மேலும் அறிய

"உடம்பு எடை அதிகமானதால, என்னோட பிணத்தை கஷ்டப்பட்டு இறக்கினதா எழுதுனாங்க.." : அஞ்சு ஷாக் இண்டர்வியூ

நடிகை அஞ்சு என்றாலே நீ பாதி நான் பாதி கண்ணா என்ற பாடல் மனதில் நினைவுக்கு வரும். வசந்த் இயக்கிய கேளடி கண்மணி படத்தில் அவர் நாயகியாக அறிமுகமானவர்.

நடிகை அஞ்சு என்றாலே நீ பாதி நான் பாதி கண்ணா என்ற பாடல் மனதில் நினைவுக்கு வரும். வசந்த் இயக்கிய கேளடி கண்மணி படத்தில் அவர் நாயகியாக அறிமுகமானவர். அதன் பின்னர் ஹீரோயினாக, காமெடியனாக, குணச்சித்திர நடிகையாக திரையில் வலம் வந்தார்.

குழந்தை நட்சத்திரமாக திரைப்படத் துறைக்கு வந்த அஞ்சு தனது இரண்டு வயதில் 1979 ஆம் ஆண்டில் உதிரிப்பூக்கள் படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரம், துணை நடிகை கதாபாத்திரம் என நடித்த அவர் சித்தி, சூலம், செல்வி, மேகலா உள்ளிட்ட பிரபல சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது 45 வயதாகும் அவர் 1995 ஆம் ஆண்டு பிரபல நடிகர் டைகர் பிரபாகரனை காதல் திருமணம் செய்தார். இவர் ரஜினி நடித்த முத்து படத்தில் நடிகை மீனாவின் மாமாவாக போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார். ஆனால் ஒரே வருடத்தில் பிரபாகரனை விவாகரத்து செய்தார் அஞ்சு. 

இந்நிலையில் அவர் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்தார். அவருடைய பேட்டியில் இருந்து...

”நான் முதன்முதலில் ஒரு கன்னடப் படத்தில் தான் ஹீரோயினாக நடித்திருந்தேன். அந்த ஹீரோயினுக்கு ஸ்விம்மிங், கார் ரேஸிங், டான்ஸ் எல்லாமே தெரியணும். அந்தப் படத்திற்காக நான் எல்லாமே கற்றுக் கொண்டேன். ஒரு காட்சியில் ஸ்விம் சூட் கொண்டுவந்து கொடுத்தார்கள். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். ஒரே போராட்டம். பாதி நாள் சூட் வெட்டியாகப் போனது. அப்புறம் காஸ்ட்யூம் டிசைனர் வந்து உங்களுக்கு எப்படி ஸ்விம் சூட் வேண்டும் என்று கேட்டனர். நான் அக்னி நட்சத்திரம் படத்தில் நிரோஷா அணிந்தது மாதிரி ஸ்விம் சூட் வேண்டும் என்று கேட்டேன். அதேபோல் தயார் செய்து கொடுத்தார்கள்.

எத்தனை ரூமர் என்னப் பத்தி..

எனக்கு திருமணம் நடந்ததே ஒரு விபத்தாகத் தான் கருதுகிறேன். என்னைத் திருமணம் செய்து கொண்டவருக்கு என்னைவிட வயது ரொம்பவே அதிகம். என் அப்பாவின் வற்புறுத்தலால் நான் அவரைக் கல்யாணம் செய்தேன். திருமணத்திற்குப் பின்னர் தான் எனக்கு அவரின் உண்மையான முகம் தெரியவந்தது. அவருக்கு என்னைவிட அதிக வயதில் இரண்டு பிள்ளைகள் இருந்தனர். நான் விவாகரத்து செய்தேன். ஆனால் அதற்குள் என் மகன் பிறந்துவிட்டான். இதனால் என் மகனுடன் நான் சென்னை வளசரவாக்கத்தில் செட்டில் ஆகிவிட்டேன். அப்போது திடீரென என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வந்தன. நான் தற்கொலை செய்து கொண்டதாகவும். என் உடல் எடை காரணமாக என் சடலத்தை கஷ்டப்பட்டு இறக்கியதாவும் செய்திகள் எழுதப்பட்டிருந்தன. அதைப்பற்றி அறிந்து நான் மிகவும் வேதனைப்பட்டேன். நடிகையாக இருந்து ஃபீல்ட் அவுட் ஆனால் இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும்.

என்னைப் பற்றிய கிசுகிசு..

என்னைப் பற்றி ஒரு கிசுகிசு வந்தது. இயக்குநர் வசந்த் என்னை துரத்தி துரத்தி காதலிப்பதாக செய்தி வந்தது. அதைப் பார்த்து நான் அழுது தீர்த்தேன். அப்போது என்னை மகேந்திரன் சாரிடம் அழைத்துச் சென்றனர். மகேந்திரன் சார் என்னிடம்.. அடச்சீ எதுக்கு அழகுற. இதெல்லாம் உனக்கு பப்ளிசிட்டி என்று கடந்து போ என்றார். அது எனக்கு ஒரு ஐ ஓப்பனர் என்பேன். 

அப்புறம் என்னை இண்டஸ்ட்ரியில் நிறைய பாடி ஷேமிங் செய்தனர். என் உடல் வாகே அப்படித்தான். அதற்கு நான் என்ன செய்வேன். ஹீரோயினாக நடிக்கும்போது பாடி ஷேமிங் செய்தால் பரவாயில்லை. நான் காமெடி கேரக்டர்களில் நடித்த போதெல்லாம் பாடி ஷேமிங் செய்தனர். அதனால் எனக்கு சில நேரங்களில் மனது வலிக்கும். ஆனால் என்னை ஏளனம் செய்பவர்களிடம் புரிய வைக்க வேண்டும் என்று நினைக்கவே மாட்டேன்”

இவ்வாறாக அஞ்சு கூறினார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ajit Doval: இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் எங்கே? அடங்காத தீவிரவாதிகள், யாருக்கு தோல்வி? மோடி ஆக்‌ஷன் எடுப்பாரா?
Ajit Doval: இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் எங்கே? அடங்காத தீவிரவாதிகள், யாருக்கு தோல்வி? மோடி ஆக்‌ஷன் எடுப்பாரா?
PTR TN Cabinet: பிடிஆர்-க்கு தண்டனை ரெடி..! பேச்சால் கடுப்பான ஸ்டாலின் - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
PTR TN Cabinet: பிடிஆர்-க்கு தண்டனை ரெடி..! பேச்சால் கடுப்பான ஸ்டாலின் - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
Vice Chancellors meeting: கிளம்பிய சர்ச்சைகள்! ஊட்டியில் தொடங்கும் துணைவேந்தர்களுக்கான மாநாடு
Vice Chancellors meeting: கிளம்பிய சர்ச்சைகள்! ஊட்டியில் தொடங்கும் துணைவேந்தர்களுக்கான மாநாடு
Pahalgam kashmir: மோடி வரல.. ”ஆமா, பாதுகாப்பு குறைபாடு தான்..” - உண்மையை ஒப்புக்கொண்ட மத்திய அரசு
Pahalgam kashmir: மோடி வரல.. ”ஆமா, பாதுகாப்பு குறைபாடு தான்..” - உண்மையை ஒப்புக்கொண்ட மத்திய அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kashmir Terror Attack | பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்? | Pakistan Embassy  | PM ModiSengottaiyan vs EPS: அடங்க மறுக்கும் செங்கோட்டையன்! கலக்கத்தில் எடப்பாடி! சீனுக்கு வந்த அமித்ஷா!Sengottaiyan: ”EPS இல்லனா அதிமுக இல்ல” செங்கோட்டையன் 360 டிகிரி பல்டி! நள்ளிரவில் முடிந்த DEAL!Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ajit Doval: இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் எங்கே? அடங்காத தீவிரவாதிகள், யாருக்கு தோல்வி? மோடி ஆக்‌ஷன் எடுப்பாரா?
Ajit Doval: இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் எங்கே? அடங்காத தீவிரவாதிகள், யாருக்கு தோல்வி? மோடி ஆக்‌ஷன் எடுப்பாரா?
PTR TN Cabinet: பிடிஆர்-க்கு தண்டனை ரெடி..! பேச்சால் கடுப்பான ஸ்டாலின் - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
PTR TN Cabinet: பிடிஆர்-க்கு தண்டனை ரெடி..! பேச்சால் கடுப்பான ஸ்டாலின் - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
Vice Chancellors meeting: கிளம்பிய சர்ச்சைகள்! ஊட்டியில் தொடங்கும் துணைவேந்தர்களுக்கான மாநாடு
Vice Chancellors meeting: கிளம்பிய சர்ச்சைகள்! ஊட்டியில் தொடங்கும் துணைவேந்தர்களுக்கான மாநாடு
Pahalgam kashmir: மோடி வரல.. ”ஆமா, பாதுகாப்பு குறைபாடு தான்..” - உண்மையை ஒப்புக்கொண்ட மத்திய அரசு
Pahalgam kashmir: மோடி வரல.. ”ஆமா, பாதுகாப்பு குறைபாடு தான்..” - உண்மையை ஒப்புக்கொண்ட மத்திய அரசு
TNSTC Special bus: தொடர் விடுமுறை... ஊருக்கு போறீங்களா! உங்களுக்கான அப்டேட் இதுதான்...
TNSTC Special bus: தொடர் விடுமுறை... ஊருக்கு போறீங்களா! உங்களுக்கான அப்டேட் இதுதான்...
CSK Vs SRH: மோசமானவர்களில் முக்கியமானவர்கள் யார்? ஐதராபாத்தை சாய்க்குமா சென்னை? சாதனையை தொடருமா தோனி படை?
CSK Vs SRH: மோசமானவர்களில் முக்கியமானவர்கள் யார்? ஐதராபாத்தை சாய்க்குமா சென்னை? சாதனையை தொடருமா தோனி படை?
IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
Embed widget