மேலும் அறிய

Chandra Babu Naidu: "கூட்டணி முக்கியம் இல்லை.. மக்கள் நன்மையே முக்கியம்" சந்திரபாபு நாயுடு பரபரப்பு முடிவு

அரசியலில் கூட்டணி முக்கியம் இல்லை என்றும், மக்கள் நன்மையே முக்கியம் என்று சந்திரபாபு நாயுடு கூறியிருப்பது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் அடுத்து ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

பாஜக கூட்டணியில் உறுதியாக இருக்கிறேன் - சந்திரபாபு நாயுடு:

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, டெல்லி செல்வதற்கு முன்பாக இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, ”இதுபோன்ற தேர்தலை வரலாற்றில் பார்த்ததில்லை. அரசியலில் கூட்டணி முக்கியம் இல்லை. தேச நன்மை மற்றும் மக்கள் நன்மை மட்டுமே முக்கியம் ஆகும். மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார். மக்கள் நலன் மற்றும் மாநிலத்தின் நலனை முன்னிறுத்தியே தேர்தலை எதிர்கொண்டோம். பாஜக மற்றும் ஜனசேனா போன்ற கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து கடுமையாக உழைத்ததன் மூலம், வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றி சாத்தியாமாகியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன்” என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

ஜெகன் மோகன் மீது குற்றச்சாட்டு:

தொடர்ந்து பேசுகையில், ”கடந்த 5 ஆண்டுகால ஜெகன் மோகனின் ஆட்சி காலத்தில் நான் மோசமாக துன்புறுத்தப்பட்டேன். ஆந்திர மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கான சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  மாநிலத்தில் ஊடகங்கள் கூட சித்திரவதையை எதிர்கொண்டன. ஜெகனின் ஆட்சிக் காலத்தில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் தூக்கமில்லாத இரவுகளை எதிர்கொண்டனர். ஊடக நிறுவனங்கள் மீது சிஐடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு நபரும் அந்த வலியை உணர்ந்ததாலே, வெளிமாநிலங்களில் மட்டுமின்றி, பெரும் செலவு செய்து வெளிநாடுகளில் இருந்தும் வந்து வாக்களித்துச் சென்றனர்.

பாஜக கூட்டணியில் இருக்கிறேன் - சந்திரபாபு:

மாநிலத்தின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக கூட்டணி அமைக்கப்பட்டது. அதன் காரணமாகவே மொத்தம் பதிவான 55.38% வாக்குகளில் தெலுங்கு தேசம் கட்சி 45% மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி 39% வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது  வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை தெலுங்கு தேசம் கட்சி பெற்றுள்ளது என்றார்” என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். மேலும், யாருடன் கூட்டணி என எழுப்பபட்ட கேள்விக்கு, “நான் அனுபவசாலி, நான் இந்த நாட்டில் பல அரசியல் மாற்றங்களை கண்டுள்ளேன். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம், நான் என்டிஏ கூட்டத்திற்கு செல்கிறேன்” என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். சந்திரபாபு நாயுடுவை இந்தியா கூட்டணிக்கு அழைக்க அக்கூட்டணி தலைவர்கள் மும்முரம் காட்டி வரும் சூழலில் அவர் இவ்வாறு பேசியிருப்புது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?

வீடியோ

TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
Embed widget