்சியினர் மணிவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

நம்மிடம் இருந்து பல அடையாளங்களை மாற்றி விட்டதாக நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளது கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
#VetriMaaran pic.twitter.com/MABakwU17L
— Chowdrey (@Chowdrey_) October 2, 2022
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்தநாளை அவரது கட்சியினர் மணிவிழாவாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “தனது நண்பர் ஒருவர் செய்த ஆய்வில் எப்படி சினிமாவை திராவிட இயக்கங்கள் கைப்பற்றியது பற்றி தெரிவித்துள்ளார்.
#vetrimaaran தமிழ் திரைவுலகில் திராவிடத்தின் பங்கு👏🏻👏🏻 நாளை நடக்க இருந்த சங்கித்தனம் #vetrimaaran 🥳 pic.twitter.com/86aUmYcpVe
— பொய்-ன் செல்வன் (@pkjc1319) October 1, 2022
அப்படி எடுத்ததன் விளைவு தான் தமிழ்நாடு இன்றளவும் இன்னும் மதசார்பற்ற மாநிலமாகவும், பல வெளிப்புற காரணிகள் ஊடுருவ முடியாத பக்குவத்தோடு இருப்பதாக நான் நினைக்கிறேன். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிக முக்கியம். நடுவில் சில காலம் அது எடுக்கப்படாமல் இருந்தது.
சினிமா என்பது மக்களை மிக எளிமையாக சென்றடையக் கூடிய கலை வடிவம் என சொல்லலாம். திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுத்த பின்பு தான், இலக்கிய துறையினர் “கலை கலைக்காக மட்டும் தான்..சினிமாவுக்கானது இல்லை” என கூறினர்.
எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்களின் மணிவிழாவையொட்டி,
— வன்னி அரசு (@VanniArasu_VCK) October 1, 2022
குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் கலை திருவிழாவை #தமிழ்ஸ்டுடியோ ஒருங்கிணைத்திருந்தது.
சினிமாவின் சிறந்த ஆளுமை திரு.வெற்றிமாறன்,மூத்த நடிகர் ராஜேஷ்,
நடிகர் இளவரசு உள்ளிட்ட ஆளுமைகளை வரவேற்று உரையாற்றினேன்.#விசிக pic.twitter.com/hlmtZN2d1L
கலையில் அழகியல் என்பது மிக முக்கியமானது. ஆனால் மக்களை சென்றடையாமல் எந்த கலையும் முழுமையடையாது. இந்த கலையை சரியாக நாம கையாளணும். அப்படி கையாள தவறும்போது தான் நம்முடைய அடையாளம் நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது. வள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது,ராஜராஜ சோழனை இந்து அரசனாக குறிப்பிடுவது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது சினிமாவிலும் எடுக்குறாங்க. இதனை நாம காப்பாத்திக்கணும். அதற்கு அரசியல் தெளிவோடு இருந்து விடுதலைக்காக நாம போராடணும். அக்டோபர் 2 ஆம் தேதி நடக்கவிருந்த நிகழ்வே முன்னுதாரணம் என நினைக்கிறேன். அதற்காக நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்” என வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















