மேலும் அறிய

Reshma Pasupuleti :  “என்னன்னு தெரியாம பெண் பிரபலங்களை கீழ்த்தரமாக பேசாதீங்க” -  கடுப்பான ரேஷ்மா

பெண் பிரபலங்களின் பின்னணி என்ன தெரியாமல் ஒருவரை பற்றி முடிவு செய்வதை நிறுத்துங்கள் என நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தெரிவித்துள்ளார். 

பெண் பிரபலங்களின் பின்னணி என்ன தெரியாமல் ஒருவரை பற்றி முடிவு செய்வதை நிறுத்துங்கள் என நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தெரிவித்துள்ளார். 

திரைப்படங்களை விட சின்னத்திரை சீரியல்களுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதில் . விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல்  ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இதில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியும் நடித்து வருகின்றனர். இப்படியான நிலையில் இருவரும் இணைந்து நேர்காணல் ஒன்றில் தாங்கள் திரைத்துறையில் சந்தித்த அனுபவங்கள் பற்றி பேசியுள்ளனர். 

 நிறைய படங்கள் கைவிட்டு போனது - நடிகை சுசித்ரா ஷெட்டி 

இந்த துறைக்கு வந்தாலும் 25 ஆண்டுகள் இன்னும் பெரிய அளவில் சாதனை படைக்கவில்லை. எனக்கு எது வருமோ அதை மட்டுமே எடுத்துக் கொண்டு பயணித்து வருகிறேன். நான் நாடக்குழுவில் இருந்து வந்ததால் அங்கு எல்லாமே மிகத்துல்லியமாக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சியில் என்ன நடக்கப்போகிறது என்பது எனக்கு தெரிய வேண்டும். திரைத்துறையை எடுத்து கொண்டால் ஹீரோயின் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என சொல்கிறார்கள்.  எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. தேவையில்லாமல் கதைக்கு சம்பந்தமில்லாமல் இருக்கும் போது நீச்சல் உடை அணிய வேண்டும் என சொன்னார்கள். நான் மறுத்து விட்டேன். இதனால் நிறைய படங்கள் கைவிட்டு போனது. மறைந்த நடிகர் முரளியின் அப்பா தான் காட்சியின் முக்கியத்துவம் குறித்து கற்றுக்கொடுத்தார்.அதன் பிறகு உபேந்திரா தனது படங்களில் பல விஷயங்களை புரிய வைத்தார். 

எனக்கு சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கவே விருப்பமில்லை. ஆனால் ரேஷ்மா சொன்னார் என்கிற காரணத்துக்காகவே என்னுடைய போட்டோவை போடுகிறேன். என்னுடைய குடும்பம் பற்றி பொதுவெளியில் பகிர்வதை நான் விரும்பவும் மாட்டேன்” என தெரிவித்துள்ளார். 

ஆவேசப்பட்ட நடிகை ரேஷ்மா

நடிகை ரேஷ்மா பேசுகையில், “திரைத்துறையை மட்டுமே நான் சார்ந்து இல்லை. தமிழில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினேன், அதன்பிறகு சீரியல்கள், படங்கள் என இதனை பிற மொழிகளிலும் செய்து வருகிறேன். இந்த துறையில் நான் படிப்படியாகவே மேலே வந்துள்ளேன். நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை. என்னை தேடி வந்த ப்ராஜெக்டில் மட்டுமே நடிப்பேன். அதனால் தான் குறைவான படங்களில் நடித்துள்ளேன். நான் நடித்துள்ள படங்கள் எல்லாம் நான் சொன்ன கண்டிஷன்படி தான் எடுத்தார்கள். பட வாய்ப்பு வரும் போது இதை மட்டுமே என்னால் பண்ண முடியும், முடியாது என வெளிப்படையாக சொல்லி விடுவேன். நான் நடிச்ச கேரக்டர்கள் நீங்கள் பார்க்கும்போது கவர்ச்சியாக தோன்றலாம். ஆனால் எனக்கு அப்படி தெரியவில்லை. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் முதல் விலங்கு சீரிஸ் வரை அப்படித்தான் அமைந்தது. இதுவரை எந்த பெரிய பிரச்சினையும் நடக்கவில்லை. 

பெண் பிரபலங்களை கீழ்த்தரமாக பேசாதீர்கள். அவர்களின் பின்னணி, சூழ்நிலை என்னன்னு தெரியாமல் முடிவு பண்றதை நிப்பாட்டுங்க. நாங்க இந்த துறை, வீடு என அனைத்து இடங்களிலும் பல சவால்களை எதிர்கொள்கிறோம். அதனால் நீங்க ஒருத்தரை பற்றி முடிவு பண்றதை நிப்பாட்டுங்க” என தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget