மேலும் அறிய

Rahul Gandhi: பிரதமர் மோடி பயந்துவிட்டார் - சொத்து மறுபகிர்வு தொடர்பாக ராகுல் காந்தி அதிரடி பதிலடி

Rahul Gandhi: பிரதமர் மோடி பீதியில் இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

Rahul Gandhi: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புரட்சிகரமானது என, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி பேச்சு:

டெல்லி ஜவஹர் பவனில் காங்கிரஸ் கட்சி சார்பில் சமூக நீதி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்று சாதி வாரி கணக்கெடுப்பு பற்றி பேசிய காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, ”சுதந்திரமடைந்த 70 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு முக்கியமான படியாகும். இப்போது நாட்டின் நிலைமை என்ன, நாம் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். காங்கிரஸ் ஆட்சி இதை செயல்படுத்தும்.  சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனக்கு அரசியல் அல்ல, இது எனது வாழ்க்கையின் நோக்கம்.  அதை விட்டுவிடமாட்டேன். தேசபக்தர்கள் என கூறிக்கொள்பவர்கள் சாதி வாரி கணக்கெடுப்புக்கு பயப்படுகின்றனர்.  எந்த சக்தியாலும் சாதி வாரி கணக்கெடுப்பை தடுக்க முடியாது. காங்கிரஸ் அரசு வந்தவுடன் நாங்கள் முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள். இது எனது  வாக்குறுதி. 

சொத்து மறுஒதுக்கீடு பற்றி ராகுல் காந்தி:

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உங்களுக்கு பிடித்து இருக்கிறதா?  பிரதமர் மோடி பீதியடைந்து இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புரட்சிகரமானது. சொத்து மறுஒதுக்கீடு விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுப்பதாக நான் கூறவில்லை. எவ்வளவு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிப்போம் என்று தான் கூறுகிறேன். எவ்வளவு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை சோதிப்போம் என்று நான் சொன்ன தருணத்தில் பிரதமர் நரேந்திர மோடி எப்படி நடந்து கொண்டார் என்பதைப் பாருங்கள். இது நாட்டை உடைக்கும் முயற்சி என்று சொல்கிறார்கள். சொத்து கணக்கெடுப்பு மூலம் நாம் பிரச்னைகளை தெரிந்துகொள்வோம். 90 சதவீத இந்தியர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இந்த அநீதியை தடுக்க நான் அழைப்பு விடுத்த தருணத்தில், பிரதமரும் பாஜகவும் என் மீதான தாக்குதலை தொடங்கியுள்ளனர். ஒரு தலித் அல்லது பழங்குடியினர் கூட ராமர்  கோயில் அல்லது புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது பங்கேற்கவில்லை. தொண்ணூறு சதவீத மக்கள் இதை புரிந்து கொண்டுள்ளனர்” என ராகுல் காந்தி தெரிவித்தார்.

தீவிரமடையும் ராகுல் - மோடி கருத்து மோதல்:

கங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடும்போது, சாதி வாரி கணக்கெடுப்புடன் சொத்து மற்றும் நிறுவன கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி அறிவித்தார். அதனடிப்படையில் சொத்து மறுபகிர்வு நடத்தப்படும் எனவும் உறுதியளித்தார். அதேநேரம், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் மக்கள் உழைத்து சம்பாதித்த சொத்துகளை பறித்து, ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கும் கொடுத்துவிடுவார்கள் என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தான் தற்போது பாஜக மற்றும் கங்கிரஸ் இடையே பெரும் விவாதமாக மாறியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: விசிலடிப்பவர்களுக்கு சட்டசபையா? - விஜயை அட்டாக் செய்த திருமாவளவன்!
Thirumavalavan: விசிலடிப்பவர்களுக்கு சட்டசபையா? - விஜயை அட்டாக் செய்த திருமாவளவன்!
TVK Vijay: விஜய் இன்று பரப்புரை.. நள்ளிரவே குவிந்த தொண்டர்கள்.. திணறும் திருநெல்வேலி!
TVK Vijay: விஜய் இன்று பரப்புரை.. நள்ளிரவே குவிந்த தொண்டர்கள்.. திணறும் திருநெல்வேலி!
பிரிட்ஜ், சிலிண்டர் மாடல்களுடன் நூதனப் பிரச்சாரம்: காஞ்சிபுரத்தில் வாக்கு சேகரித்து அசத்திய அதிமுக வேட்பாளர்!
பிரிட்ஜ், சிலிண்டர் மாடல்களுடன் நூதனப் பிரச்சாரம்: காஞ்சிபுரத்தில் அசத்திய அதிமுக வேட்பாளர்!
யார் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறார்கள்? - இராணிப்பேட்டை தேர்தல் களத்தில் அனல் பறக்கும் கனிமொழியின் பேச்சு
யார் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறார்கள்? - இராணிப்பேட்டை தேர்தல் களத்தில் அனல் பறக்கும் கனிமொழியின் பேச்சு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: கொன்று குவிப்பேன் என சொல்லி போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்- ஹார்மஸை திறக்க ஒகே சொன்ன ஈரான்
US Iran War: கொன்று குவிப்பேன் என சொல்லி போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்- ஹார்மஸை திறக்க ஒகே சொன்ன ஈரான்
US Iran War: ஏப்ரல் 10 சம்பவம், USA-வின் 15 VS ஈரானின் 10 - யார் கை ஓங்கும்? பாகிஸ்தானில் மொத்தமாக முடியுமா?
US Iran War: ஏப்ரல் 10 சம்பவம், USA-வின் 15 VS ஈரானின் 10 - யார் கை ஓங்கும்? பாகிஸ்தானில் மொத்தமாக முடியுமா?
US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு
US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு "இன்று இரவு ஒரு நாகரிகமே அழியும்" டிரம்ப் பகீர் மிரட்டல்!
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
"விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலிச்சது கடுப்பா இருந்துச்சு.." மனம் திறந்த ஆர்ஜே பாலாஜி!
Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
Embed widget