மேலும் அறிய

Prashant Kishor: ”தப்பாகிப்போச்சு.. இனிமேல் சொல்லவே மாட்டேன்” : பிரஷாந்த் கிஷோர் சொன்னது என்ன தெரியுமா?

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 300க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார்.

மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து எனது கணிப்புகள் தவறாகி விட்டது. இனி கட்சிகளுக்கு கிடைக்கப்போகும் எண்ணிக்கை குறித்து நான் பேசப் போவதில்லை என தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 300க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார். அவர் மட்டுமல்ல பெரும்பாலான ஊடகங்கள், தேர்தல் வியூக நிபுணர்களும் பாஜக தனிப்பெரும்பான்மை பெறும் என தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவே இல்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பிரதமராக தொடர்ச்சியாக 3வது முறை மோடி நாளை பதவியேற்கிறார். 

தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பிரஷாந்த் கிஷோரின் கணிப்புகள் பொய்யானது பற்றி பலரும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இதற்கு பிரஷாந்த் கிஷோர் எந்தவித பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வந்தார். இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்து பேட்டியில், “நானும், தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஆய்வு செய்வோரும் தவறாக கணித்து விட்டோம். மக்களின் விமர்சனங்களை ஏற்க தயாராக இருக்கிறோம். இனி வரும் தேர்தல்களில் எந்த கட்சி ஜெயிக்கும் என கணிப்பு சொல்வேனே தவிர, எத்தனை இடங்கள் ஜெயிக்கும் என கணிக்க மாட்டேன். பல விஷயங்களால் மக்களவை தேர்தலில் எனது கணிப்பு பொய்யாகிவிட்டது. 

பாஜக 300ஐ நெருங்கி விடும் என நாங்கள் சொன்னோம். ஆனால் அவர்கள் 240 இடங்களில் மட்டுமே ஜெயித்தார்கள். அதேசமயம் பிரதமர் மோடிக்கு எதிராக சின்னதாக கோபம் இருப்பதை முன்கூட்டியே குறிப்பிட்டேன். ஆனால் அது அதிருப்தியாக மாறாது எனவும் கூறினேன். எண்ணிக்கையை தவிர்த்து பார்த்தால் எனது கணிப்புகள் தவறாக இல்லை. மேலும் எதிர்கட்சிகள் ஒரு பாசிட்டிவான பிரச்சாரத்தை முன்வைக்கவில்லை.

மொத்த வாக்கு சதவிகிதத்தில் பாஜக 36 சதவிகிதம் பெற்றுள்ளது. இது முந்தைய தேர்தலை காட்டிலும் 0.7% மட்டுமே குறைவாகும். ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் கணிப்பை எண்களில் தெரிவித்திருக்க கூடாது. கடந்த 2 ஆண்டுகளில் நான் செய்த இரண்டாவது தவறு இது” என பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

கடந்த மே 23 அன்று சமூக ஊடக தளமான Xல் பதிவு ஒன்றை வெளியிட்ட பிரஷாந்த் கிஷோர், “மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெறும். இந்தத் தேர்தலின் முடிவைப் பற்றிய எனது கணிப்பை கண்டு திகைத்து போனவர்கள் மனதையும் உடலையும் நீரேற்றமாக வைத்திருப்பதால் தண்ணீர் அருந்துவது நல்லது. அந்த வகையில் ஜூன் 4ல் தண்ணீருடன் தயாராக இருங்கள்” என கூறியிருந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா? இல்லையா? - பிரபாஸ் , கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா? இல்லையா? - பிரபாஸ் , கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
Stock Market: உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா? இல்லையா? - பிரபாஸ் , கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா? இல்லையா? - பிரபாஸ் , கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
Stock Market: உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
Embed widget