மேலும் அறிய

Nasser: வீண் வதந்திகளை நம்பாதீங்க.. பவன் கல்யாண் பேச்சுக்கு விளக்கம் கொடுத்த நாசர்

பிற நடிகர்களை தமிழ் படங்களில் நடிக்க அனுமதிக்க கூடாது என்கிற புதிய விதிமுறை பற்றிய விளக்கம் கொடுத்துள்ளார் நடிகர் நாசர்

திரைப்பட ஊழியர்கள் சங்கத்தின் புதிய நெறிமுறைகளைத் தொடர்ந்து பவன் கல்யாண் பேசியதை மறுத்து விளக்கமளித்துள்ளார்  நடிகர் நாசர்.

ப்ரோ படத்தின் முன்னோட்ட நிகழ்வில் நடிகர் பவன் கல்யாண்  தமிழ் படங்களில் மற்ற மொழி நடிகர்களைவிட தமிழ் நடிகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற தென் இந்திய திரைப்பட ஊழியர்கள் சங்கம் சார்பாக முன்வைக்கப்பட்ட  புதிய நெறிமுறைகளை சுட்டிகாட்டி பேசினார்.

பவன் கல்யானின் கோரிக்கை

தனது பேச்சைத் தொடங்கிய பவன் கல்யாண் “தமிழ் சினிமா தன்னை ஒரு சிறு வரம்பிற்குள் சுருக்கிக்கொள்வதாக நினைக்கிறேன். அதே நேரத்தில் தெலுங்கு சினிமா அனைத்து மொழிகளைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அரவணைத்து வருகிறது.

தமிழ் சினிமாத் துறை அனைத்து சாரார்களையும் உள்ளடக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அதன் வளர்ச்சி தடைபடும். தெலுங்கு சினிமா முன்னேறுவதற்கான முக்கிய காரணம் பல்வேறு நிலத்தில் இருந்து வரும் கலைஞர்களை அது ஆதரிப்பதே. இங்கு மிகப்பெரிய அடையாளங்களை சம்பாதித்திருக்கும் சமுத்திரகனி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், சுஜித் வாசுதேவன் மலையாள, ஊர்வஷி ராவ்டலா வட மாநிலத்தில் இருந்து வந்தவர், மற்றும்  நீதா லல்லா  பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர். இதுபோல் பல நிலங்களில் இருந்து கலைஞர்கள் ஒன்றிணைந்து பனியாற்றும்போது ஒரு படம் அசாதாரணமான உயரத்தைத் தொடுகிறது. அதனால் இது மாதிரியான குறுகிய சிந்தனைகளை விட்டு ஆர். ஆர்.ஆர் போன்ற படங்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என தென் இந்திய திரைப்பட ஊழியர்கள் சங்கத்திடம் நான் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன்” என பேசினார்.

விளக்கமளித்த  நாசர்

 திரைப்பட ஊழியர்கள் சங்கத்தின் இந்த முடிவு குறித்து எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படாத நிலையில் தற்போது நடிகர் நாசர் இந்தக் குழப்பத்திற்கு விளக்கமளித்துள்ளார். ”பிற மொழி நடிகர்களை தமிழில் நடிக்க அனுமதிக்க கூடாது என்று திரைப்பட ஊழியர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதாக தவறான தகவல் ஒன்று பரவி வருகிறது. அப்படியான ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அதை முதலில் எதிர்ப்பவன் நானாகத்தான் இருப்பேன். தற்போது பான் இந்திய திரைப்படங்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்த மாதிரியான ஒரு சூழலில் அனைத்து மொழிகளில் இருந்தும் நடிகர்கள் தொழில் நுட்பக்கலைஞர்கள் நமக்கு தேவையான ஒரு சூழலில், இந்த மாதிரியான ஒரு முடிவை யாரும் எடுக்கமாட்டார்கள்.  திரைப்படங்கள் தமிழ்நாட்டைத் தவிர்த்து பிற மாநிலங்களிலும் எடுக்கப்படுகின்றன. இதன் காரணத்தினால் தொழிலாளர்களின் நலனை நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. சாவித்திரியின் காலத்தில் இருந்து தமிழ் சினிமா பிற மொழி  கலைஞர்களுடன் பனியாற்றும் நீண்ட பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது.

ஆதாரமற்ற தகவல்களை நம்பவேண்டாம் என்று எனது திரையுலக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் தொடர்ந்து இணைந்து வேலை செய்து நமது படங்களை சர்வதேச தளங்களுக்கு எடுத்துச் செல்வோம் . அதற்கான முயற்சிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டோம். இதில் நாம் அனைவரும் நிச்சயம் ஒன்றாய் பயணிப்போம்” என்று நாசர் இந்தக் குழப்பத்திற்கு தெளிவான விளக்கமளித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Embed widget