மேலும் அறிய

Prashant Kishor: ”தப்பாகிப்போச்சு.. இனிமேல் சொல்லவே மாட்டேன்” : பிரஷாந்த் கிஷோர் சொன்னது என்ன தெரியுமா?

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 300க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார்.

மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து எனது கணிப்புகள் தவறாகி விட்டது. இனி கட்சிகளுக்கு கிடைக்கப்போகும் எண்ணிக்கை குறித்து நான் பேசப் போவதில்லை என தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 300க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார். அவர் மட்டுமல்ல பெரும்பாலான ஊடகங்கள், தேர்தல் வியூக நிபுணர்களும் பாஜக தனிப்பெரும்பான்மை பெறும் என தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவே இல்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பிரதமராக தொடர்ச்சியாக 3வது முறை மோடி நாளை பதவியேற்கிறார். 

தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பிரஷாந்த் கிஷோரின் கணிப்புகள் பொய்யானது பற்றி பலரும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இதற்கு பிரஷாந்த் கிஷோர் எந்தவித பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வந்தார். இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்து பேட்டியில், “நானும், தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஆய்வு செய்வோரும் தவறாக கணித்து விட்டோம். மக்களின் விமர்சனங்களை ஏற்க தயாராக இருக்கிறோம். இனி வரும் தேர்தல்களில் எந்த கட்சி ஜெயிக்கும் என கணிப்பு சொல்வேனே தவிர, எத்தனை இடங்கள் ஜெயிக்கும் என கணிக்க மாட்டேன். பல விஷயங்களால் மக்களவை தேர்தலில் எனது கணிப்பு பொய்யாகிவிட்டது. 

பாஜக 300ஐ நெருங்கி விடும் என நாங்கள் சொன்னோம். ஆனால் அவர்கள் 240 இடங்களில் மட்டுமே ஜெயித்தார்கள். அதேசமயம் பிரதமர் மோடிக்கு எதிராக சின்னதாக கோபம் இருப்பதை முன்கூட்டியே குறிப்பிட்டேன். ஆனால் அது அதிருப்தியாக மாறாது எனவும் கூறினேன். எண்ணிக்கையை தவிர்த்து பார்த்தால் எனது கணிப்புகள் தவறாக இல்லை. மேலும் எதிர்கட்சிகள் ஒரு பாசிட்டிவான பிரச்சாரத்தை முன்வைக்கவில்லை.

மொத்த வாக்கு சதவிகிதத்தில் பாஜக 36 சதவிகிதம் பெற்றுள்ளது. இது முந்தைய தேர்தலை காட்டிலும் 0.7% மட்டுமே குறைவாகும். ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் கணிப்பை எண்களில் தெரிவித்திருக்க கூடாது. கடந்த 2 ஆண்டுகளில் நான் செய்த இரண்டாவது தவறு இது” என பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

கடந்த மே 23 அன்று சமூக ஊடக தளமான Xல் பதிவு ஒன்றை வெளியிட்ட பிரஷாந்த் கிஷோர், “மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெறும். இந்தத் தேர்தலின் முடிவைப் பற்றிய எனது கணிப்பை கண்டு திகைத்து போனவர்கள் மனதையும் உடலையும் நீரேற்றமாக வைத்திருப்பதால் தண்ணீர் அருந்துவது நல்லது. அந்த வகையில் ஜூன் 4ல் தண்ணீருடன் தயாராக இருங்கள்” என கூறியிருந்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Embed widget