மேலும் அறிய

Local Body Election | தஞ்சாவூரில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட 61 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

காரை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூபாய் 61ஆயிரத்து 500 ரொக்க பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பு மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளது.  இதில் தஞ்சை மாநகராட்சி பகுதிகளுக்கு நிலை 1 ல் பிடிஒ பிரபாகரன், சிறப்பு வட்டாட்சியர்கள் ஜெயலெட்சுமி, ரகுராமன், நிலை 2 ல் பிடிஒ ரமேஷ், கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் செல்வம், சிறப்பு வட்டாட்சியர் ஜானகிராமன், நிலை 3இல் கும்பகோணம் சிறப்பு வட்டாட்சியர் இளமாருதி, ஒரத்தநாடு வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, டாஸ்மாக் உதவி மேலாளர் வெங்கடேஸ்வரன், நிலை 4இல் மாவட்ட கல்வி அலுவலர் அருணகிரி, கும்பகோணம் சிறப்பு வட்டாட்சியர் பிரேமாவதி, சிறப்பு வட்டாட்சியர் முருககுமார் ஆகியோருக்கு தலா இரண்டு போலீசாரும்,

Local Body Election | தஞ்சாவூரில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட 61 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளுக்கு நிலை 1இல் பிடிஒ சுவாமிநாதன், சிறப்பு வட்டாட்சியர் சுசிலா, வட்டார புள்ளியியல் ஆய்வாளர் ரமேஷ், நிலை 2இல் அண்மாப்பேட்டை பிடிஒ அண்ணாதுரை, சிறப்பு வட்டாட்சியர் சித்ரா, கும்பகோணம் ஈஎஸ்ஒ கார்த்திகேயன், நிலை 3இல் சிறப்பு வட்டாட்சியர் திருமால், பிடிஒ சுதா, வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், நிலை 4இல் பிடிஒக்கள்  ராஜூ, பூங்குழலி, சிறப்பு வட்டாட்சியர் வெங்கடாச்சலம், பட்டுக்கோட்டை நகராட்சி பகுதிகளுக்கு சிறப்பு வட்டாட்சியர்கள் சாந்தகுமார், தாரனிகா, பிடிஒ கிருஷ்ணமூர்த்தி, அதிராம்பட்டிணம் நகராட்சி பகுதிக்கு வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன், பிடிஒ தவமணி, சிறப்பு வட்டாட்சியர் செந்தில்குமார் என தேர்தல் பறக்கும் படையினராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தலா இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Local Body Election | தஞ்சாவூரில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட 61 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

நகர்புற உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் அமலக்கு வந்துள்ள நிலையில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை, கொண்டிராஜபாளையம்  அருகே பறக்கும் படை அலுவலர் ரமேஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசன், திருநாவுக்கரசு ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூபாய் 61ஆயிரத்து 500 ரொக்க பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், தஞ்சையை சேர்ந்த கெவின் ஜார்ஜ் என்பதும், வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இருப்பினும் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் பறக்கும் படை அலுவலர்கள் 61 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து அவர்கள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 87 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நகர்ப்புற  உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கியது. தஞ்சாவூர்  மாவட்டத்தில் ஜனவரி 28 ஆம் தேதி யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஜனவரி 29 ஆம் தேதி தஞ்சாவூர் மாநகராட்சியில் 2 பேரும், அதிராம்பட்டினம் நகராட்சியில் ஒருவரும் என மொத்தம் 3 வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Local Body Election | தஞ்சாவூரில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட 61 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

இதை அடுத்து, ஜன.31 ந்தேதி  தஞ்சாவூர் மாநகராட்சியில் 3 பேரும், கும்பகோணம் மாநகராட்சியில்  ஒருவரும், பட்டுக்கோட்டை நகராட்சியில் ஒருவரும், பேரூராட்சிகளில் 44 பேரும் என மொத்தம் 49 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில்,  தஞ்சாவூர் மாநகராட்சியில் 10 பேரும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 5 பேரும், பேரூராட்சிகளில் 20 பேரும் என மொத்தம் 35 பேர்  மனு தாக்கல் செய்தனர். மாவட்டத்தில்  இதுவரை தஞ்சாவூர் மாநகராட்சியில் 15 பேரும், கும்பகோணம் மாநகராட்சியில் ஒருவரும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 6 பேரும், அதிராம்பட்டினம் நகராட்சியில் ஒருவரும், பேரூராட்சிகளில் 64 பேரும் என மொத்தம் 87 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget