மேலும் அறிய

Rahul Gandhi: பிரதமர் மோடி பயந்துவிட்டார் - சொத்து மறுபகிர்வு தொடர்பாக ராகுல் காந்தி அதிரடி பதிலடி

Rahul Gandhi: பிரதமர் மோடி பீதியில் இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

Rahul Gandhi: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புரட்சிகரமானது என, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி பேச்சு:

டெல்லி ஜவஹர் பவனில் காங்கிரஸ் கட்சி சார்பில் சமூக நீதி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்று சாதி வாரி கணக்கெடுப்பு பற்றி பேசிய காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, ”சுதந்திரமடைந்த 70 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு முக்கியமான படியாகும். இப்போது நாட்டின் நிலைமை என்ன, நாம் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். காங்கிரஸ் ஆட்சி இதை செயல்படுத்தும்.  சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனக்கு அரசியல் அல்ல, இது எனது வாழ்க்கையின் நோக்கம்.  அதை விட்டுவிடமாட்டேன். தேசபக்தர்கள் என கூறிக்கொள்பவர்கள் சாதி வாரி கணக்கெடுப்புக்கு பயப்படுகின்றனர்.  எந்த சக்தியாலும் சாதி வாரி கணக்கெடுப்பை தடுக்க முடியாது. காங்கிரஸ் அரசு வந்தவுடன் நாங்கள் முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள். இது எனது  வாக்குறுதி. 

சொத்து மறுஒதுக்கீடு பற்றி ராகுல் காந்தி:

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உங்களுக்கு பிடித்து இருக்கிறதா?  பிரதமர் மோடி பீதியடைந்து இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புரட்சிகரமானது. சொத்து மறுஒதுக்கீடு விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுப்பதாக நான் கூறவில்லை. எவ்வளவு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிப்போம் என்று தான் கூறுகிறேன். எவ்வளவு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை சோதிப்போம் என்று நான் சொன்ன தருணத்தில் பிரதமர் நரேந்திர மோடி எப்படி நடந்து கொண்டார் என்பதைப் பாருங்கள். இது நாட்டை உடைக்கும் முயற்சி என்று சொல்கிறார்கள். சொத்து கணக்கெடுப்பு மூலம் நாம் பிரச்னைகளை தெரிந்துகொள்வோம். 90 சதவீத இந்தியர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இந்த அநீதியை தடுக்க நான் அழைப்பு விடுத்த தருணத்தில், பிரதமரும் பாஜகவும் என் மீதான தாக்குதலை தொடங்கியுள்ளனர். ஒரு தலித் அல்லது பழங்குடியினர் கூட ராமர்  கோயில் அல்லது புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது பங்கேற்கவில்லை. தொண்ணூறு சதவீத மக்கள் இதை புரிந்து கொண்டுள்ளனர்” என ராகுல் காந்தி தெரிவித்தார்.

தீவிரமடையும் ராகுல் - மோடி கருத்து மோதல்:

கங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடும்போது, சாதி வாரி கணக்கெடுப்புடன் சொத்து மற்றும் நிறுவன கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி அறிவித்தார். அதனடிப்படையில் சொத்து மறுபகிர்வு நடத்தப்படும் எனவும் உறுதியளித்தார். அதேநேரம், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் மக்கள் உழைத்து சம்பாதித்த சொத்துகளை பறித்து, ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கும் கொடுத்துவிடுவார்கள் என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தான் தற்போது பாஜக மற்றும் கங்கிரஸ் இடையே பெரும் விவாதமாக மாறியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வாக்காளர்களுக்கு நம்பிக்கையூட்டும் பாதுகாப்பு நடவடிக்கை: மயிலாடுதுறை அருகே துப்பாக்கி ஏந்திய வீரர்களின் அணிவகுப்பு...!
வாக்காளர்களுக்கு நம்பிக்கையூட்டும் பாதுகாப்பு நடவடிக்கை: மயிலாடுதுறை அருகே துப்பாக்கி ஏந்திய வீரர்களின் அணிவகுப்பு...!
பாக்யராஜ் முதல் சசிகலா வரை.. அதிமுக-வில் இருந்து தனிக்கட்சி தொடங்கியவர்கள் இவ்ளோ பேரா?
பாக்யராஜ் முதல் சசிகலா வரை.. அதிமுக-வில் இருந்து தனிக்கட்சி தொடங்கியவர்கள் இவ்ளோ பேரா?
மயிலாடுதுறையில் பரபரப்பு...மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிப்பு...!
மயிலாடுதுறையில் பரபரப்பு...மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிப்பு...!
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Embed widget