விமர்சனங்களை எதிர்கொள்ள ரசிகர்களின் அன்பு தான் துணை...அஜித் ஓப்பன் டாக்
அஜித் மீண்டும் கார் பந்தையத்திற்கு திரும்பியது குறித்து பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார்.

துபாயில் நடந்த லேமன்ஸ் கார் பந்தையத்தில் அஜித்தின் கார் மோதி சக போட்டியாளர் ஆட்டத்தை விட்டு வெளியேறினார். கார் ரேஸிங் களத்திற்கு அஜித் திரும்பியதில் இருந்து இதுவரை பல விபத்துகளில் சிக்கியுள்ளார். இதனால் அவர் அணிக்கும் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் அஜித் கார் ரேஸிற்கு திரும்பி வந்ததையும் பலர் விமர்சித்து பதிவிட்டு வந்தார்கள். இந்த விமர்சனங்களுக்கு அஜித் தற்போது பதிலளித்துள்ளார்.
விமர்சனங்களுக்கு அஜித் விளக்கம்
துபாய் மற்றும் மலேசியாவில் உங்கள் அணிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இந்த ஆதரவு உங்களுக்கு முக்கியமானதா ? என்று அஜித்திடம் பத்திரிகையாளர் கேள்வி கேட்டார் . அதற்கு " நிச்சயமாக முக்கியம் தான் . ஒருவர் தனக்கு பழக்கப்பட்ட இடத்தில் இருந்து புதிதாக ஒன்றை செய்யும் போது விமர்சனங்கள் வரவே செய்யும். இப்போதும் நான் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறேன். எங்களுக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மலேசியாவில் மட்டுமில்லை பிற உலக நாடுகளிலும் 6 ஆயிரம் ரசிகர்கள் எங்களை பார்க்க வந்திருந்தனர் . நான் சரியான பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை இந்த ஆதரவு எனக்கு உறுதிப்படுத்துகிறது. இன்னும் நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால். நான் இதை எனக்காக மட்டும் செய்யவில்லை. எனக்கு மோட்டர் ஸ்போர்ட் துறைவீது அவ்வளவு பிரியம். என்னால் முடிந்த வரை ஒரு ரேஸிங் டிரைவராகவே நான் இருக்க விரும்புகிறேன். " என்று அஜித் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.
Q: How does the support of fans mean to you..❓#Ajithkumar: Means a lot.. It reassures me that I'm on the right path.. Honestly I'm not doing this just for myself.. I love this sport too much.. I definitely want to be a Racing driver as long as I can..✌️pic.twitter.com/ywB49ORn1L
— Laxmi Kanth (@iammoviebuff007) February 6, 2026























